rp

Blogging Tips 2017

விடுப்பு-உயர்கல்விக்கான விடுப்பு

விடுப்பு-தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு

விடுப்பு-குடும்பக்கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு

விடுப்பு-ஈடுசெய் விடுப்பு

விடுப்பு-கருச்சிதைவு அல்லது கரு நீக்குதலுக்கான விடுப்பு

விடுப்பு-தற்செயல் விடுப்பு

விடுப்பு-வரையறுக்கப்பட்ட விடுப்பு(மத சார்பு விடுப்பு நாட்கள்)

விடுப்பு-விபத்து விடுப்பு

விடுப்பு-மருத்துவ விடுப்பு

 

விடுப்பு-ஒப்படைப்பு விடுப்பு

விடுப்பு-ஊதியமில்லா விடுப்பு

விடுப்பு தொடர்பான பிற விதிகள்

அரசு ஊழியருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகள்


25 பேர் உள்ள சத்துணவு மையங்கள் இணைப்பு : காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கை

ஈரோடு: அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மாவட்ட சமூக நலத்துறை சார்பிலும், 3,500க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், அந்தந்த யூனியன் மேற்பார்வையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கண்காணிப்பிலும் உள்ளன.

தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு

சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை

பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

குழந்தைகளுடன் ஜெயலட்சுமி டீச்சர்Return to frontpage
பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் ஜெயலட்சுமி டீச்சர்

மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது

மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது

click here to download the dee proceeding of workshop for 32  AEEOs on 24.09.2013 at chennai

சொல்லித் தாருங்கள்...


அண்மைக்காலமாக, நாம் அடிக்கடி படிக்கும் செய்தி, பள்ளிக் குழந்தைகள் கிணற்றில் அல்லது ஏரியில் விழுந்து இறந்தனர் என்பதாக இருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு இடங்களில் இளம் சிறார்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் பதினைந்துக்கும் மேல். பள்ளி விடுமுறை நாள்களில் இச் சிறுவர்கள் மழைநீர் குட்டை, குளங்களில் விளையாடப் போய், நீரில் மூழ்கி இறக்கின்றனர். தமிழகம் முழுவதும் இவ்வாறு நீரில் மூழ்கி இறக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவர்கள் நீச்சல் பழகியிருக்கவில்லை என்பதுதான் இந்த மரணங்களுக்கு முதற்காரணம்.

பகுதி நேர ஆசிரியருக்கு செப்டம்பர் மாத சம்பளம் குறைப்பா?

உங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க


Windows க்கான Google உள்ளீட்டு கருவி என்பது ஒரு உள்ளீட்டு முறை திருத்தியாகும். இது லத்தீன் (ஆங்கிலம் / QWERTY) விசைப்பலகையைப் பயன்படுத்தி, ஆதரிக்கப்படும் எந்த மொழிகளிலும் உரையை உள்ளிட பயனர்களை அனுமதிக்கிறது. லத்தீன் எழுத்துகளைப் பயன்படுத்தி, ஒரு சொல்லை அதன் ஒலிப்பு முறையில் பயனர்கள் தட்டச்சு செய்ய முடியும். அந்தச் சொல்லை அந்த மொழிக்கு ஏற்றவாறு Windows க்கான Google உள்ளீட்டு கருவி மாற்றும். ஒலிபெயர்ப்பு, IME மற்றும் ஆன்-ஸ்கிரீன் விசைப்பலகைகள் உள்ளிட்ட உள்ளீட்டு கருவிகள் கிடைக்கின்றன.
Windows க்கான Google உள்ளீட்டு கருவி தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது: தமிழ், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஹீப்ரூ, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளம், ஒரியா, பஞ்சாபி, ரஷ்யன், சமஸ்கிருதம், செர்பியன், சிங்களம், அம்ஹரிக், அரபிக், பெர்சியன், கிரேக்கம், திக்ரின்யா மற்றும் உருது.

அங்கன் வாடி குழந்தைகளுக்கு நீதிக்கதைகள்-தமிழக அரசு அறிவிப்பு


நீண்ட நாளாக பள்ளிக்குவராத மாணவர்களை வரவழைக்கவேண்டும்-தொடக்க கல்வித்துறை உத்திரவு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து, தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை


பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் தடுப்பதற்கு, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில செயற்குழுக்கூட்டம் -அழைப்புகடித நகல்

Photo

பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும்

இரட்டைப்பட்ட வழக்கு. 26.9.2013 அன்று ஒத்தி வைப்பு

இன்று(20.9.2013) முதல் அமர்வில்
விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம்
சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள்
வாதிட்டார். அவரது வாதம்
காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல்
1.15வரை தொடர்ந்தது. அதன்பின் நீதியரசர்கள்
இவ்வழக்கை 26.9.2013
அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர்.
எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013,
வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை

Return to frontpageதற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம்.

புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

Return to frontpageகோடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருத்தியை உடல் பரிசோதனைக்காக சோதித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய வசந்த காலத்தில் அவளைப் பரிசோதித்த மருத்துவமனையிலிருந்து வந்த குறிப்பு "படிப்பில் கெட்டிக்காரி; ஆனால் வகுப்பில் அதிகம் பேசுவதில்லை" என்று தெரிவித்தது.

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் - கட்டுரை


வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம்.

தவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்

தமிழகத்தில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 2002ம் ஆண்டுமுதல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள், வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவு ம் பிற்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்டது. இவர்கள், தங்களை பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றக்கோரி, 2010ல் கல்வி துறை செயலராக இருந்த சபீதாவிடம் கோரிக்கை வைத்தனர்.இவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி, 119 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 146 பேருக்கு கல்வித்துறைக்கு மாறுதல் பெறுவதற்கான (அரசாணைஎண்: 86) உத்தரவை பிறப்பித்தார்.

இரட்டைப் பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய
முதலாவது அமர்வில், வழக்குகள் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.36ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரட்டை வழக்கு சார்பான அனைத்து வழக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி மன்ற தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சார்பாக ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு வழ்க்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.இன்று வழக்கு விசாரணைக்கு வராத பட்சத்தில் வரும் திங்கள் அன்று நிச்சயமாக வரும்.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள,
2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளைவெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க

டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்-ஆசிரியர் தேர்வு வாரியம்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து,
கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைபடி ஊயர்வு... மத்தியஅரசு ஒப்புதல்.


மத்திய அரசு, அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ந் தேதி முதல் 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி-முதல்வர் அறிவிப்பு

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு சாப்பிட்டும் எடை குறைவாக உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினமும் சூடாக சமைத்த அரிசி சாதத்துடன், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது.

இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?

ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால், திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின், கல்வித்தரம் உயர வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஆண்டு, செப்டம்பரில், புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கும் குறைவாக உள்ள, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள், அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரியில், கல்வி, கற்பிப்பு, நூலகம், மாணவர் சங்கம் போன்றவற்றிற்கு, எந்த கட்டணமும் கட்ட தேவையில்லை" என குறிப்பிடப்பட்டது.

பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"

பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு





வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்

புகார்கள் குறைகள் தெர்விக்கும் மக்களுக்கு 2 மாதத்தில் பதில் தர தமிழக அரசு உத்திரவு


தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 1 தேர்வின் முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு, அக்டோபர் 25, 26, மற்றும் 27ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடைபெறவிருந்ததால் இந்த மாற்றம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு

"பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம் வழங்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

அரசு முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் கண்ணன் கோவிந்தராஜ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
இந்தியா மதசார்பற்ற நாடு. மத ரீதியான சின்னங்களை அரசின் அடையாளமாக வைத்துச் கொள்ளக் கூடாது. ஆனால் தமிழக அரசின் லட்சினை (முத்திரை)யில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் கீழே தேசிய கொடி 2 ஆக பிளவுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மதசார்பற்ற நாட்டில் இதுபோல மதத்தின் சின்னத்தை அரசின் முத்திரையாக வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தமிழக அரசு முத்திரையில் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அகற்றவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் தேசிய கொடியை முத்திரையில் இடம் பெற செய்யவும் அரசுக்கு உத்தர விட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

DEE - DENGUE & OTHER VIRUS FEVER - TAKING PREVENTION MEASURES REG PROC CLICK HERE...

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை

இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல் பட்டியலிடப்பட்டது. நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு இன்று மாலைக்குள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய மதியம் 3மணிவரை வழக்கு பட்டியல் வரிசை எண்.26 உடன் முடித்து சில அலுவல் காரணமாக தலைமை நீதிபதி சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று விசாரணை முடியுமா - இரட்டைப்பட்டம்,வழக்கு வரிசை எண் - 34 ......

இன்று - இரட்டைப்பட்டம் விசாரணை,வழக்கு வரிசை எண் - 34 .இன்று வழக்கு விசாரணை முற்பகல் / பிற்பகலில் கண்டிப்பாக வரும். மேலும் மூன்று வருட
வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை இன்று (19.09.2013) தொடர்கிறதுநமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.இன்று இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்

பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம்.
இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசுத் துறையில், புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள், 10 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட, சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடத்திட்டம் ( Dir. of School Education - Common Syllabus for II Term for Class IX )


COMMON SYLLABUS

CLASS IX

 II TERM

Subject    
English    
Tamil    
Mathematics English Version Tamil Version
Science English Version Tamil Version
Social Science English Version Tamil Version

I TERM

Subject    
English    
Tamil    
Mathematics English Version Tamil Version
Science English Version Tamil Version
Social Science English Version Tamil Version

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி !


முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40 பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற  வினாக்களை மதிப்பிடலாம் என்று கூறிய  யோசனையினை நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்...!


இன்று ( 18.9.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது.நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.

SSA நிதி 1500 கோடி ரூபாயாக குறைப்பு -மத்திய அரசு நடவடிக்கை:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு. பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை.

மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில்,அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் படி குறிப்பிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சுமார்1.50லட்சம் அஞ்சல் துறை அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுன்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் நிலையங்களே பெற்று சம்பந்தப்பட்ட துறைகளு க்கு விரைவாக அனுப்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவி த்தார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.

தமிழகத்தில் 36,813 அரசு பள்ளிகளும், 8,395 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த, இரு தரப்பு பள்ளிகளிலும், புத்தக பை, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட 14 வகையான, இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி


நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு மேற்கொள்ளப் படும். கடந்த, 2008 ஏப்., 1 க்கு பிறகு, 2013 ஏப்., 1ல் வரி மறு சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, தமிழக அரசு வரி மறு சீராய்வை அனுமதிக்கவில்லை.

பள்ளிக் கல்வியில் அரசின் அக்கறை தேவை.- எஸ். முத்துக்குமரன்(முன்னாள் துணை வேந்தர்)

ஆசிரியர் பணி என்பது புனிதமானது. ஆனால் இன்று ஆசிரியர் பணி என்பது புனிதமானது. ஆனால் இன்று கொச்சைப்படுத்திப் பேசப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி படிக்க வைக்க வேண்டும்? வகுப்பறையில் மாணவர்களை கண்டித்து , தண்டனை கொடுப்பது மாணவர்களின் நலனுக்கு என்பது உங்கள் உரிமை. இதை மாணவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதற்காக சட்டங்கள் இயற்றி இருப்பதை நான் ஒப்புக் கொள்ளவது அல்ல. இப்போதுள்ள அரசு இதற்கு ஒத்து போகிறது. இதற்கு பள்ளிக் கல்வியை காரணமாக சொல்லக்கூடாது.

பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும் தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் பல புதிய நடைமுறைகள் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத் தனித்தேர்வுகளில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்துங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்தும்படி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்

தொடக்கக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2013 முதல் 08.10.2013 முடிய JOY OF GIVING WEEK கொண்டாட இயக்குநர் உத்தரவு

DEE - JOY OF GIVING WEEK CELEBRATION FROM 02.10.2013 TO 08.10.2013 REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - அங்கரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2013 வரை நீட்டித்து உத்தரவு

DSE - 2013-14 ACADEMIC YEAR ADMISSION UPTO PLUS 1 EXTENDED TO 30.09.2013 IN RECOGNISED HIGH / HIGHER SEC SCHOOLS REG PROC CLICK HERE...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 

பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற ஆணை நகல்

GO.15 SCHOOL EDUCATION (J) DEPT DATED.28.03.2013 & HIGH COURT JUDGEMENT ORDER CLICK HERE...

3rd Incentive Judgement

M.Phil stay Order available 

M.Phil stay Vakkalath available

 

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் சர்வேயில் அதிர்ச்சி தகவல் /தினகரன்-17.09.2013/


தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் இவர்களை விடுவித்தாலும், திரும்பவும் வேலைக்கு செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த கூடாது. இவர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மெக்கானிக் ஷாப்புகள், மளிகை கடைகள், குளிர்பான நிறுவனங்கள், ஓட்டல்கள், நடமாடும் தள்ளு வண்டி கடைகள் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர்களை பல உரிமையாளர்கள் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுத்தால் போதும் என்பதால் பலர், சட்டம் குறித்து கவலைப்படாமல் உள்ளனர். பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள், படிப்பு சரியாக வராத மாணவர்கள், வீட்டில் படிப்பதற்கான சூழ்நிலை இல்லாதவர்கள் சிறு வயதிலேயே வேலைக்கு சேர்ந்து பணத்தை பார்த்ததும் படிக்கும் எண்ணம் இல்லாமல் அதே சூழலில் சிக்கி விடுகின்றனர். இவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அடை யாளம் கண்டு மீட்டு பள்ளி யில் சேர்க்கிறது. என்றாலும் திரும்பவும் வேலைக்கு வந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல குழந்தைகளாக மாறும் வாய்ப்பு குறைகிறது. இந்த அவலநிலையை தடுக்க நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் 1.32 கோடி பி.எப்., கணக்குகள் ஆன்-லைன்


தமிழகத்தில், 1.32 கோடி பி.எப்., சந்தாதாரர்கள், தங்களது கணக்கு இருப்பை, ஆன்-லைனில் அறிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள, பி.எப்., சந்தாதாரர்கள், கணக்கு இருப்பை, ஆன்-லைனில் அறிந்து கொள்ளும் வசதி, கடந்த வாரம் துவங்கப்பட்டது. இதற்கு, மண்டல வாரியாக, இணையதள முகவரி வெளியிடப்பட்டு உள்ளது.

இணையதளங்களில்
தமிழக சந்தாதாரர்கள், www.epfochennai.tn.nic.in, www.epfotamilnadu.tn.nic.in, ஆகிய முகவரிகளில் அறியலாம். நடப்பு தேதி வரையிலான இருப்பை அறிந்து கொள்ள, இந்த இணையதளங்களில் உள்ள "பாஸ் புக்' என்ற பகுதியை அணுகலாம்.

10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு, அரசுத் தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின்

TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
Notification Current Status


Departmental Examinations December 2013


Tamil | English
Online up to
15 Oct 2013

அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை: சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு நேற்று ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளி வழக்கு தொடர்ந்தார்.

அரசு பள்ளிகளில் காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோரின் சிபாரிசினால் நிரப்பப்பட்டதாக கூறப்பட்டது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் தாமதம்

பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், கட்டட கலை உள்ளிட்ட பாடங்களில், 16,549 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், வாரத்திற்கு, மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு, அரை நாள் வீதம் பணிபுரிய வேண்டும். இது, அரசு விதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இவ்விதியை, எந்த பள்ளிகளிலும் பின்பற்றுவதில்லை என, பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

குழு கலந்தாய்விற்கு கொடுக்கப்படும் தலைப்புகள் எந்த மாதிரியானவை?

எம்.பி.ஏ., போன்ற படிப்புகளில் சேர மற்றும் பணிக்கான பல நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் தவறாது இடம்பெறும் அம்சம் குழு கலந்தாய்வு. இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ஜி.டி., என்று கூறப்படுகிறது.

இந்தக் குழு கலந்தாய்வை வெற்றிகரமாக மாற்றுவது அவரவர் திறமை மற்றும் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. இதை வெற்றிகரமாக நிறைவு செய்தால்தான், நமக்கான அடுத்தகட்ட வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியும் என்பதால், இதற்கான பயிற்சியில் பலர் ஈடுபடுகின்றனர்.

10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், www.dge.tn.nic.in, என்ற இணையதளம் வழியாக, இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முறைகளை எளிமைப்படுத்த திட்டம்

வினாத்தாளில் பிழைகள் இருந்தால் அதற்கு வாரியம் தான் பொறுப்பு

தேர்வுத் துறையில் அதிரடி மாற்றம்: இனி மதிப்பெண் முகாமில் இருந்து மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பவும், மதிப்பீடு முடிந்த 5வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிப்பெண் முகாம்களில் ஆசிரியர்கள் இனி மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பினால் போதுமென்றும், பேனா மூலம் எழுதி சீல் வைக்க அவசியமில்லை எனவும், மதிப்பீடு பணி முடிந்த ஐந்தாவது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்வில் மதிப்பெண் முகாம் பட்டியலில் பார்கோடு முறை அமுல்படுத்தப்படுகிறது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் பணி
மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மாணவன் எனும் மூலதனம் - தி.ஹிந்து தமிழ் நாளிதழில் கட்டுரை

Return to frontpage 


பள்ளியில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், உணவைப் பகிர்ந்துண்ணவும், மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த செஷனுக்கு மனதை தயார் செய்வதற்கேற்ற வகையிலும்தான் கால அட்டவணையில் உணவு இடைவேளைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் அது ஆசிரியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்த துப்புரவு பணியாளர்கள் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து, பணிகள் ஒதுக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: விரைவில் துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுத, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்" திட்டத்தின் கீழ், வரும், 16, 17ம் தேதிகளில், www.tndge.in என்ற இணையதளம் வழியாக, பதிவு செய்யலாம். இணையதளத்தில், புகைப்படத்தை, "அப்லோட்" செய்ய வேண்டும்.

தவறுகளை தடுக்க இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அவசியம் தேவை குமுறும் கல்வித்துறை பணியாளர்கள்

அரசின் அனைத்து துறைகளிலும், செயலர் பதவியில் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து உள்ள அதிகாரிகள் உள்ளனர்.இதே போன்று மற்ற துறை இயக்குனர், தலைவர் பதவியிலும் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளே இடம் பெறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும், முதுகலையுடன் பி.எட், எம்.எட்., படித்த ஆசிரியர்கள்,நேரடி தேர்வு மூலமும் இயக்குனர் பதவி நிரப்பப்படுகிறது

செப்டம்பர் 16 முதல் தமிழில் ஹிந்து!

ஹிந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு வரலாறு உண்டு. அது மிகவும் வெற்றிகரமரமான வரலாறு. 1878-ல் வாரப்பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது த ஹிந்து. அப்போது எண்பதே எண்பது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டன. ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கித்தான் முதல் பிரதி அச்சடித்தார்கள். 1883-ல் வாரம் மூன்றுமுறை வெளிவந்தது. 1889-ல் மாலை தினசரியாக மாறியது. இன்று அது சராசரியாக தினமும் 14 லட்சம் பிரதிகள் அச்சாவதாகச் சொல்கிறார்கள்.

HEALTH === சுகமான வாழ்விற்கு இவையாவும் அவசியமே




ஊதிப் பெருத்த உடம்புக்குள் 
ஒன்றா இரண்டா வியாதிகள்
எந்நாளும் மருந்தை உண்கின்றோம்
எது தான் இங்கே மாறியது ....!!!!!

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியக்குழுவினால் பாதிப்பே கட்டுரை துண்டறிக்கை வடிவில் திமலை கிளை சார்பாக அச்சடித்து விநியோகம்

எல்லாவகை ஆசிரியர்களுக்கும் பாதிப்பே

நமது இயக்க மாநிலத்துணைத்தலைவர் திரு கே,பி,ரக்‌ஷித்,அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கம் துண்டறிக்கையாக பிற ஆசிரியர் இயக்கங்களும் அச்சிட்டு தனது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறது.

பெருமை கொள்வோம்

அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இனிய ஓனம் திருநாள் வாழ்த்துக்கள்

TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு

கல்வி அலுவலகத்தை ஆக்கிரமித்த ஆசிரியர்கள் ஒரு அறைக்கு இரு துறைகள் போட்டி

மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில், உள்ள பயிற்சி அறைக்குள், ரெகுலர் சி.இ.ஓ., அனுமதியின்றி, எஸ்.எஸ்.ஏ., திட்ட
ஆசிரியர்கள் நேற்று புகுந்து ஆக்கிரமித்தனர்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலம் மராமத்து செய்யப்பட்ட போது, ரெகுலர் சி.இ.ஓ., அலுவலகம், இதே வளாகத்தில் இருந்த, அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய அறைக்கு மாற்றப்பட்டது. சி.இ.ஒ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கட்டடத்திற்கு அந்த அலுவலகம் கடந்த வாரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.

"நெட்" தேர்வு குளறுபடி: விவரம் வெளியிட மாணவர்கள் கோரிக்கை

"நெட்" தேர்வு குளறுபடி: விவரம் வெளியிட மாணவர்கள் கோரிக்கை

சென்னை: "நெட்" தகுதி தேர்வில் நடந்த குளறுபடிக்கு, யு.ஜி.சி.,யின் தெளிவில்லாத விளம்பரமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, யு.ஜி.சி., மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வான, "நெட்"டை, ஜூன், டிசம்பர் ஆகிய, இரு மாதங்களில் நடத்துகிறது. மாநில அளவில்

தொழிலாசிரியர் பயிற்சிக்கு அரசு தடை : பதிவுதாரர்கள் தவிப்பு.

கடந்த 2007 க்குப் பின், தொழிலாசிரியர் பயிற்சி வழங்கப்படாததால், 8,000க்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தையல்,
ஓவியம், விவசாய படிப்புகளில் "டிப்ளமோ' படித்த பின், அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சான்றிதழ்

மாணவர்களிடம் பரவும் புதுவித "போதை" பழக்கம்

திண்டுக்கல்லில் சில கல்லூரி மாணவர்களிடம் புதுவித போதை பழக்கம் பரவுகிறது.
சிறுவர்களும், மாணவர்களும் ஒயிட்னர், தின்னர் போன்றவற்றை போதை பொருட்களாக பயன்படுத்தினர். சிறுவர்கள் நல அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து, சமீபத்தில் ஒயிட்னர், தின்னர் பயன்பாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்தது.

திறந்தநிலை பல்கலை பி.எட்.படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட்.சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த படிப்பில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அக்டோபர் 27-ல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலும்,கல்வி மையங்களிலும் ஆக்டோபர் 3 -ம் தேதி வரை விநியோகிக்கப்டும்.

"நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்'

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை (16ம் தேதி) ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என தவறான தகவல் பரப்பபட்டது. இந்த தகவலால் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் நாளை (16ம் தேதி) மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்,  மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். வழக்கமான அனைத்து பணிகளும் பள்ளிகளில் நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு மட்டுமே நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசியர்களுக்கான M.phil ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு மற்றும் ஆசியர்களை கோர்டுக்கு அலைய விடக்கூடாது என ஐகோர்ட் கிளை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர்
பணியிடம், மிகவும் முக்கியமானது. இளநிலை உதவியாளர்களுக்கு மேல் நிலையிலும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு, கீழ் நிலையிலும், உதவியாளர்கள் பணி புரிகின்றனர். கோப்புகளை உருவாக்குவது, அதை பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை, உதவியாளர்கள் செய்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும், நேரடியாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பெரும்பாலும், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர்.

இவரும் ஆசிரியர் தான்!

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி...  இப்படி நம்மால் தூக்கி எறியப்படும் பொருள்களிலிருந்து குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்கி, அதனை பள்ளிக் குழந்தைகளி டம் பிரபலப்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி  முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா

தாய்மொழியில் படிக்கிறார்கள், தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

                            

மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி வரும் திருவள்ளுவர்  தமிழ் உயர்நிலைப்பள்ளியில்  கடந்த பத்து ஆண்டுகளாக  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

குடிசைப்பகுதி மாணவர்களுக்கு அரசின் உதவி இல்லாமலேயே இலவசமாகக் கல்வி, மதிய உணவு, இதர பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது காரைக்காலில் இயங்கி வரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி.

22 பேருடன் தொடங்கிய இந்தப் பள்ளியில் இப்போது  250 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும்  100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து மூடல்: பள்ளிகள் எண்ணிக்கை 700ல் இருந்து 453 ஆக சரிந்தது

மாணவ, மாணவியர் இல்லாததால், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படுவது, தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 700 ஆக இருந்த, தனியார் பள்ளிகள் எண்ணிக்கை, தற்போது, 453 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

web stats

web stats