Sunday, 15 September 2013

கல்வி அலுவலகத்தை ஆக்கிரமித்த ஆசிரியர்கள் ஒரு அறைக்கு இரு துறைகள் போட்டி

மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில், உள்ள பயிற்சி அறைக்குள், ரெகுலர் சி.இ.ஓ., அனுமதியின்றி, எஸ்.எஸ்.ஏ., திட்ட
ஆசிரியர்கள் நேற்று புகுந்து ஆக்கிரமித்தனர்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலம் மராமத்து செய்யப்பட்ட போது, ரெகுலர் சி.இ.ஓ., அலுவலகம், இதே வளாகத்தில் இருந்த, அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய அறைக்கு மாற்றப்பட்டது. சி.இ.ஒ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கட்டடத்திற்கு அந்த அலுவலகம் கடந்த வாரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்பின், எஸ்.எஸ்.ஏ., திட்ட அறையை, தல்லாகுளம் கமலா தெருவில் இயங்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை கொண்டுவர ரெகுலர் சி.இ.ஓ., நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு எஸ்.எஸ்.ஏ., அலுவலகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அறையை ரெகுலர் சி.இ.ஓ., ஒப்படைக்காத நிலையில், எஸ்.எஸ்.ஏ., அலுவலக ஆசிரியர் பயிற்றுனர்கள், அந்த அறைக்குள் திடீரென நுழைந்து, ஆக்கிரமித்தனர்.
சி.இ.ஓ., அமுதவல்லி கூறியதாவது: அந்த பயிற்சி அறையில் தற்போது அதிக எண்ணிக்கையில் பயிற்சிகள் நடப்பதில்லை. அனைத்து அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் இருந்தால் நல்லது என்று கருதிதான், வெளியே இயங்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை இங்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, என்றார்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ., பார்வதி கூறியதாவது:பல்வேறு பயிற்சிகள் இந்த அறையில் நடக்கின்றன. ரெகுலர் சி.இ.ஓ., பராமரிப்பு பணி முடிந்த பின் மீண்டும் எங்களிடம் அந்த அறையை
ஒப்படைக்கப்படவில்லை. அதில், ரூ.பல லட்சம் மதிப்பில் "ஸ்மார்ட் போர்டு கிளாஸ்' பொருட்கள் உள்ளன. தேவையில்லாமல், வேறு இடத்தில் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை இங்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது, என்றார்.


No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats