rp

Blogging Tips 2017

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல் இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.
ஒரு செயலில் ஆர்வம் இருக்கும்பொழுது தான் கவனம் ஏற்படும். கவனம்

திருவண்னாமலை முதன்மை கல்வி அலுவலர் அதிரடி தொடர்கிறது


அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் {(School grant) தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/)}வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் – வழிகாட்டுதல் குறிப்புகள் :

2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School grant) வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் – வழிகாட்டுதல் குறிப்புகள் :

  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை (Infrastructure) மேம்படுத்த பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இம்மானியம் வழங்க மாவட்ட வாரியாக  2013-14ம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் குறைவான மாணவர்கள்பயிலும் பள்ளீகள் மூடல்


பள்ளி செல்ல முடியாத குழந்தைகளுக்கு "பாதுகாவலர்" நியமன முறைஅமல்

போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால், பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி வழங்கும் நோக்கில், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில், "பாதுகாவலர்" - எஸ்கார்டு நியமன முறையை அமல்படுத்த, அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில், மாநிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம், சீருடை, மதிய உணவு என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருப்பினும், மாநிலத்தின் பல இடங்களில், பஸ், சாலை வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, வனங்கள், அதை சார்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசி, பழங்குடியின கிராமங்களில், வன விலங்கு அச்சுறுத்தல், போதிய சாலை மற்றும் போக்குவரத்து வசதியின்மை போன்ற பல காரணங்களால், அங்குள்ள பள்ளி வயதுடைய குழந்தைகளின், "பள்ளிக் கனவு" வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

மாணவர்கள் பாதுகாப்பாக பயிலநடவடிக்கை எடுக்க அரசுக்கு பெற்றோர்கள் வேண்டுகோள்

Current events

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி சதவிகிதம் சரிவு

சென்னை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் சரிந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாவட்ட கல்வி அதிகாரிகளையும், கல்வித்துறை, கேள்வி மேல் கேள்வி கேட்டு, குடைந்து எடுக்கிறது.
இதனால், சரியாக படிக்காத பிளஸ் 1 மாணவ, மாணவியரை, பிளஸ் 2 வகுப்பிற்கு அனுமதித்தால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என, ஆசிரியர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மிக குறைந்த மதிப்பெண்களை எடுத்த பிளஸ் 1 மாணவர்களை, தோல்வி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது

வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில மொழியறிவு அவசியம் -கல்லூரிக் கல்வி மண்டல துணை இயக்குநர் ஏ.ரவிசங்கர்

வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில மொழியறிவு அவசியம் என்ற நிலை உள்ளதால் மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தைக் கல்லூரியில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று கல்லூரிக் கல்வி மண்டல துணை இயக்குநர் ஏ.ரவிசங்கர் கூறினார்.
மேடவாக்கம் காயிதேமில்லத் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி தொடக்கநாள் விழாவில் அவர் மேலும் பேசியது:
இங்கு பயிலும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் ஏழை, நலிந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களாக உள்ளனர். 85 சதவீத மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களாக இருப்பதால் அவர்களது ஆங்கில மொழியறிவுத் திறன் குறைவாக இருக்கிறது என்பது பெருங்குறையல்ல.
அதை உரிய உரையாடல் பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும். பிரபல பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்களைவிட சாதாரண சிறிய நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்தான் மகத்தான சாதனைகள் நிகழ்த்தி வந்துள்ளனர் என்பதற்கு நானே சிறந்த உதாரணம் ஆகும்

நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது! – சுப்ரீம் கோர்ட் வேதனை! + அலசல்!!

படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும் நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை. ஆனால், மனிதப் பண்பும் நடத்தையும் சமூகத்தில் மரியாதைக்குரிய உயர்ந்த நிலையில் இருந்தன. இப்போது அந்த நிலைமை இல்லை. மனிதனை பண்படுத்தும் வகையில் நமது கல்வித் திட்டத்தில் உடனடியாக முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும்.” என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைப் பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா கல்வி நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து- SSA -மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

SPD - 2013-14 SG & MG RELEASED - INSTRUCTIONS / GUIDELINES & PROC CLICK HERE...

அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் மாணவர்களுக்கு உடல் திறன் கண்டறிய போட்டி தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்காக, 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த வேண்டும். குழு விளையாட்டு அல்லது தனிநபர் போட்டிகளில், மாணவர்களின் திறனை அறிந்து, அதை மேம்படுத்தும் வகையில், போட்டிகளை நடத்த வேண்டும். வேகமாக ஓடும் ஆற்றலை கண்டறிய, 50 மீட்டர் ஓட்டமும், அதிகமாக தாக்குப் பிடிக்கும் திறனை கண்டறிய, 600, 800 மீட்டர் ஓட்ட போட்டியும் நடத்த வேண்டும்.

தமிழக அரசின் நலத்திட்ட அனைத்தும், மாணவர்களைச் சென்றடைந்ததா, மாணவர் சேர்க்கை நிலவரம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பல இணை இயக்குனர்கள்,ஆய்வு

தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச புத்தகத்தில் துவங்கி, "லேப்-டாப்" வரை, 14 வரையான பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது இருந்தே, பல்வேறு பொருட்கள், ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகின்றன.

2012-2013 மற்றும் 2013- 2014 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத் திட்டங்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி துறை உத்தரவு

click here to download the DEE forms for No cost scheme for 2012-13 and 2013-14 in pdf
click here to download the DEE forms for No cost scheme for 2012-13 and 2013-14 in word

பெரும்பாலான மாவட்டங்களில் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை (06.07.2013) பள்ளி வேலை நாளாக அறிவிப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நாளை (06.07.2013)குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும்.

பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு பயிற்சி நாளன்று (நாளை ~06.07.2013) பள்ளி வேலை நாள்.

முழு நேர ஆசிரியர்களாக பணி வரன்முறை செய்யுங்கள் பகுதி நேர சிறப்பாசிரியர்களை

பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி வரன்முறை செய்ய வேண்டும் என போளூரில் நடந்த சங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களின் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். கலசபாக�கம் ஒன்றிய தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் செங்கம் ஒன்றிய தலைவர் சான்பாஷா கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் பற்றி பேசினார்.
கூட்டத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

9,900 ஐ.ஐ.டி., இடங்களுக்கு 14 ஆயிரம் பேர் போட்டி

சென்னை: ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு ஜெ.இ.இ., என்ற கூட்டு நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நுழைவு தேர்வு, "ஜெ.இ.இ., மெயின், அட்வான்ஸ்" என இரு கட்டங்களாக ஏப்ரல் மாதம் நடந்தது.
ஜெ.இ.இ., மெயின் தேர்வை, 13 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வு பெற்ற, 1.50 லட்சம் பேர், ஜூன் மாதம் நடந்த, ஜெ.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வில், நாடு முழுவதும், 21,110 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில், சென்னை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், 3,500 பேர் தேர்ச்சி பெற்றனர். ஜெ.இ.இ., நுழைவு தேர்வில், 21 ஆயிரம் மாணவர் தேர்வு பெற்ற நிலையில், "கட்-ஆப்&' மதிப்பெண் அடிப்படையில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.

திருமங்கலம் அருகே வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதி இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே டி.அரசப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் அரசப்பட்டி, வெயிலுகந்தாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். 10 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 2010ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் போதுமான கட்டிட வசதிகள் இல்லை.
இதனால் உயர்நிலைப்பள்ளியின் வகுப்புகள் அருகே துவக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றன. 10ம் வகுப்பு துவக்கப்பள்ளியிலும், 6, 8, 9ம் வகுப்புகள் துவக்கப்பள்ளியின் பழைய கட்டிடத்திலும், 7ம் வகுப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் செயல்படுகிறது.
போதுமான அளவுக்கு கட்டட வசதி இல்லாததால், பல நேரங்களில் மரத்தடியில்தான் வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அரசப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இட வசதி இல்லாததால், கிராமத்தின் அய்யனார் கோயில் அருகே காலியிடத்தில் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ராஷ்ட்ரியா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஒரு சிலர் முறைகேட்டில் ஈடுபடவே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அத்துடன் பணிகள் முடங்கி நின்று விட்டன. இதனால் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதுமான இடவசதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்த ஊராட்சி கட்டிடத்தில் 7ம் வகுப்பும், துவக்கப்பள்ளி கட்டிடத்தில் பிற வகுப்புகளும் இயங்குகின்றன. மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை’ என்றனர். இந்தப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் உடனடியாக கட்டித் தரவேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மழை பெய்தால் விடுப்பு
மாணவர்கள் மகேஸ்வரன், சரண்யா கூறுகையில், ‘‘கட்டிட வசதி இல்லாததால் மழை காலங்களில் 6 முதல் 9 வகுப்பு வரை விடுமுறை விடப்படுகிறது. 10ம் வகுப்பிற்கு மட்டும் துவக்கப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் எங்கள் கல்வி பாதிக்கிறது. மேலும், ஓட்டை உடைசல் கட்டிடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என அச்சத்துடன் படித்து வருகிறோம்,‘‘ என்றனர்.

சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை எண் பதிவு செய்ய வேண்டும்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்ட தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 ‘மத்திய அரசு பொது மக்களின் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு மூலம், சமூக பாதுகாப்பு திட்ட சம்பந்தமான அனைத்து வகையான நலதிட்டம் மற்றும் சலுகைகளையும் வழங்க திட்டமிட்டுள்
ளது. ஆதார் அட்டை கிடைக்க பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களும் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கும் போது, தங்களது ஆதார் அட்டை எண்ணை அதில் குறிப்பிடவேண்டும். ஏற்கனவே தபால்நிலையத்தில் சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்கள், அந்தந்த அஞ்சலகத்திற்கு சென்று தங்கள் ஆதார் அட்டை எண்ணை அதில் இணைத்து கொண்டு அரசு வழங்கும் நலதிட்டங் களையும் சலுகைகளையும் பெற்று பயனடையுமாறுகேட்டுக்கொள் கிறோம்“ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி, 2013 மே மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை பிரிவில் பி.லிட்.,(தமிழ்), பி.பி.எம்., முதுநிலை பிரிவில், எம்.ஏ., (தமிழ், எஜூகேஷன், சோஷியாலஜி, வரலாறு), எம். பி.ஏ., (பொது - செமஸ்டர் அன்ட் நான் செமஸ்டர், ஹியுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், 5 வருடம்), எம். எஸ்.சி., (விலங்கியல், சாப்ட்வேர் இன்ஜினியரிங்) பி.ஜி., டிப்ளமோ பிரிவில், பி.ஜி.டி. (ஹெச். ஆர். எம்., ஹெச்.ஏ.,), சான்றிதழ் பிரிவில் சுய உதவிக்குழு மேலாண்மைக்கான தேர்வு முடிவுகள், www.alagappauniversity.ac.in, என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதிதிராவிட மாணவருக்கு இலவச கல்வி: அரசாணையை அமல்படுத்த புது நடைமுறை

"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள், கல்லூரிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற அரசாணையை அமல்படுத்துவதில், ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை பின்பற்றுகிறது.
கடந்த ஆண்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, "அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் படிக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர், அனைத்து கட்டாய கல்வி கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை" என அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, டியூஷன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள் போன்றவற்றிற்கான கட்டணத்தை, கட்ட தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்

புதுடில்லி: "நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

உணவு பரிமாறும் போது மாணவியின் வாய்க்கு டேப் மன்னிப்பு கேட்டார் ஆசிரியர்

டோக்கியோ : உணவு பரிமாறும்போது, வாயையும், மூக்கையும் மூடிக் கொள்வதற்கான துணியை கொண்டு வராததால், 7 வயது மாணவியின் வாயை டேப் போட்டு ஒட்டினார் ஆசிரியர். ஜப்பான் பள்ளிகளில் வித்தியாசமான நடைமுறை உள்ளது. அதாவது, மாணவ, மாணவிகள் அனைவரும் மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு வரவேண்டும். அதை ஏதாவது சில மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிமாறுவார்கள். அதை பரிமாறும்போது, அந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து கிருமிகள் மற்றவர்களுக்கு பரவிக் விடக்கூடாது என்பதற்காக, பரிமாறும் மாணவ, மாணவிகள் வாய், மூக்கை மூடிக் கொண்டிருக்கும் வகையிலான துணியை கட்டிக் கொள்ள வேண்டும்

பள்ளி மாணவருக்கு 9.14 லட்சம் பஸ் பாஸ் வினியோகம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை, போக்குவரத்து கழகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை, 9.14 லட்சத்திற்கும் மேற்பட்ட பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன.
போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, ஏற்கனவே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்ட பட்டியலில், தேவையான திருத்தம் செய்யப்பட்டு, கழகங்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில், பள்ளி மாணவருக்கான பஸ் பாஸ் தயாரித்து, வழங்கும் பணி, நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக, இப்பணியை, போக்குவரத்து கழகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் இருந்து, 1.49 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்டன. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் பாஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதை, மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்தனர்.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 1.10 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை போக்குவரத்து கழகம் சார்பில், 1.50 லட்சம்; கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில், 1.20 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்தில் இருந்து, 2.44 லட்சம் பஸ் பாஸ் வழங்க வேண்டும். இதில், 1.40 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து, 95 ஆயிரம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: பின்பற்றாத பள்ளிகள்

மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.இ., எனப்படும் "அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் இன்னும் இச்சட்டத்தில் உள்ள விதிகள், பள்ளிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இச்சட்டம், நாட்டில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், கட்டாய அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. 2013 ஏப்., கணக்கின் படி, நாட்டில் உள்ள பள்ளிகளில், 11 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. 20 சதவீத பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி இல்லை. 74 சதவீத பள்ளிகளில் நூலகங்கள் கிடையாது என சி.ஆர்.ஒய்., என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பத்து நாட்கள் குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும். வழக்கமாக தொடக்கக் கல்வித்துறையை பொருத்தவரையில் இந்த குறுவள மைய பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கருதப்படும் அந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்.

CLICK HERE TO DOWNLOAD CTET HALL TICKETS

அகஇ - ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உரிய அரசு செலவு கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு.

SPD - REIMBURSEMENT OF HM/BT/TEACHERS SALARY REG - PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2012 - 13ஆம் AANTU டாக்டர் இராதகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல், விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DSE - 2012-13 DR.RADHAKRISHNAN STATE AWARD - GUIDELINES FOR TRs SELECTION, FORMATION OF DISTRICT LEVEL SELECTION COMMITTEE REG PROC CLICK HERE...


DEE - 2012-13 DR.RADHAKRISHNAN STATE AWARD - CONSTITUTE OF DISTRICT LEVEL SELECTION COMMITTEE & PROPOSALS CALLED REG PROC CLICK HERE...

டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்" இம்மாத இறுதிக்குள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வாணைய வட்டாரங்கள்

ஆகஸ்ட் மாதம் நடக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,), 6.85 லட்சம் பேர் எழுத உள்ளனர். டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது.

அரசு, தனியார் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது, அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆகஸ்டில் நடக்கிறது. 

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

AWARD OF CASH INCENTIVE TO THE GOVT EMPLOYEES WHO HAVE RENDERED 25 YEARS UNBLEMISHED SERVICE - DELEGATION OF POWERS REG ORDER CLICK HERE...

சுயநிதி அரசு பிடிஎஸ் கட்டணம் ரூ.15,000 உயர்வு


மிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.எஸ். (முதுநிலை பல் மருத்துவப் படிப்பு) அரசு ஒதுக்கீட்டு இடத்தைப் பொருத்தவரை "பாராகிளினிக்கல்' பிரிவு

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு 8000 புதிய வங்கி கிளை


நடப்பாண்டில் திறப்புதுடெல்லி : நடப்பாண்டில் வங்கிகள் புதிதாக 8000 கிளைகளை திறக்கவுள்ளன. மேலும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார். டெல்லியில் நேற்று, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயக் கடன், சிறு தொழில் கடன், கல்வி மற்றும் வீட்டு கடன்கள் வளர்ச்சியையும், நிதிநிலைமைகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தொடக்கக் கல்வி - விருது - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் "கல்பனா சாவ்லா விருது 2013" விருதுக்கான விண்ணபங்களை கோருதல் சார்பு

DEE - KALPANA CHAWLA AWARD 2013 - PROPOSALS CALLED REG PROC CLICK HERE...

நெய்வேலியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது பொது நல வழக்கு தொடர முடிவு: மாணவர்களை ஊர்வலத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு

பள்ளி நேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேப்போன்று, கல்வியின் அவசியம், பொது சுகாதாரம், போக்குவரத்து விதிமுறை, ரத்ததானம், கண் தானம், காச நோய் ஒழிப்பு, எய்ட்ஸ் பாதிப்பு, பெண்களுக்கு சம உரிமை, மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பொது பிரச்னைகளின் மக்களின் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதற்காக ஒவ்வொரு துறைக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அந்தந்த துறை அதிகாரிகள், களப் பணியாளர்கள் மக்களை சந்தித்து ஒவ்வொரு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல், எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலும் அருகாமையில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து "சம்பிரதாயத்திற்காக' முக்கிய வீதிகளில் ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கிடும் நோக்கில், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தருமபுரி மாவட்டம்,அரூர் வட்டாரக்கிளை யின் சார்பாக ஓய்வுபெற்ற.மற்றொம்துறைமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.பொதுச்செயலர்.திருமிகு செ.முத்துசாமிExMLC,கலந்து கொண்டு ஆசிரியர்களூக்கு பொன்னாடை போர்த்தி இயக்கப்பேருரை-அழைப்பிதழ்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - மாநில தகவல் தொகுப்பு மையம் மூலம் கணக்குத்தாள் தயாரித்து வழங்குவது குறித்த மாநில தகவல் மையத்தின் விளக்கங்கள்

TO DOWNLOAD CONTRIBUTORY PENSION SCHEME POWERPOINT SLIDE CLICK HERE...

TO DOWNLOAD CONTRIBUTORY PENSION SCHEME DETAILS IN PDF FORMAT CLICK HERE...

பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.

Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders Click Here...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தில்லியில் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச்செயலரும், அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலருமான இரா. முகுந்தன்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் (ராஜபாஷா அதிகாரி) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர் (ராஜபாஷா அதிகாரி)
மொத்த பணியிடங்கள்: 17
வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு இந்தியில் அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 50.
சம்பளம்: ரூ. 25,700
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2013
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 11.08.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

புதுடில்லி : சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையின் பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக பரிந்துரை:


உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு துறைக்கு அளித்துள்ள பரிந்துரையில், ‌மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்த சான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிக சிம் கார்டுகளை விற்க வேண்டும் என விற்பனையாளர்களிடம் நிலவும் கடும் போட்டியில் உடல்சார்ந்த சான்று சரிபார்ப்பது எளிதான காரியம் அல்ல என தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்

சாத்தான்குளம்: இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் அஞ்சல்வழியில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
தற்போது பி.எட் படிப்பு இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயின்று பட்டம் வாங்க வேண்டும் (கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் 10 மாதம் மட்டுமே) மதுரை இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக் கழக மண்டல அலுவலகம் இயங்குகிறது.
இதில் பயின்ற மாணவர்கள் மே மாதம் நடக்கும் பி.எட் செமினார் வகுப்புகள் படிப்பதற்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்குரிய கவுன்சிலிங், தேர்வு கட்டணம் செலுத்துதல், உட்பட அனைத்து தேவைகளுக்கும் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தைபயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் மதுரை மண்டலத்தில் இருந்து பிரிந்து திருவனந்தபுரத்தில் இணைக்கப்பட்டிருப்பதுடன் விண்ணப்ப கட்டணமும் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்காததால் கற்பிப்பதில் சிக்கல்

உடுமலையில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அனைவருக்கும் புத்தகப்பை வழங்கப்பட்டும், புத்தகங்கள் முழு அளவில் வழங்கப்படவில்லை; புத்தகங்கள் பற்றாக்குறையாக வந்துள்ளதால், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் 113 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி துவங்கியவுடன் விலையில்லா சீருடைகள், நோட்டு, காலணிகள், வண்ண பென்சில்கள் மற்றும் பேக் மற்றும் பள்ளிகளுக்கும் தலா ஒரு செஸ் போர்டும்; முதல் பருவத்திற்கான புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில தொடக்கப்பள்ளிகளில், சில வகுப்புகளை தவிர, மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை; ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்கள் அனைவருக்கும் முறையாக கிடைக்காத நிலையில், பாடம் கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கும் புத்தகங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன. பாடபுத்தகங்களில் உள்ள பயிற்சிகள் மற்றும் குறிப்புகள் எடுக்க புத்தகங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால் புத்தகங்கள் இல்லாததால், பயிற்சி அளிப்பதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில பள்ளிகளில் கடந்தாண்டு மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதுள்ளது. பள்ளி துவங்கி ஒரு மாதம் ஆகியும் அரசுப்பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், பாடங்களை கற்பிக்க முடியாமல் ஆசிரியர்களும், கற்க முடியாமல் மாணவர்களும் பரிதவித்து வருகின்றனர்.
செப்., மாதம் வரை, முதல் பருவ பாட புத்தகங்களை பயன்படுத்த முடியும் என்பதால், உடனடியாக புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை: இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை வழக்கறிஞர் ஞானகுருநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள பொது நல மனு: போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் பாதிக்கும் என்பதால், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, அரசு பேருந்துகளில் முறையாக ஏற்றுவதில்லை.
பேருந்து நிறுத்தத்தை விட்டு, சற்று தள்ளி நிறுத்துகின்றனர். மாணவர்கள், புத்தகப் பைகளுடன் ஓடிச் சென்று, பேருந்துகளில் ஏறுகின்றனர். புதுக்கோட்டை, கல்குறிச்சியில், அரசு பேருந்து நிற்காததால், பள்ளி செல்லும் அவசரத்தில், பால் வேனில் மாணவர்கள் பயணித்தனர். இது விபத்துக்குள்ளாகி, ஏழு பேர் பலியாயினர். இது பற்றி, தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது.

மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில், நடப்பு ஆண்டு, ஜூன், 30ம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 40.78 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம், 82.02 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்

கலந்தாய்வை புறக்கணித்த மருத்துவ மாணவர்கள்: எம்.டி.எஸ்., கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை: முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான (எம்.டி.எஸ்.,) மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை, முழுமையாக சேர்க்காததை கண்டித்து, மாணவர்கள், கலந்தாய்வை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், ராகாஸ், ராஜாஷ், ஜே.கே.கே., நடராஜா, ஸ்ரீ முகாம்பிகா, ஸ்ரீ ராமகிருஷ்ணா, கே.எஸ்.ஆர்., ஆகிய பல் மருத்துவக் கல்லூரிகளில், முறையே, 50, 6, 7, 16, 13, 14 என, மொத்தம், 106 எம்.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், விதிமுறைப்படி, ஒவ்வொரு கல்லூரியும், 50 சதவீதம் இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும். ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், நேற்று நடந்த, எம்.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ஸ்ரீ முகாம்பிகா, ஸ்ரீராமகிருஷ்ணா ஆகிய பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடாக முறையே, 5, 11 எம்.டி.எஸ்., இடங்கள் மட்டும் சேர்க்கப்பட்டன.

ஒரு லட்சம் பொருளியல் பட்டதாரிகளுக்கு வேலையில்லை: டி.இ.டி., தேர்விலும் அனுமதிக்காததால் புலம்பல் -தினமலர் செய்தி

ஒரு லட்சம் பொருளியல் பட்டதாரிகளுக்கு வேலையில்லை: டி.இ.டி., தேர்விலும் அனுமதிக்காததால் புலம்பல்
பொருளியல் பட்டம் பெற்ற, ஒரு லட்சம் பட்டதாரிகள், வேலையின்றி தவிக்கின்றனர். டி.இ.டி., தேர்வை எழுதி, பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தும், "10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை' என, கூறி, அனுமதி மறுத்ததால், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக, பொருளியல் பட்டதாரிகள், புலம்புகின்றனர்.

6 முதல் 10 வரை: அரசு பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை என்பதால், இந்த பாடத்திற்கு, ஆசிரியர் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது, கல்வித்துறையின் வாதமாக உள்ளது. சமூக அறிவியலில், சிறு பகுதியாக, பொருளியல் இடம் பெற்றுள்ளது. எனினும், இதற்கென, தனியாக ஆசிரியரை நியமனம் செய்ய முடியாது என, கல்வித்துறை கூறி வருகிறது. இதர பாடங்களை படித்த பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர்ந்து வருவதைக்கண்டு, பொருளியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள், மனம் வெதும்பி வருகின்றனர். பி.ஏ.,
பொருளியல், பி.எட்., பொருளியல் பட்டம் பெற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருளியல் பட்டதாரிகள், வேலையில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டில்: இது குறித்து, பொருளியல் பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: "பத்தாம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பல பொருளியல் பட்டதாரி ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், 2002, 2009 போன்ற ஆண்டுகளில் தான், பணியில்சேர்ந்துள்ளனர். மேலும், பிற பாடங்களை எடுத்து, பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், விரைவாக பதவி உயர்வு பெற, கூடுதலாக பொருளியல் பட்டம் படித்து, முதுகலை பொருளியல் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். இவர்களாலும், எங்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. முதுகலை பொருளியல் ஆசிரியர் காலியிடங்களில், பெரும்பாலான இடங்களை, பதவி உயர்வு மூலம், பிற பாடங்களை எடுத்த பட்டதாரி ஆசிரியர்களே ஆக்கிரமித்துவிடுவதால், முதுகலை பொருளியல்இடங்கள் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இதனால், நேரடியாக முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியிலும் சேர முடியாத நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியும் கிடையாது; முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியும் கிடையாது என்றால், பொருளியல் பட்டம் படித்தவர்கள் எங்கே போவது? டி.இ.டி., தேர்விலும், எங்களை அனுமதிக்கவில்லை.

முதல்வர் தலையிட வேண்டும்: இதர பாட பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கும்போது, பொருளியல் பட்டதாரிகள், வேடிக்கைமட்டும் தான் பார்க்க முடிந்தது. பொருளியல் பட்டதாரிகள் பிரச்னை தீர்ப்பதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது

தஞ்சை: தமிழுக்கென உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழியை உலகறிய செய்யவும், தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் இப்பல்கலைக்கழகம் 1,000 ஏக்கரில் கட்டப்பட்டு 1981 செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திறக்கப்பட்டது. இதன் முதல் துணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம¢ நியமிக்கப்பட்டார்.இத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது, சிற்பத்துறை, ஓலைச்சுவடித்துறை, கட்டிடக் கலைத்துறை, சித்த மருத்துவத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, மெய்யியல் துறை, தொல் அறிவியல் துறை, நாடகத்துறை, மொழிபெயர்ப்புத்துறை, அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, தூயத் தமிழ் அகர முதலித் திட்டம், இந்திய மொழிகள் பள்ளி, இசைத்துறை, பெருஞ்சொல்லதிகாரத்துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, மலையின மக்கள் ஆய்வு மையம், அரிய கையெழுத்து சுவடித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, கல்வியியல் துறை உள்ளிட்ட பல துறைகள் இயங்கி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க/நடுநிலைப்பள்ளிகளூக்கான 13-14 கல்வியாண்டுக்கானஉத்தேச விடுமுறைப்பட்டியல்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து (மாதிரி கணக்கீட்டுடன்)



இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம்

ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்

எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து

நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் (ஆதங்கம்) சார்ந்த விளக்கம்.

நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல் இத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
( ஆதங்கப்படுபவர்கள் எல்லோரும் ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.)

கருணை அடிப்படையில் பணிநியமனம்-பணிக்காலத்தில் மரனமடைந்த ஆசிரியர்/ஆசிரியரல்லாததோர் வாரிசுகளுக்கு இளநிலை உதவியாளர்பணி வழங்க கோரி விண்ணப்பித்தோர் பற்றிய ஆய்வுக்கூட்டம் 4/7/13,5/7/13ஆகிய இருநாட்கள் நடத்துதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்

இங்கே கிளிக் செய்யவும்

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில் நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு

click here to download the dse Vellore proceeding of BRTE can be deputed to High/HS School Vacancy

பள்ளிக்கல்வித்துறை - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9 வகுப்பு வரை சுயநிதி பள்ளிகளுக்கான மாணவ / மாணவியர் எண்ணிக்கை கோரி இயக்குனர் உத்தரவு

DSE - 2013-14 SELF FINANCING SCHOOL 1 TO 9 STD STRENGTH CALLED REG PROC CLICK HERE...

கல்விக்கடனில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வட்டி மானியம்

தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால், அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது. அரசு, கலந்தாய்வு மூலம், பொறியியல் மற்றும் தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, 4 லட்ச ரூபாய் வரையான கல்விக்கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமின், சொத்துப் பிணையம் தேவையில்லை.
 
நான்கு லட்ச ரூபாய் முதல், ஏழு லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமீன், பத்து லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, சொத்துப் பிணையம் தேவை. இந்திய வங்கிகள் சங்கத்தின் -ஐ.பி.ஏ., திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கும், இச்சலுகை பொருந்தும்.

1999 முதல் 2011 வரை 56 பள்ளிகள் மூடல் மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீவிரம் - நாளிதழ் செய்தி

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப்பள்ளி, 36 உயர்நிலைப்பள்ளி, 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப்பள்ளி, 122 தொடக்கப்பள்ளி, 30 மழலையர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 98 ஆயிரத்து 857 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். 4041 ஆசிரியர்கள் உள்ளனர்.

இவற்றில் குறைந்த மாணவர்கள் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளுடன் சேர்க்கும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. இப்படி 1999 முதல் 2011ம் ஆண்டு வரை 56 பள்ளிகள் மூடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு 25க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளிகள் கணக்கிடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு பள்ளியில்

கழிப்பறை சுத்தம் செய்ய மாணவர்கள்: புகார் சொன்ன தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்

மதுரை: அரசு பள்ளி கழிப்பறையை, மாணவர்கள் உதவியடன், சுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது, புகார் செய்ததால், மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வழங்குமாறும், தலைமை ஆசிரியை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெல்லை, சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை, அமலி அன்னாள், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள மனு: நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சத்துணவு பணியாளர் நாகராஜ், ஆசிரியை பழனியம்மாள். இவர்கள், ஆசிரியர்களின் கழிப்பறையை, சுத்தம் செய்ய, மாணவர்களைப் பயன்படுத்தினர்.
கூடுதல் உதவி துவக்கக் கல்வி அலுவலரிடமும், போலீசிலும் புகார் செய்தேன். இதை அடுத்து, சிலர், என்னை ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர்; தாக்குதல் நடத்தினர். மருத்துவ விடுப்பில் சென்றேன். ஏப்.,12 ம் தேதி, பணிக்கு வந்தேன்

திருவண்னாமலை முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை


தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்...


தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது


இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோளை விண்வெளியில் நிறுவ இருக்கும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட், இன்றிரவு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ‘‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ’’ என்ற புதிய செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். இயற்கை பேரிடர் காலங்களில் கப்பல், விமான பயணங்களுக்கு இந்த செயற்கை கோள் மிகவும் உதவி புரியும். கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல்களை துல்லியமாக கண்காணிக்கும்.

இந்தியாவுக்குள்ளும், இந்திய எல்லைப் பகுதியில் இருந்து 1500 கி.மீ. சுற்றளவு தூரத்திற்கு இது கண்காணித்து துல்லியமான தகவல்களை வழங்கும். 44 மீட்டர் நீளமும், 320 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது.

1425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் செயற்கை கோள் ‘‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ’’ இன்று இரவு 11.41 மணி அளவில் சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சத்தீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்ட சிறந்த ஆசிரியர்கள்,சிறந்த பள்ளிகளூக்கான விருது வழங்கும் விழா

சிறந்த ஆசிரியர்கள் சிரந்த பள்ளிகளூக்கான விருது வழங்கும் விழா
அனைவருக்கும் கல்வி இயக்கம் 2012-13 கல்வியாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஒசூர் ஒன்றியத்தில்15 சிறந்த பள்ளிகளூக்கும்,12 சிறந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது,இந்நிகழ்ச்சி29/06/13 காலை 9 மணியளவில்கிரிஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு நகர்புற மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அவர்கள் முன்னிலையில்,மாவட்ட ஆஅட்சியர் தலைமையில் நடைபெற்றது.இதில் ஒசுர் ஒன்றியம் பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பொன் நாகேஷ் என்பவருக்கு சிரந்த ஆசிரியருக்காண விருது வழங்கப்பட்டது.விழாவில்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள்பொதுமக்கள் என ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர்.


                   

நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம்-2013-2014 மாவட்ட தொடக்கப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்

click here to download the Nagapattinam Elementary Dept List of Holidays 2013-14
click here to download the Namakkal Elementary Dept List of Holidays 2013-14

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்து கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணபங்களை சரிப்பார்த்து, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து,  விண்ணபங்களை 100 வீதம்
அடுக்கி 03.07.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் பல்கலை: எம்.எட்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், எம்.எட் படிப்புக்கு இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

2013-2014ஆம் கல்வியாண்டு விடுமுறைப்பட்டியல் தொடக்கக்கல்வி ~நாமக்கல்(மா)


புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை


உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணி: சுமை குறைக்க "இ-ரெஜிஸ்டர்"

பள்ளிகளில் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணிச்சுமையை குறைக்கும் விதத்தில், "இ-ரெஜிஸ்டர்" அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
கடந்த 2012-13ல் முப்பருவம் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறையை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது.

வளரறி மதிப்பீட்டு முறைக்கு 40 மதிப்பெண், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் கவனித்து, தனி மதிப்பெண்ணும், தனித்திறனுக்கு மதிப்பெண்கள், யூனிட் தேர்வுகளுக்கு தனியாகவும், எழுத்துத் தேர்வுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், மூன்று பருவங்களும் கணக்கிட்டு செய்து மாணவர்களுக்கு (ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ ) கிரேடு மதிப்பிடப்படுகிறது. இதனால், அதிகரிக்கும் பணிச்சுமையை குறைக்க, " இ-ரெஜிஸ்டர் பார் சி.சி.இ.," என்ற "எக்செல் பைல்" பயன்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், மாவட்ட அளவில் நடந்த ஆலோசனை கூட்டங்களிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை பதிவு செய்தால், மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படுவதுடன், இறுதி தர அறிக்கையை எளிதாக பெற இயலும்.

மேலும், ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் பாடவாரியாக மதிப்பெண் விழுக்காடு, சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டை அறிந்துகொள்ளலாம். இதனால், ஆசிரியர்களின் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்படும்.

நிரப்பப்படாத டி.இ.ஓ., சி.இ.ஓ. பணியிடங்கள்!

பள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால், இப்போது பணியாற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்பார்வையிடுவதும் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 181 பணியிடங்களில் 51 இடங்கள் காலியாக உள்ளன

2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீட்டு உத்தரவு

DSE - 2012-13 DR.RADHAKRISHNAN STATE AWARD - GUIDELINES FOR TRs SELECTION, FORMATION OF DISTRICT LEVEL SELECTION COMMITTEE REG PROC CLICK HERE...

trb,tnpsc வேலை வாய்ப்பு பட்டியல்

ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்-தினமணி யில் நா.இன்பக்கனி, உடுமலை அவர்களின்கட்டுரை


ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்

ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.

தேவையான கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிக்கூடங்களில் செய்யப்பட்டுள்ளன. கணினி, புரொஜெக்டர், பிரிண்டர், தொலைக்காட்சி, டி.வி.டி. என்று கற்றலுக்கான சாதனங்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டே வருகின்றன. சி.சி.இ., ஏ.பி.எல்., ஏ.எல்.எம். என்று பல்வேறு அற்புதமான கல்வித் திட்டங்களை அரசு தந்துகொண்டே இருக்கிறது.

ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30-என்பதற்குக் கீழே போகிறது. அதாவது ஒரு ஆசிரியருக்கு 30-க்கும் குறைந்த மாணவர்களே வகுப்பில் உள்ளனர். ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 10 பேர் அல்லது 20 பேர் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2 ஆயாக்களும் சத்துணவு அமைப்பாளரும் உள்ளனர். இத்தனைக்குப் பிறகும் கல்வியில் முன்னேற்றமில்லை, பின்னேற்றம்தான்.

முதல், இடை, கடை என்று மாணவர்களின் கல்வித்திறனில் மூன்று நிலை இருப்பர் என்று நன்னூல் கூறுகிறது. இதையே கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டை என்று உவமையாகக் கூறுவர். "அனைவருக்கும் தேர்ச்சி' என்ற கொள்கையால் வாழைமட்டைகளை வழிக்குக் கொண்டுவரத் தெரியாமல் ஆசிரியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

"படிக்காமல் இருந்தால் ஆசிரியர் தண்டிப்பார், இதே வகுப்பில் மேலும் ஓராண்டோ சில ஆண்டுகளோ மீண்டும் படிக்க வேண்டும்' என்கிற அச்சங்கள் இல்லாததால் மாணவர்கள் படிப்பதுமில்லை, ஆசிரியர்களை மதிப்பதும் இல்லை. கல்வி எப்படித் தரமாக இருக்கும்?

அவ்வளவு ஏன், வகுப்பில் குப்பை போடும் மாணவனையும் குறும்பு செய்யும் மாணவனையும் கூட வலுவாகக் கண்டிக்க ஆசிரியர்கள் தயங்கும் நிலையே காணப்படுகிறது. இது மாற வேண்டுமானால் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது பள்ளிக்கூடத்தின் தேர்ச்சிக்காகவோ ஆசிரியர்களின் கெüரவத்துக்காகவோ அல்ல, மாணவர்கள் உருப்பட்டு முன்னுக்கு வருவதற்காகவே அவசியப்படுகிறது.

ஒரு ஆசிரியருக்கு ஓராண்டில் சுமார் 220 நாள்கள்தான் வேலை. 15 தற்செயல் விடுப்புகள், 15 மருத்துவ விடுப்புகள், 10 சி.ஆர்.சி. மையம் என்று ஆண்டில் 20% நாள்கள் ஆசிரியர்களால் வகுப்புகளுக்கு வரமுடியாது. இந்த நாள்களில் அவரிடம் படிக்கும் மாணவனின் படிப்பு நிச்சயம் பாதிக்கும். ஈராசிரியர்கள் பள்ளிகளில் ஆண்டுக்குப் பாதி நாள்கள் ஓராசிரியர் மட்டுமே பள்ளியில் இருப்பார்.

06.07.2013 அன்று நடக்கும் தொடக்க /நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களூக்கான குறு வள மைய SABL/ ALM/ CCE பயிற்சிக்கான Power Point Slides, MODULES, MATERIALS

PRIMARY
TAMIL
TAMIL 2
ENGLISH 1
EVS
MATHS
SCIENCE
SOCIAL SCIENCE

UPPER PRIMARY
TAMIL
ENGLISH
MATHS1
MATHS 2 
MATHS REFERENCE

SCIENCE
SOCIAL SCIENCE
ACTIVE LEARNING METHODOLOGY
BOTONY MODEL LESSON PLAN
CCE - GENERAL GUIDELINES 31.05.2012
TITLE PAGE
SCIENCE EXPERIMENTS

SABL 2013 - Ladder and Card Modification 

Tamil ladder Changes Std I & II
Tamil Ladder III & IV
Tamil Cards changes
English, Maths, Science, S.Science Changes 

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.


நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறியதாவது:-

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறோம்.

ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேவையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். இது தொடர்பாக, பரிசீலிப்பதாக மட்டும் கூறிய அவர், எங்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.

எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்துள்ளோம். வேலை நிறுத்தத்திற்கான தேதியை இறுதி செய்வதற்காக இதர தொழிற்சங்கங்களுடன் பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேயிடம் கேட்ட போது, ‘எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் இப்போது தான் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளேன்’ என்று பதிலளித்தார்.

TAMIL NADU SCHOOL EDUCATION MINISTER Dr. Vaigai Chelvan

TAMIL NADU SCHOOL EDUCATION MINISTER Dr. Vaigai Chelvan

Dr. Vaigai Chelvan 
Hon. Minister for School Education and Sports & Youth Welfare 
207. Aruppukottai 
Virudhungar District



Date of Birth 5th April 1968
Education M.A., B.L., D.Ed., D.Lit., Ph.D.
Marital Status Married; Two Children.
Occupation Advocate
Public and Social Activities Free Eye Camps; Education Fees to Best Students; Donating Books to Libraries.Writer of 'Vadakkai Vellum Therku', 'Vaigai Chelvan Kavithaigal', 'Sillukarupatti' (short story), 'Thirukkural Naveena Urai', 'Uyarthiru', 'Anumathi Ilavasam', 'Kanavodu Veguthooram' (novel). Ex-Chief Government Whip till 28th Feb 2013
Address--
Chennai: B5F, MLAs Quarters Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No.25, 4th Cross Street, 6th Main Road, Azeez Nagar, Aruppukottai, Virudhunagar District.
Telephone--
Chennai--Residence: 044-25367530
Mofussil--Residence: 04566-220777
Mobile: +91 9952062600; 9444023262

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி முன்பணம் இழுத்தடிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகர், புறநகர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால், போக்குவரத்து கழகத்தில் நிலவிய நிதி நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும், நிர்வாக தரப்பில் நிதி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்காமல் போக்குவரத்து கழகங்கள் காலம் கடத்தி வருகின்றன.  போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வட்டி இல்லா கடனாக கல்வி முன்பணம் ஸீ2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை, 10 மாதங்களாக தலா ரூ.200 வீதம் தொழிலாளர்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்யப்படும்.

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் உள்ளதா? 300 தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு உத்தரவு

ஒரு வகுப்புக்கு 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்து சர்வே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்,  கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தில் 15,650 தனியார் பள்ளிகள் உள்ளன. அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களும், 6 முதல் 10ம் வகுப்பு வரை 35 மாணவர்களும், 11, 12ம் வகுப்புகளில் 40 மாணவர்கள் வரை மட்டுமே சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பல தனியார் பள்ளிகள் ஒரு வகுப்பில் விதிகளை மீறி கூடுதல் மாணவர்களை சேர்த்து உள்ளதாகவும், இதனால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவதா கவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 5 பிரிவுகளுக்கு (செக்ஷன்) மேல் நடத்தக்கூடாது என்றும், ஆர்டிஇ விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டு இருந்தது.

மாணவர் சேர்க்கை முடிந்து, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த திடீர் உத்தரவால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சியை அடைந்துள்ளன. பல முன்னணி தனியார் பள்ளிகள், ஒரு வகுப்புக்கு 'ஏ' முதல் 'எல்' வரை 12 பிரிவுகள் நடத்தி வரும் நிலையில், கூடுதல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் கூறியது: போதிய கட்டிட வசதிகளும், ஆசிரியர்களும் இருந்தால் எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்ற உத்தரவு தனியார் ஆங்கில வழி பள்ளிக்கு மட்டும் என்று சொல்லி இருப்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. சட்டம் என்பது பொதுவாக இருக்க வேண்டும்.

பள்ளிகளில் யோகா வகுப்புகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா?

"தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்" என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளிக்கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12.35 முதல் 1.05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கல்வியும் அளிக்க வேண்டும்.

மாலை பள்ளி முடிந்த பின், ஒரு மணி நேரம் பொழுது போக்கு நிகழ்வுகளில், மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும், என மாற்றப்பட்டது. யோகா என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் உன்னத சக்தி. அவர்களின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யோகா வகுப்புகளை நடத்த முடியாத நிலையுள்ளது.

ஆசிரியர்கள் கூறியதாவது: நூற்றுக்கணக்கில் மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களை யோகா வகுப்பிற்கு தயார்படுத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடப்பதில்லை. யோகா கற்க, திறந்தவெளி சிறந்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 5½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 15 ஆயிரம் காலி இடங்களை நிரப்பும் வகையில் ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ள நிலையில், ஏறத்தாழ 5½ லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

இன்று கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி, தகுதித்தேர்வுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும் அதன்பிறகு வரும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை


இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன

அரசு பணிக்கு 30,000 பேர்: டி.என்.பி.எஸ்.சி.,- டி.ஆர்.பி., மும்முரம்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.,) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.
நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.

web stats

web stats