rp

Blogging Tips 2017

கல்லூரி முதல்வர் படுகொலை: கன்னியாகுமரியில் வரும் 21ந்தேதி அனைத்து கல்லூரிகளை ஒரு நாள் மூட முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பவர் கடந்த 10-ந் தேதி கல்லூரி மாணவர்கள் 3 பேரால் படுகொலை செய்யப்பட்டார்.  கல்லூரியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் 3 பேரும் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமணி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, தூத்துக்குடியில் கல்லூரி முதல்வர் படுகொலையை கண்டித்து, கன்னியாகுமரியில் அனைத்து தனியார் கல்லூரிகளும் வருகிற அக்டோபர் 21ந் தேதி மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சம்பள பணத்தில் தான் பள்ளிக் கூடம் நடத்துகிறோம் -குமுறும் அரசு பள்ளி ஆசிரியர்கள் -

கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?தினத்தந்தி கட்டுரை

வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டு ஆசிரியர் கொலை மாணவன் வெறிச்செயல்...
இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிநாடுகளில் எங்காவது நடப்பது உண்டு. அவை ஒரு சிறு செய்தியாக நம்மூர் பத்திரிகைகளில் இடம் பிடிக்கும். எங்கோ கண்ணுக்கு தெரியாத தேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களை கேட்டாலே நம் நெஞ்சும் பதறியது.
நம் கண்முன்னால் பாதை மாறி செல்லும் மாணவர் சமுதாயத்தை பார்த்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்ல நாட்டில் உள்ள குழந்தை ஏசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் சுரேஷ் மாணவர்களாலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகதத்தையே அதிர்ச்சியல் உறைய வைத்துள்ளது.

அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் தயாநிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெரியகுளம் அருகே அ.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி. இவர் பெரியகுளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தயாநிதிக்கு பதிலாக சுமதி என்பவர் அ.மீனாட்சிபுரம் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றத்தை விரும்பாத தயாநிதி, நேற்று முன்தினம் பள்ளியை பூட்டி விட்டு சுமதியிடம் சாவியை கொடுக்காமல் சென்று விட்டார்.

Central Teacher Eligibility Test (CTET) - FEB 2014

PROCEED TO APPLY ONLINE >>
1. Please read the Information Bulletin of CTET - FEB 2014 carefully before you start filling the
Online Application  Form.
2. Candidates can apply for CTET - FEB 2014 ‘ON-LINE’ through website www.ctet.nic.in

For ‘ON-LINE’ SUBMISSION - www.ctet.nic.in
Candidates can apply ‘ON-LINE’ at CTET website www.ctet.nic.in. The candidate should supply all details while filling the Online Form. Candidates are required to take a print out of the computer generated Confirmation Page with Registration Number after successful submission of data. The Confirmation Page duly complete should be sent to CBSE.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் - CBSE அறிவிப்பு

பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!!

தெருவில் பிச்சை எடுத்து திரிந்த 6 குழந்தைகளை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது

 மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி வெளியீடு ( தமிழ் பாடம் தவிர்த்து )

click here-PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST

Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம்17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950 பேர் 677மையங்களில் எழுதினார்கள். இவர்களில்17ஆயிரத்து974பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4லட்சத்து11ஆயிரத்து600பேர்1060மையங்களில் எழுதினார்கள்.தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது.

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு

தமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில், அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். 4
பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
இதுதவிர, 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள், குறிப்பாக 2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற இருக்கின்றனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல்

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
Telugu Geography
English Economics
Mathematics Commerce
Physics Political Science
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I
Zoology Micro - Biology
History Bio - Chemistry
      Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலைதளம் ஆண்ட்ராய்டு(Android) அப்ளிகேசன் அறிமுகம்

அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே,
வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலைதள அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
CLICK HERE TO DOWNLOAD THE ANDROID APPLICATION

சிறந்த பள்ளிக்கான விருது- திமலை மாவட்டம் ஜவ்வதுமலை ஒன்றியம் பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி பெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் பெருங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  மாநில அளவில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.என். ரவிச்சந்திரன் அவர்கள்( தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருவண்னாமலை மாவட்டத்தலைவர்) பரிசினை பெற்ற நிகழ்வின் படம்

இதுதானா கல்வி?====சிறப்புக் கட்டுரை

Return to frontpage
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் பிளஸ் டூ சின்ட்ரோம் என்றொரு நோய் ஆட்டிப்படைத்துவருகிறது. எந்த ஊரில், எந்தப் பள்ளியில் படித்தாலும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் முகம் ஒன்றுபோல இறுகிப்போயிருக்கிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பதுபோல மாணவர்கள் இரவு, பகலாகப் படிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் இயல்பாகச் சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, வீட்டாருடன் பேசுவதில்லை, சிரிப்பதில்லை. தீவிரமான மனச்சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதன் விளைவு, மனச்சிதைவும் மீள முடியாத போதைப் பழக்கமும் தற்கொலைகளும் என்பதைப் பல்வேறு நாளிதழ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

7th PAY COMMISSION DATE : 7th Pay Commission Date for implementation

Till this moment, the oral announcement only made by the Finance Minister to constitute 7th CPC for Central Government employees. There is no further action to constitute the committee for 7th CPC and we cannot say anything about the members of the committee and when it will be constituted.

Thee is no authentic information about the date to constitute the committee for preparing recommendations for 7th CPC. However, the committee will take maximum of 24 months to submit their recommendation report to Indian Government. The implementation of the 7th CPC is likely to be implemented from 1st January, 2016 to all Central government employees.

அண்ணாமலை பல்கலை நிறுவனருக்கான உரிமைகள் பறிப்பு : புதிய சட்டத்தை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி மனு: அரசுக்கு 'நோட்டீஸ்'

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில், கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி, மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில், எம்.ஏ.எம்.ராமசாமி தாக்கல் செய்த, மனுவில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம், 1929ல் துவங்கப்பட்டு, 80 ஆண்டுகளாக, இயங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தில், 49 துறைகளும், 12 விடுதிகளும் உள்ளன. விடுதிகளில், 12,500 மாணவர் தங்கிப் படிக்கின்றனர். 'ரெகுலர்' படிப்பில், 35 ஆயிரம் பேரும், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில், நான்­கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் படிக்கின்றனர். என் தாத்தா அண்ணாமலை செட்டியார்,

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வை ஒரே நேரத்தில் நடத்த திட்டம் விரைவில் முடிவு.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வை ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர் வேலைக்கு சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதற்கு அடுத்தபடியாக உயர்கல்வி படிக்க பிளஸ்-2 தேர்வும் அதில் உள்ள மதிப்பெண்ணும் அவசியம். எனவே எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வை முக்கியத்தேர்வுகளாக கருதி தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்

பள்ளி மாணவர்களின் மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் அறிமுகம்.

பள்ளி மாணவர்களுக்கான மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் பணிபுரியும் உளவியல் ஆலோசகர்களுக்கு சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னை, கோவை, வேலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் நடமாடும்

பண்டிகை முன்பணத்தை 5,000 லிருந்து 20,000 ஆக உயர்த்தித்தர கோரிக்கை

சிறப்பு வாய்ந்த ஐ.நா. விருதைப் பெறும் இந்திய இளைஞர்

தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்யும் 10 இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் ஐ.நா. கொடுக்கும் விருதினை இந்த ஆண்டு இந்திய இளைஞர் ஒருவரும் பெறுகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த வருண் அரோரா, பள்ளி பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இந்த விருதினைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"ரகசியம்... பரம ரகசியம்": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு - நாளிதழ் செய்தி

மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால், கல்வித்துறையின் வெளிப்படை தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கல்வித் துறையில் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு அறிவிக்கப்படும் முன், பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பெயர்கள், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார்.
எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013  வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம்.

கல்வித்தரம் குறைவு, தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்







 
ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்

கணிதப் புதிர் -விடை கூறுங்கள்

thanks to-Kumaresan Guru
ஒரு அரண்மனையில் இருந்து நான்கு பேர் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றனர் . பங்கிட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தனித் தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர் .
 
இரவு பொழுது வேறு .....

முதலில் ஒருத்தன் வந்து இருக்கும் நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கை எடுத்துச் செல்கின்றான் ..

இரண்டாமவனுக்கு முதலில் ஒருவன் வந்து போனது தெரியாது .அதனால் மீதமுள்ள நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா ஒரு நாணயத்தையும் எடுத்து செல்கின்றான் ..

மூன்றாமவனுக்கு இரண்டு பேர் வந்து போனது தெரியாது .அதனால மீதமுள்ளவற்றை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா இரண்டு நாணயங்களையும் எடுத்துச் செல்கின்றான் ..

நான்காமவன் வரும் போது விடிந்து விடுகிறது ..அதனால் வந்து போன கால் தடங்களைப் பார்த்து விட்டு மீதமுள்ள நாணயங்கள் தனக்குத் தான் என்று நினைத்து எடுத்துச் செல்கின்றான் ..

கேள்வி : இருந்த மொத்த நாணயங்கள் எத்தனை ?? ஒவ்வொருவரும் எத்தனை நாணயங்கள் எடுத்துச் சென்றிருப்பர் ?? ஆனால் அந்த நான்கு பேரும் ஒரே எண்ணிக்கையில் நாணயங்களை எடுத்துச் சென்றிருப்பார்கள் ...?

பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. "பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

அகஇ - சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் -களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் உள்ள சிறப்பு முகாம்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்கவும், ஏப்ரல் 2013 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை
உடனடியாக சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்திலேயே முதன் முதலாக பூட்டப்பட்ட அரசுப் பள்ளி.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலைமுகட்டில் அமைந்திருக்கும். இவற்றில் சில கிராமங்களுக்கு கால்நடையாக மட்டும்தான் போக முடியும். அப்படியான கிராமம்தான் புல்லஅள்ளி. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 வீடுகளுடன் கம்பீரமாக இயங்கிய விவசாய கிராமம். டன் கணக்கில் தானியங்களை இருப்புவைக்க ஏற்ற வகையில் கட்டப்பட்ட வீடுகள். இன்றைக்கு  இங்கு சில வீடுகளில் மட்டும்தான் மக்கள் வசிக்கிறார்கள். பொருளாதாரம் எனும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,இந்தக் கிராமத்தில் 33 ஆண்டுகளாகச் செயல்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, ஆய்வுக் கூட்டம் 17.10.2013 மற்றும் 18.10.2013 ஆகிய இரு நாட்களில் சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டு கூட்டத்தில் நடைபெறுவது குறித்த கூட்டப்பொருள்

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 17 & 18.10.2013 AT CHENNAI REG PROC CLICK HERE...

CCE-இரண்டாம் பருவம் 1 முதல் 8 வகுப்புகளுக்கான -வாரவாரி பாடதிட்டம்

இங்கு கிளிக் செய்து word file வடிவில் டவுன்லோடு செய்யவும்

 ( thanks to Teachers Friend Devarajan Tanjore)

ஏமாற்றிய இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.2013)- நொந்து போன ஒருங்கிணைப்பாளர்கள்


இன்று(10.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு பட்டியலில் 42வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. 41வது வழக்காக பட்டியலிடப்பட்ட அணு உலை வழக்கு நீதி மன்றத்தின் பாதி நேரத்தை விழுங்கிவிட்டது. எனவே இரட்டைப்பட்டம் வழக்கு தன் எல்லையைத் தொடாமலேயே பெட்டிக்குள் சுருங்கிவிட்டது. இந்த நிகழ்வு வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்ததாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை அமர்வில் உள்ள நீதியரசர் சத்தியநாரயணா வருவது சந்தேகம் என்பதால் இனி வழக்கு செவ்வாய் கிழமைதான் வருவதற்கான சாதிதியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது. அப்படியே வந்தாலும் அன்று வழக்கில் வாதாடக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் வேறு எங்கும் செல்லாமல் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஒட்டு மொத்தத்தில் விடை காண முடியாத விளங்க முடியாத வழக்கு இது. நாமும் மற்றவர்களைப்போல் ஆவலாக உள்ளோம்.

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

GO.401 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - ALLOWANCES - DEARNESS ALLOWANCES - ENHANCED RATE OF DEARNESS ALLOWANCES FROM JULY 01, 2013 CLICK HERE...

அரசாணை எண்.401 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - படிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

GO.402 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium -Ad-hoc Increase from 01.07.2013 - Orders - Issued.

அரசாணை எண்.402 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

அரசாணை எண்.403 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

TN GOVT PRESS RELEASE NO.270 DATED.10.10.2013 - Statement of Honble Chief Minister on DA announcement for Government Servants and Teachers Click Here...

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 1-7- 2013-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயடைவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 80% ஆக இருந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் 90% ஆக கணக்கிடப்படும். 01.07.2013 முதல் 30.09.2013 வரையிலான 3 மாத   நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் பாஸ்வேர்ட் களவு போகாமல் இருக்க?...

உங்கள் பாஸ்வேர்ட் களவு போக எவ்வளவு நேரமாகும்? – 10 நிமிடம் போதும்

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் 2.60 லட்சம் பொறியியல் பட்டதாரிகள்!


தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

அதேபோல், 47 ஆயிரத்து 736 முதுநிலைப் பொறியியல் பட்டதாரிகளும் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வேலைவாய்ப்புத் துறை கடந்த மார்ச் 31 வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் பொறியியல் பட்டதாரிகள் கணிசமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.


தபால்வழியில் பி.எட். படிப்பு
மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன்,
கோவை பாரதியார், தஞ்சை தமிழ்,
நெல்லை மனோன்மணீயம், சிதம்பரம்
அண்ணாமலை,
தமிழ்நாடு திறந்தநிலை என குறிப்பிட்ட
சில பல்கலைக்கழகங்கள்
மட்டுமே தபால்வழியில் பி.எட்.
படிப்புகளை வழங்குகின்றன. இதேபோல்
மத்திய அரசு பல்கலைக்கழகமான
இந்திரா காந்தி தேசிய

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு.

பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சியினாலும், போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் 9-ஆம் வகுப்புக்கு வரும் பல மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்புத் திறன் கூட இல்லாமல் வருகின்றனர்.இவர்களின் கணிதத் திறனும்

கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது. இலவச "நோட்ஸ்':இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை மூலம், அரசு,உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்'கள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்' வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் பட்டியலை, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கிறோம். மாணவர்கள் பட்டியல் சென்றபின், அரசு உடனே, இலவச "நோட்ஸ்களை' வழங்கும். அரசு தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதத்தில், நவம்பர் 15க்குள் நோட்ஸ்கள் வழங்கப்படும்,'' என்றார்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வுமுதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள்

மிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் நேரங்களில் எல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு

''அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வு எழுத, எவ்வித தடையும் இல்லை. மற்ற மாணவர்களைப் போல், அவர்களும், தேர்வை எழுதலாம்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக அளவில் உள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாக இடம் உள்ள, பள்ளிகள் மற்றும் இரு இடங்களில் இயங்கும் ஒரே பள்ளிகள் ஆகியவை, பிரச்னையில் சிக்கி உள்ளன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ,

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்தி வைப்பு

இன்று இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04.00 மணியளவில் விசாரணைக்கு வந்த வழக்கு, முக்கிய வழக்கறிஞர் இல்லாததால் அடுத்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இதனால் இன்று நடக்க வேண்டிய விசாரணை மீண்டும் நாளை முதன்மை அமர்வு முன் வருகிறது.

அகஇ - உலக பெண் குழந்தைகள் தின விழாவை 11.10.2013 அன்று சிறப்பாக கொண்டாட மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

SPD - CELEBRATION OF INTERNATIONAL GIRL CHILD DAY ON 11.10.2013 REG PROC CLICK HERE...

தற்காலிக ஆசிரியர் பணி: தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை.

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டாலும் பாதிக்கும் மேல் இந்த இடங்கள் நிரம்புவதில்லை. கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளில் தான் ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளன. இந்தப்பகுதிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை என தலைமையாசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளை சரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமேசெய்ய வேண்டியுள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும் அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,?

டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.தேர்வு முடிவு வெளியீட்டிற்குப்பின், சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதி பட்டியல் தயாரிப்பு என, பல வேலைகள் உள்ளன. இவை அனைத்தையும் முடித்து, இறுதியாக, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, கல்வித்துறையிடம் ஒப்படைப்பதற்குள், பள்ளி பொதுத்தேர்வே வந்துவிடும் நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களும், முதுகலை ஆசிரியர் இல்லாததால், பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்களும், கடுமையாக பாதிப்பிற்கு

28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 28 மாவட்ட கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம்  அரசு

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலின் படி வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று 09.10.2013 விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 09.10.2013 அன்று தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.40ல் பட்டியலிடப்பட்டுள்ளது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு
என அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணை நடக்கும் என தெரிகிறது.

TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

CLICK HERE TO VIEW- FINAL KEY ANSWERS 

CLICK HERE TO VIEW - TRB- PG -RESULTS 

கற்றல் குறைபாடு கண்டறிய இன்று முதல்கட்ட தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை ஆரம்பநிலையில் கண்டறிய மாநில அளவிலான தேர்வு கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளில் இன்று நடக்கிறது. மாநிலம் அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வுகள் நடக்க உள்ளன.
எழுத்து மற்றும் வாய்மொழி என்ற இரு நிலைகளில் தேர்வுகள் நடக்கும். இதற்கான தேர்வு முறைகளை தேசிய மனநல மற்றும் ஊனமுற்றோர்களுக்கான நிறுவனம் சார்பில் "திறன் தேர்வு தொகுப்பு" வடிவமைக்கப்பட்டுள்ளது.

1/1/14 - Expected DA - Possibility Of Increase Of DA By 11%

As per the present state DA has reached 90 %. At this juncture, Central Government Employees are eagerly waiting to know the percentage of increase in the month of Jan 2014. The DA increase in the month of Jan 2014 does have certain importance in it. Because when DA reaches 100%, there is a possibility of increase of certain allowances also simultaneously.
          As per the recent publication of AICPIN value, DA has reached the height of 93.93 % at present. During the coming four months, if the AICPIN value increases by 1point, there is a possibility of DA reaching the 100 % mark. Likewise, if the average becomes 2point, there is a chance of reaching 101 % as DA. During the ensuing four months, based on the value calculation of AICPIN, it would be possible to calculate DA accurately. Still, there is maximum possibility of increase of DA by 11 %     

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை

முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்தி :
முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சம்பளம் பெறுவார்கள்.இந்த நியமனத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே உடனடியாக மேற்கொள்ளலாம்.

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.

ங்கீகாரம்இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.இயக்குனர் பிச்சை பேசியதாவது: அங்கீகாரம் இல்லாத, மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரத்திற்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு உடல், மன ரீதியாக தண்டனை அளிக்கக் கூடாது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு பிச்சை பேசினார்.

2013-ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது

ஸ்டாக்ஹோம், அக். 8-

உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசு சமூக, அறிவியல் சேவைகளில் ஈடுபட்டோருக்காக ஆண்டுதோறும் நார்வே, சுவீடன் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்கு நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பெல்ஜியத்தின் இயற்பியல் விஞ்ஞானி பிராங்காய்ஸ் எங்லெர்டும், பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் ஹிக்சும் இப்பரிசை கூட்டாக பெறுகின்றனர் என்று ராயல் சுவீடிஸ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: 3 மாதத்தில் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.
பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால் தகுதி இருந்தும் மாற்றுத் திறனாளிகள் உரிய வேலை பெற முடியாமல் உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் புது கட்டுப்பாடு

பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.

பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது. சோதனை ரீதியில் அமல் : தேர்வு முறைகேடுகளை, முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுத்தேர்வு, 100 சதவீதம் அளவிற்கு, பாதுகாப்பான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், சமீபத்தில் நடந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித் தேர்வுகளில், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கும் திட்டம், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட பாடத் தேர்வுகள் என்றில்லாமல், அனைத்து பாடங்களுக்கும்,

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

TN GOVT LTR NO.54966 / PAYCELL / 2013-1, DATED.03.10.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of one additional increment of 3 percent of basic pay to the employees on award of Sel ection Grade/ Special Grade in the revised scales of pay – Clarifications – Regarding.

அனைவருக்கும் இனிய செய்தி:

இன்று அதிகாலை 3:00 மணி அளவில் நமது பொதுச்செயலாளர் திருமிகு. செ. முத்துசாமி Ex.MLC அவர்கள் தனது அமெரிக்கா சுற்றுப்பயணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். விரைவில் கூட்டுப்போராட்டத்திற்கான முயற்சிகள் துவங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை.திமலை,வேலூர்,விழுப்புரம் கடலூர்,காஞ்சிபுரம் மாவட்ட சிறந்த 3 பள்ளிகளுக்கு இன்று கேடயம் வழங்கும் விழா

இங்கு கிளிக் செய்து DEE  செயல் முறைகள் மற்றும் பள்ளி பட்டியல் பார்க்க

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013

TO VIEW PG ASSISTANTS / PHYSICAL DIRECTORS RESULTS 2012-13 CLICK HERE...

பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை நியமிக்க அரசு அனுமதி


பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை இளநிலை உதவியாளர்களாக நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

கருணை அடிப்படையில் வேலை

தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின் போதே இறந்தால் அவர்களின் குடும்பத்தை பாதுகாப்பதற்காக அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி கொடுக்கப்படுகிறது. இந்த பணி வழங்கப்படுவதால் அந்த குடும்பம் வறுமையில் இருந்து விடுபட்டு வாழ வழிவகை செய்யப்படுகிறது.

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.

முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணி: காலியிடங்களை உடனடியாக நிரப்ப தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள் 6,545 ஆசிரியர்களை நியமிக்க ஜெயலலிதா உத்தரவு

பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - FINAL ANSWER KEY



Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
FINAL ANSWER KEY
Telugu Geography  
English Economics  
Mathematics Commerce  
Physics Political Science  
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I  
Zoology Micro - Biology  
History Bio - Chemistry

தாமதமாகும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக 360-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதனால் தமிழக அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி. இளங்கோவன் கூறியது:

தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

2,881 காலி இடங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும்1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.

மதிப்பீடு பணி வீடியோவில் பதிவு

D.T.ED + B.A(TAMIL ) & B,LIT + TPT & D.T.ED + B.LIT அனைத்தும் NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER (B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் )-ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI-NEWS

CLICK HERE-D.T.ED + B.A(TAMIL), B,LIT + TPT , D.T.ED + 

B.LIT -RTI - QUESTION 


CLICK HERE-NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER -RTI ANSWER

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு:கல்வியாளர்கள் வலியுறுத்தல்


தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்?ஷ் அபியான்) துவக்கப்பட்டது.

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு (F1,F2..........................F12)

கம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5. 
இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும். 
மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.

குழந்தைகளை எழுதப் பழக்குவது எப்படி?.

ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழகுவது முக்கியமான ஒரு கட்டமாகும். எழுதுவது, வாசிப்பது போன்றவை பேசுவது போல் இயற்கையாக வருவதில்லை. நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த வயதில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. சிறு வயதிலே எழுதப் பழக்குகிறார்கள் என்ற காரணத்தால் சிலர் சில பள்ளிகளை நிராகரித்திருக்கிறார்கள்.

சிறு வயதில் எழுதப் பழக்குவது தவறா? குழந்தை விருப்பமில்லாமல் இருந்தால் தவறு. விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்துவதால் அவர்கள்களுக்கு எழுதுவதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும். எழுதுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு கை, கண், விரல், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். மூளையில் பதிந்துள்ள எழுத்துக்களின் வடிவங்களை விரல்கள் ஒரு இடத்தில் எழுத கையும், கண்ணும் உதவ வேண்டும்

New Health Insurance Scheme 2012- Amendment to G.O.Ms.No.243, Finance(Salaries) Department, dated 29.06.2012 - Complaints directly sent to the Commissioner of Treasuries and Accounts instead of to the Joint Director of Medical and Rural Health Services in theconcerned Districts – Amendment orders - Issued.

CLICK HERE-G.O Ms.No. 375 Dt: September 12, 2013-Complaints directly sent to the Commissioner of Treasuries and Accounts instead of to the Joint Director of Medical and Rural Health Services in the concerned Districts

புதிருக்கு பதிலை சொல்லுங்க ....பார்ப்போம்......

ஒரு அரசனின் மகளை இளைஞன் ஒருவன் காதலித்து விட்டான் அவனை சிறையில் அடைத்த அரசன் இளைஞனுக்கு ஒரு விநோதமான தண்டனை அறிவித்தான் அதன்படி சிறையில் இருந்து வெளியேற இருவாசல்கள் உள்ளன ஒருவாசலின் வழியே வெளியேறினால் பாதாளக்குழிக்குள் விழுந்து இறக்க நேரிடும் மற்றொரு வாசலின் வழியே வெளியேறினால் தப்பிக்கலாம்  ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு காவல்காரர்கள் உண்டு
இரண்டு காவல்காரர்களுள் ஒருவன் உண்மை பேசுபவன் மற்றொருவன் பொய்பேசுபவன் இரண்டு காவல்காரர்களுக்கும் தப்பிக்க வைக்கும் வைக்கும் வாசல்தெரியும் மேலும் யார் உண்மைபேசுவது  யார் பொய் பேசுவது எனவும் தெரியும்

இளைஞனுக்கு யார் உண்மை பேசுவது யார் பொய் பேசுவது என சொல்லாமல் இரண்டு காவல்காரர்களில் ஒருவரிடம் ஒரே கேள்வி மட்டும் கேட்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது அதன்படி சிறையில் இருந்து தப்பித்து வந்தால் தன் மகளை மணந்து கொண்டு இந்த நாட்டிற்க்கே  இராஜாவாக இருக்கலாம் இல்லை என்றால் பாதாளக்குழிக்குள் விழுந்து இறந்து போக வேண்டும் என்று தண்டனை அளிக்கப்பட்டது  .இளைஞன் ஒரே கேள்வியை கேட்டு சிறையில் இருந்து தப்பித்து வந்து அரசனின் மகளை மணந்து  நாட்டிற்க்கே  இராஜா ஆனான். இளைஞன் கேட்ட கேள்வியை உங்களால் யூகித்து சொல்ல முடியுமா  ?  உங்க IQ வை ஒத்துக்கறேன் .

விடை

நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்

முதலில் அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை எடுத்துக்கொள்வோம். 
1. ஒரு வலைப்பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பக்கத்தில் மேலும் கீழும் செல்ல தயவு செய்து Mouse -ஐ பயன்படுத்தாதீர்கள்.. Space Bar-ஐப் பயன்படுத்துங்கள். 

2. ஸ்பேஸ்பாரைத் தட்டும்பொழுது அந்த பக்கத்தின் கீழுள்ள பகுதியைக் காட்டும். 

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும்மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, புத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்ப, பிரித்துஅடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படி, இருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு, நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள்- கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படஉள்ளன

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.
எனவே மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாகநிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும்,அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .     எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்தசாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கணினிக்கு அடுத்த தற்பொழுது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் டேப்ளட் பி.சி கள்,

பள்ளிகல்வி-07.10.2013 மற்றும் 08.10.2013 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் ,டி.பி.ஐ வளாகத்தில் கருணை அடிப்படை நியமன ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

CLICK HERE- பள்ளிகல்வி இயக்குநர் செயல் முறைகள் 76687/ஜே 4/2011..நாள் -28.09.2013-பள்ளிகல்வி-கருணை அடிப்படை நியமன ஆய்வுக் கூட்டம்

TamilNadu State and Subordinate Services Rules

Click to View TamilNadu State and Subordinate Services Rules

TN Govt. Servants Conduct Rules

Click to View  Gazatte copy


Click to View print copy

Fundamental Rules of the TamilNadu Government

Click to View Fundamental Rules of the TamilNadu Government (327 PAGES)

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்!!!



குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகைய மலச்சிக்கலானது குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதோடு, வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆகவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. இத்தகைய மலச்சிக்கல் குழந்தைகளுக்கு உள்ளது என்பதை மலம் கழிக்க திணரும் போது, திடீரென்று உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், காய்ச்சல், வயிற்று உப்புசம், சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றைக் கொண்டு பெற்றோர்கள் அறியலாம்.
இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது உணவுகள் தான். ஆகவே குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுத்து வந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம். இப்போது குழந்தைகள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் போது கொடுக்க வேண்டிய சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை கொடுத்து, அவர்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

TamilNadu Civil Services (Discipline & Appeal) Rules

Click to View  TamilNadu Civil Services (Discipline & Appeal) Rules

அரசு ஊழியர் நடத்தை விதிகள்


வாக்காளர் சேர்ப்பு பணியில் ஆசிரியர்கள்

: வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான மனுக்களைப்பெற, ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1.1.2014 ம் தேதியை தகுதி நாளாக்கொண்டு, 18 வயது நிரம்பிய, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, இன்றும் (அக்.,6) அக்.,20 மற்றும் 27 ல் நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க(படிவம் 6), பெயர் நீக்கம் செய்தல்(படிவம் 7), திருத்தம் மேற்கொள்ளுதல்(படிவம் 8), ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல்(படிவம் 8"ஏ') ஆகியவற்றுக்கான மனுக்களை, பொதுமக்கள் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில், தரவேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட, அப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர், அதை பெற்று, சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்புவர். ""மனுவிலுள்ள விபரங்கள், சரிபார்க்கப்பட்ட பின், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

web stats

web stats