rp

Blogging Tips 2017

அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்.

அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.அரசு பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 10ம் வகுப்பு வரை முன்னேறிய பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழை கூட சரியாக வாசிக்க தடுமாறும் நிலையில் இருப்பதால் வாசிப்புத்திறனை

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு.

தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள,

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர்களுக்கு இன்று பயிற்சி.

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு தொடர்பாக முதன்மை கருத்தாளர்களுக்கு நேற்று (25ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகியது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான
அனைவருக்கும் கல்வி இயக்கக பயிற்சிகளான படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் மேம்படுத்தலுக்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை முதன்மை கருத்தாளர் பயிற்சிக்கு மாநில கல்வியியல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில் கூட்டுப் போராட்டம்

இன்று சென்னை, திருவல்லிகேணி, மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இயக்ககங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உரிய முடிவுகளை மேற்கொள்ள இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கூட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த இயக்ககங்களுடன் பேச பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து விரைவில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள  முக்கிய இயக்ககங்கள் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் களின் மனக்குமுறல்-இது எவ்வகையில் நியாயம்?எங்கள் குரல் அரசுக்கு எப்போது கேட்கும்?

taakootani வலதலத்தில் பிரசுரிக்க மின்னஞ்சல் மூலம் வந்த கோரிக்கை இங்கே கிளிக் செய்து கடிதத்தை வாசிக்கவும்

The World's Best School System ஷாங்காய்

(plastic spatula/flickr)
by Heather Singmaster
China has a long tradition of respect for education. In fact, there is much societal and family pressure to do well academically. This has fostered education reform throughout history at many levels. While the entire country has made strides in education, Shanghai is at the forefront as it has been given special authority to experiment with reform before the rest of the country. With its recent rankings at the top of the PISA 2009 exam, all eyes will be on how these reforms were made. 
Shanghai, the largest city in China, was the first to achieve one hundred percent primary and junior high school enrollment. It was one of the first to achieve almost universal secondary school attendance. Also notable is that all students in Shanghai who want to attend some type of higher education are able to do so. Universal education involved including children of migrant workers from rural areas of the country – amounting to 21 percent of school children in the city. (With a population of nearly 20 million, that's nearly four million migrant school children.) In other parts of China, these children may be seen as a problem. Shanghai, however, is a city fueled by migrants, and it embraced this population and integrated these children into its classrooms.

ஷாங்காய் ரகசியம்? தி ஹிந்து கட்டுரை


Photo: ஷாங்காய் ரகசியம்? தாமஸ் எல். ப்ரீட்மேன் சீனாவுக்குச் செல்லும் போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர் கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். மூன்று தசாப்தத் திட்டம் சீனத்தைப் பற்றி நல்ல விதமாகவே நினைப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் இதுதான். “இன்றைக்கு நாம் பார்க்கும் சீன வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேர்ந்துதான் இந்த வெற்றியை அவர்களுக்கு அளித்துள்ளன. கல்வித் துறையிலும் சாலை, இருப்புப் பாதைகள், தகவல்தொடர்பு, மின்சார உற்பத்தி, துறைமுகங்கள் போன்ற அடித் தளக் கட்டமைப்புத் துறையிலும் அவர்கள் மேற்கொண்ட முதலீடும் உழைப்பும்தான் இன்றைக்கு சீனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கைகொடுக்கின்றன.” இந்த இரண்டு கருத்துகளில் எது சரி என்று சிலர் பந்தயம் கட்ட முற்படலாம். ஆனால், நான் பந்தயத்துக்குத் தயாரில்லை. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அது ஏற்கெனவே கல்வித் துறையிலும் அடித்தளக் கட்டமைப்பிலும் மேற்கொண்ட முதலீடுதான் காரணம் என்பதை உணர வேண்டும் என்றால், ஷாங்காய் நகரத் தொடக்கப் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள். ‘டீச் பார் அமெரிக்கா’ என்ற இயக்கத்தின் நிறுவனர் வெண்டி காப்புடனும் ‘டீச் பார் ஆல்’ இயக்கத் தலைவர்களுடனும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்த இயக்கம் 32 நாடுகளில் செயல்படுகிறது. சீனத்தின் மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் மிக மோசமான பள்ளிக்கூடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்வதுதான் இயக்கத் தலைவர்களின் நோக்கம். சர்வதேச அளவில் ஷாங்காய் நகரப் பள்ளிக்கூடங்கள் மட்டும் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை ஆராய முற்பட்டோம். 15 வயது மாணவர்களின் கணிதத் திறன், அறிவியல் பாடத்திறன், பாடம் படிக்கும் திறன் ஆகியவற்றை 65 நாடுகளிலிருந்து தேர்வுசெய்து சோதித்ததுடன் ஒப்பிட்டும் பார்த்ததில் ஷாங்காய் சிறப்பிடம் பெற்றது. ஷாங்காய் பள்ளிகளின் ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்க அந்த நகரில் உள்ள குவாங்வெய் தொடக்கப்பள்ளியைத் தேர்வுசெய்தோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 754 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. 59 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை என்று கண்டுகொண்டோம். அதாவது, ரகசியம் ஏதுமே இல்லை. ஒரு பள்ளிக்கூடத்தின் தேவை ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், எதெல்லாம் தேவையோ அதில் இடைவிடாமல் அக்கறை செலுத்தப்படுவதுதான் இந்தப் பள்ளிக்கூடங்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷென் ஜுன் என்ற ஆசிரியை. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் சுமார் 40% பேர் அடிக்கடி இடம் மாறி வேலைசெய்யும் சாதாரணத் தொழிலாளர்கள். அதிகம் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் தங்களுடைய வேலை நேரத்தில் 70% நேரத்தைப் பாடங்கள் நடத்துவதிலும் 30% நேரத்தைக் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் அடுத்து நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் திட்டமிடுவதிலும் செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் இருப்பதைவிட சீன ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக இருப்பதைக் காண்கிறேன். தெங் ஜியோ இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கூடம் காலை 8.35 மணிக்கே தொடங்கிவிடுகிறது. மாலை 4.30 மணி வரை நடக்கிறது. ஒரு நாளைக்குத் தலா 35 நிமிஷங்கள் என்று 3 பாடங்களை நடத்துகிறார் தெங் ஜியோ. மூன்றாவது வகுப்பில் அவர் பாடம் நடத்தும்போது நானும் மாணவர்களுடன் அமர்ந்து பின்னாலிருந்து கவனித்தேன். பாடத்தை நடத்துவது மிக அற்புதமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வகுப்பில் நேரம் வீணடிதாமஸ் எல். ப்ரீட்மேன்

சீனாவுக்குச் செல்லும் போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர் கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட;ம்: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் ஆசிரியர்கள் ஆதங்கம்

ஊட்டி "செஸ்' விளையாட்டை ஊக்கவிக்கும், மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு, பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது; முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக, மாவட்டந்தோறும், கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன; மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள், 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ, மாணவியர் வீதம், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில்,

1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்

click here-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர் தனது கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு எழுதிய விண்ணப்பம்


Click here -G.O. 340 Date 26.8.2010 Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission


THANKS -Mr.T.S.ஜேசுராஜ் --சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் -
Phone No -96 5552 5552 , 90 4332 2120

எது மகிழ்ச்சி?? நன்னெறி புகட்டும் கதை

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.

எளிய வழியில் கணிதம் கற்பிக்க-அனைத்து கணித செயல்பாடுகளுக்கும் ஆன்லைன் விளையாட்டு வடிவில் கற்பிக்க ஓர் இனையதளம்

இங்கே கிளிக் செய்து ஆன்லைன் விளையாட்டு பக்கத்திற்கு செல்லவும்

தனியார் பள்ளி இடப்பிரச்னை விதிகளை தளர்த்த அரசு முடிவு

தனியார் பள்ளிகள் இயங்க குறைந்தபட்ச நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் இடம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். 2000 பள்ளிகள் இந்த பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. தமிழக முதல்வர் தனிப் பிரிவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளிகள் சங்கம் சார்பில் விதிகளை தளர்த்தகோரி மனு கொடுத்தனர்.

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:


காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 


1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. 

அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

வேலூர் சேண்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவன் காயம்: போலீசில் புகார்

வேலூர் கொணவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படித்து வருபவர் இம்ரான்பாட்சா (வயது 13). நேற்று காலை மாணவன் பள்ளிக்கு வந்தார். காலை இடைவேளைக்கு பிறகு அவர் தாமதமாக வந்தார். இதை பள்ளி ஆசிரியர் உலகநிதி கண்டித்தார்.

குரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்.

டி.என்.பி.எஸ்.,யால் நடத்தப்படும் குரூப் - 1 தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்
சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெறுகிறது.www.tnpsc.gov.in தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் contacttnpscgmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 18004251002-இன் மூலமாகவோ கேட்டுத் தெளிவு பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்சான்றிதழ்கள் அக்.25 (இன்று) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு எழுதிய மையங்களிலேயே
சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000 தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. 34 ஆண்டுகளாக, ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும் இல்லாமல், ஓய்வு பெறுகின்றனர்.

மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், சமீப காலமாக, வகுப்பில் படிக்கும் மாணவர்களை சாப்பாடு, டீ, தின்பண்டங்களை வாங்கும் வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களின் உத்தரவை மீறக்கூடாது என கருதி, அவர்கள் கூறும் வேலைகளைத் தவறாமல் செய்து வருகின்றனர். மாணவர்கள், பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்லும் நேரங்களில் வகுப்பில் ஆசிரியர் கற்றுத்தரும் பாடத்தினை கவனிக்க முடியாமல் போகிறது.

பெருக்கல் (11க்கு மேல் 20க்கு கீழே உள்ள) டீன் எண்கள்


டீன் ஏஜ் என்பது ஒரு பரவசமான பருவம். எல்லா பெருசுகளையும் இன்னொரு முறை வராதா என்று ஏங்க வைக்கிற பருவம். 13க்கு மேல் 20க்கு கீழ் உள்ள எல்லா எண்களையும் டீன் எண்கள் என்பார்கள். Thirteen, Fourteen, Fifteen, Sixteen, Seventeen, Eighteen, Nineteen என எல்லா எண்களும் teen என முடிவதால் இந்த செல்லப் பெயர். இந்த செல்ல எண்களை ஒன்றுடன் ஒன்று எளிதாகப் பெருக்க ஒரு தனி உத்தியை பயன்படுத்தலாம். நம்முடைய கணக்கில் 12ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி

கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.
கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 143 பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருப்பது தெரியவந்தது. உடன், இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சு வேளி ரயில் நிலையம் அருகேயுள்ள, ஜி.எல்.பி., பள்ளி இந்த கல்வியாண்டு முதல் மூடப்பட்டது. இங்கு பயின்ற மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வேறு சில பள்ளிகளும் மூடப்பட்டன. மீதி பள்ளிகளை மூடுவது தொடர்பாக, வரும், 28ம் தேதி நடைபெறும் , மாநில கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில்
வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.

குரூப்–2 தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை.
இதனால், இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், புலம்பி வருகின்றனர்.இரு துறைகளிலும், பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும், இதுவரை நடக்கவில்லை. இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை என, தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ஆங்கில ஆசிரியர் மட்டுமே, இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே, ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது:விரைவில், டி.இ.டி., தேர்வு முடிவு வரப்போகிறது. அப்போது, தொடக்கக் கல்வித் துறையில், 1,500 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில், 2,881 முதுகலை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை.

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கிடையே பள்ளிக் கல்வியின் நிலை குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் பல்வேறு தனியார் அமைப்புகள் சர்வே நடத்தி வருகின்றன.

ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது வரை 50,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது எப்படி என்பது புரியவில்லை. 

புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒரு கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெயிலாகக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். அதற்காக சிறப்பு வகுப்புகள் காலை அல்லது மாலையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படுகிறது

ஈ - வழியில் திருக்குறள் கற்போம்

http://www.tamillexicon.com/thirukkural/ திருக்குறளுக்கு ஒரு இணைய பக்கம் உங்களது பக்கத்தில் இதை பகிர்ந்து கொண்டால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் சென்றடையும்.

உலகப் பொது மறையாம் திருக்குறள் கற்க உதவும் தளம்

என் மேல் கிளிக் செய்யுங்க.....

மின்னல் கழித்தல்

100, 1000, 10000, 100000, 1000000, 10000000
இந்த எண்களிலிருந்து சுலபமாக கழிப்பது எப்படி?

"உன் கையில 10 சாக்லேட் இருக்கு. 5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?"
"மீதி எதுவும் இருக்காது சார்?"
"ஏன்?"
"ஏன்னா மீதியை நான் சாப்பிட்டுவிடுவேனே?"

கழித்தல் கணக்கு பற்றிய நிரந்தரமான, ஜாலியான ஜோக் இது. இப்போ நான் சொல்லித் தரப்போற உத்தி இந்த ஜோக்கை விட ஜாலியானது. எளிதானது.

எல்லாமே ஒன்பதிலிருந்து. கடைசி மட்டும் 10லிருந்து. இந்த மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் கண் மூடித் திறப்பதற்குள் பின்வரும் கழித்தல் கணக்குகளை போட்டுவிடலாம்.

1000 - 326
  • ஆயிரத்தை விட்டு விடுங்கள்
  • 326ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 6. அதை பத்திலிருந்து கழித்தால் 4.
  • 2ஐ 9லிருந்து கழித்தால் 7
  • 3ஐ 9லிருந்து கழித்தால் 6
  • 674 இதுதான் விடை.

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

DEE - COURT CASE REG REVIEW MEETING ON 26.10.2013 AT CHENNAI PRESIDED BY DEE REG PROC CLICK HERE...

5 std மனித மூளை மற்றும் அதன் பாகங்கள் - வீடியோ விளக்கம்

click here to see the video

நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலம் தெனாலிராமனும் திருடர்களும் கதை - வீடியோ வடிவில்

click here to view the video

பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி ?

குமாரபாளையம் பகுதியில்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை

Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாணை (G.O.No.259. Dt.17.12.2007).

Click Here to Download the G.O.

புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், தனியார் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.

வரும்,மார்ச்,ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி,புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்,
தேர்வுத் துறை,கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே,புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என,தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது,தனியார் பள்ளிகளுக்கு,தேர்வுத் துறை வைத்துள்ள அடுத்த,செக்!.பொதுத் தேர்வு எழுதுவதற்கான மையங்களின் எண்ணிக்கை,ஒவ்வொரு ஆண்டும்

ஐந்தாம் வகுப்பு-இரண்டாம் பருவம்-தமிழ் பாடம் பாடல்கள் MP3 வடிவில்

இங்கே கிளிக் செய்து தலைவாரி பூச்சூடி பாடல் டவுன்லோடு செய்யவும்

இங்கே கிளிக் செய்து சிரிப்பு சிரிப்பு பாடல் டவுன்லோடு செய்யவும்

இங்கே கிளிக் செய்து விஞ்சானத்தை வளர்க்கபோறேண்டி பாடல் டவுன்லோடு செய்யவும்

தாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உயர்வு ஆசிரியர்கள், முடிவு எப்போது?

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013 புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.
தகவல் பரிமாற்றம்: திரு.கலியமூர்த்தி விழுப்புரம்.

IGNOU TERM END EXAM 2013-DECEMBER EXAM SHEDULE

Es 331-9.12.13
332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12

புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது


வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே, புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை வைத்துள்ள அடுத்த, செக்!.
பொதுத் தேர்வு எழுதுவதற்கான மையங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும், 50 முதல் 100 வரை அதிகரிக்கின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தங்கள் பள்ளியை, தேர்வு மையமாக அங்கீகாரம் பெறுவதை, மிகவும் முக்கியமாக கருதுகின்றன. ஏனெனில், அப்போது தான், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன், தேர்வு மைய அங்கீகாரம் இருப்பதை, கவுரவமாகவும்

ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்

ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம் ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த காலத்தில், ஆசிரியர்களுக்கு, கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு அளிக்க முன்னுரிமை பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் மற்றும் தற்காலிக பட்டியல் தயாரித்தல் சார்பு

CLICK HEREதமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி )செயல்முறைகள் .ந.க.எண் 70737/அ4/இ3/2013.நாள் 18.10.2013-அமைச்சுப் பணியாளர் முன்னுரிமை பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல்

இன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது

சென்னை உயர்நீதி மன்றத்தில் இரட்டைப்பட்டம் மீண்டும் இன்று
(24.10.2013 ) விசாரணைக்கு வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீயரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால்
எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. TET RESULT விரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு வரும் என்ற ஆவலோடு இருப்போம்...

இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

CLICK HERE TO DOWNLOAD - THE GAZETTE OF INDIA LETTER- D.T.Ed + BA / B.SC TO ELIGIBLE TO WORK TEACHER IN 1 TO 8th STANDARD

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? - பதறுகிறார் தங்கர் பச்சான்

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியின் துவக்க ஆண்டுகளை ஆங்கிலம் வழியாகத் தொடங்குகிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியில் முன்பை விட அதிகமாக கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், ஆங்கிலக் கல்வி ஒன்றுதான் அந்தத் தரத்தைக் கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. விளைவு, தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளிலேயே பயிற்று மொழியை, ஆங்கிலமாக மாற்ற அரசு முடிவெடுத்தது. இதற்கு தமிழ் மீதும், தமிழ் வழிக் கல்வி மீதும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களிடமிருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லையாம் -RTI NEWS

Click here-தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குநரின் செயல் முறைகள் ந.க.எண் 14168/கே/இ1/2013-நாள் 08.03.2013-தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லை

அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.அரசு பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று குகை மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்டது. இதில் 180 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவது குறித்து விளக்கப்பட்டது.

செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது

செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்


தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத பள்ளிகளை இணைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அத்தகைய பள்ளிகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அனுப்பும் படியும் உயரதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதனடிப்படையில் இணைக்கப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரமும் இது செயல்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன என்று அரசுத் தரப்பில் பூசி மெழுகும் வார்த்தைகளால் கூறப்பட்டாலும், 2 அல்லது 3 பள்ளிகளை இணைத்து ஒரே பள்ளியாக்கி விட்டு மீதமுள்ள பள்ளிகளை மூடுவது தான் தமிழக அரசின் திட்டமாகும். தொலைநோக்குப் பார்வையில்லாத, மாணவர்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் (SCHOOL PROFILE) ஆண்-லைனில் பதிவு செய்ய உத்தரவு.

DGE - TO ENTRY HS / HSS DETAILS THROUGH ONLINE REG PROC CLICK HERE...

மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

SCERT - READING / WRITING & ARITHMETIC IMPROVEMENT TRAINING REG PROC CLICK HERE...

வெளிநாடுகளில் கிடைக்கும் சில முக்கிய உதவித்தொகை திட்டங்கள்

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பிரிட்டன்
BRITISH CHEVENING SCHOLARSHIPS

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர் என இரண்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது சார்பாக  தேர்வு செய்ய "OPTION" வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது முன்னுரிமைத் தேர்வு  உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநரால் திரும்ப பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல் தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் தொடர்பாக

Click here-பள்ளிகல்வி இயக்குநரின் செயல் முறைகள் ந.க.எண் .086532/எம் /இ1/2013,நாள் -09.10.2013 ''FIRE SAFETY TO SCHOOL STUDENTS'' உரிய நடவடிக்கை எடுத்தல் சார்பாக

10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் விற்பனை. மையங்கள் விவரம்

இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

SSA பள்ளி கண்காணிப்பு படிவம்

click here for more details

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு

தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது. இந்த சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழக த்தின் நிதியில் இருந்து அரசு பெற்று தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி - ஐகோர்ட் உத்தரவு

2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு - இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு
ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பொது அறிவுத்தாள் 1, 2, 3ஆகியவற்றில் விடைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம். ஒரு பகுதி தமிழிலும் மறு பகுதி ஆங்கிலத்திலும் கூட விடையளிக்கலாம்.
ஆனால் பொது அறிவுத்தாள் 2–ல் உள்ள பகுதி–2 தமிழ் மொழி, அல்லது ஆங்கில மொழி பகுதியை பொறுத்தமட்டில் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து விடை அளிக்க வேண்டும். இது குறித்து சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail,com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மைய தொலைபேசி எண் 1800 425 1002 மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய கலைகள் 64-தமிழ் விளக்கத்துடன் அறிவோம்

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு

GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PREFERENCE SHOULD BE GIVEN TO THOSE WHO R TRANSFERED DUE TO UPGRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG ORDER CLICK HERE... 

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள்
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி


6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

SPD - 6,7,8 ALM GRADE FORMAT & GUIDELINES FOR ALM GRADING REG PROC CLICK HERE...

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால்,உடனே உணவு கொடுங்கள்,அரட்டையிலோ, சோம்பலிலோ,வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர் 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு


இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

மின்னல் பெருக்கல் : மூன்று இலக்க எண்கள்! 100க்கு அருகில் உள்ள இரு எண்களை பெருக்குவது எப்படி? (100ஐ விட சற்று பெரிய எண்கள்)

முந்தைய அத்தியாயத்திலிருந்து ஒரே ஒரு சிறிய மாற்றம்தான். 100ஐ விட சற்று பெரிய எண்கள் என்பதால் இறுதியில் கழிப்பதற்குப் பதிலாக கூட்டப் போகிறோம்.

உதாரணம் : 1

108
107 x
---------
11556
---------

மின்னல் பெருக்கல் : 100க்கு அருகில் உள்ள எண்கள். இரு இலக்க எண்ணை மூன்று இலக்க எண்ணால் பெருக்குவது எப்படி?

93 x 114 = ?
91 x 115 = ?
97 x 119 = ?

உதாரணம் : 1

93
114 x
---------
10602
---------

அறிவியல் பாடம் எளிதாய் நடத்த உதவும் வலைதளங்கள்

இதயம் பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்

Pls Click http://www.innerbody.com/image/card02.html

மூளை  பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்

Pls Click http://www.innerbody.com/image/nerv02.html

சிறுநீரகம்   பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்

http://www.innerbody.com/image_urinov/dige05-new.html

செரிமானம் பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்

http://www.innerbody.com/image_digeov/dige11-new.html

பெருக்கல் - இரு இலக்க எண்கள்

எந்த இரு இலக்க எண்ணையும் இன்னொரு இரு இலக்க எண்ணால் 6 வினாடிகளுக்குள் பெருக்க முடியும். தொடர்ந்து முயற்சி செய்தால் மூன்று வினாடிகளில் போட்டுவிட முடியும். என்னுடைய வகுப்புகளில் படிக்கும் சில மூன்றாம்கிளாஸ் வாண்டுகள் 6 வினாடிகளில் அசத்துகிறார்கள். எப்படி என்று பரபரக்கிறதா? அடுத்த வரியிலிருந்து ஆரம்பிக்கிறது நம்ம மின்னல் பெருக்கல்.

உதாரணம் 1 - 32 x 21 = ?
புரிந்து கொள்ள வசதியாக இருக்கட்டும் என்று சொல்கிறேன். வருகின்ற விடைகள் இடது பகுதி, நடுப் பகுதி மற்றும் வலது பகுதி என மூன்று தனித் தனியான பகுதிகளாக இருக்கும்.

200க்கு அருகில் உள்ள எண்களை 3 வினாடிகளில் பெருக்குவது எப்படி?



    200க்கு அருகில் உள்ள எண்கள்களை பெருக்கும்போது மனதில் இருக்க வேண்டியவை
அடிப்படை எண் 100
200 = 100 x 2
கொடுக்கப்பட்டிருக்கும் எண்களுக்கும் 200க்கும் வித்தியாசம் எத்தனை?இது மூன்றும் மனதில் இருக்க வேண்டும்.

CCE Activities - Album

CCE Activities - Album - Click Here

Thanks to Mr. Sanjeevan Kannaiyan,
PUMS, Othiyathur.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக
வெளியிட்டுள்ள அறிவிப்பு..
 தமிழ்நாடு மின்சார வாரியம், 
அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ்,
 நுகர்பொருள் வாணிபக் கழகம்,

வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின்”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.

click here to download the Govt Letter and  dee proceeding of Ashoka chakra award for Students / Teachers reg

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் :-

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாகஎரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராகவைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளித்து பொது மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது

இன்று காலை அரசாணை எண்.279 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.10.2013ன் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் தொடக்கக்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு  நடைப்பெற்றது

TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்

தொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி - தி தமிழ் இந்து கட்டுரை

தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்துள்ளதன் விளைவாக - கடலூர் மாவட்டத்தில் உள்ள 161 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 12 நடுநிலைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 109 மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட 161 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆங்கில வழிக் கல்விக்கென கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை எனபதும், மேலும் தமிழ் வழிப் பள்ளிகளில் படிப்பவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகையும் ஆங்கில வழி மாணவர்களுக்கும் என்பதும்தான்.

எளிதில் ஆங்கிலம் கற்பிக்க-- Basic Verbs

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர்.

பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜெ. கு. லிஸ்பன் குமார்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், லேப்-டாப், காலணி, நோட்டு, புத்தகப்பை, ஜியாமென்டரி பாக்ஸ், அட்லஸ், கலர் பென்சில், கிரையான் என 14 விதமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன

முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்
,மாநிலம் முழுவதும்,14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.     
  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில்நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இவ் வழக்குகள் இன்று  (21 அக் ) நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது .
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு:
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதியரசர் தடையேதும் விதிக்கப்படாததால்  இன்று முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்...
28 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பின் புதிய பட்டியலை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவு .

தொடக்கக் கல்வி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு

தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் 2013-14ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. இப்பிரச்சனை குறித்து ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கும், இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து மேற்காணும் ஒன்றியங்களில் ஆசிரியர்களின் எதிர்ப்பால் தடைப்பட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு

DEE - TAKE IMMEDIATE ACTION FOR TEACHERS FESTIVAL ADVANCE REG PROC CLICK HERE... 

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - தினமணி கட்டுரை

Photo: தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - தினமணி கட்டுரை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரசு ஒதுக்கீடு

ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம், பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.
அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) கடந்த 2008-09 ம் கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான, இழப்பீட்டு தொகையை அரசே ஈடு செய்யும் என கூறியது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது.
கடந்த 2011-12ம் ஆண்டு, ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012-13ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், பள்ளிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகளில் நிதி கையிருப்பு என்பதே இல்லை. தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையிலுள்ள பணத்தை செலவழித்து வந்தனர். இந்த நிதியை ஒதுக்கித்தருமாறு, அவர்கள் அரசுக்கு பல்வேறு கட்டங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இதற்காக அரசு 2012-13, 2013-14ம் ஆண்டுக்கு ஆண்டுக்கு தலா ரூ.20 கோடியே 50 லட்சம் வீதம், 41 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படாது, என அரசு முதன்மை செயலர் சபீதா, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது

மழை சீசன் தொடங்கி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, பழைய பழுதான கட்டிடங்களில் வகுப்பறைகள் நடந்தால், அதில் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில்தான் கற்பிக்க வேண்டும்

நாமக்கல்,நாமக்கல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில்தான் கற்பிக்க வேண்டும் நாமக்கல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில் தான் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது. மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்து சாமி அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் பழனியப் பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:- கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசு ஊதியத்தை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.5500 அடிப்படை ஊதியத்தில் குறைக்கப்பட்டு உள்ளது தற்போது வரை மூவர் குழுவாலும் நீக்கப்பட வில்லை. அரசு இக்குறைபாட்டை தீர்க்காவிடில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்துபோராடுவது. தமிழ்வழிக் கல்வி 1.4.2003-க்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பங்க ளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமலாக்க கேட்டுக் கொள்வது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தாய்மொழி வழிக்கல்வி தான் கற்பிக்கப்பட வேண்டும். அப் போது தான் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறும். படைப் பாற்றல் வளரும். இது உலக கல்வி வல்லுநர்களின் கூற்று. இதனை கருத்தில் கொண்டு, சுயநிதி பள்ளிகள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை தடை செய்து, தமிழ்வழி கல்வியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் இரண்டிலும் ஒரே கல்வி முறையை அமல் படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கணினி, இண்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டும். தொடக்க கல்வி நிர்வாகத்தில் வாய்மொழி உத்தரவுகளை கைவிட வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில் தான் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்து சாமி அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் பழனியப் பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:- கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசு ஊதியத்தை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.5500 அடிப்படை ஊதியத்தில் குறைக்கப்பட்டு உள்ளது தற்போது வரை மூவர் குழுவாலும் நீக்கப்பட வில்லை.

அரசு இக்குறைபாட்டை தீர்க்காவிடில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்துபோராடுவது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கி ஆணையிட வேண்டும். அரசு, இக்குறைபாட்டை நீக்காத பட்சத்தில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.


தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு தடை : தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி கோரிக்கை

மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறவும், படைப்பாற்றல் வளரவும், தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வியை தடை செய்து, தமிழ்வழிக் கல்வியை உருவாக்க வேண்டும்' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்,

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கி ஆணையிட வேண்டும். அரசு, இக்குறைபாட்டை நீக்காத பட்சத்தில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியைத் தடை செய்ய வலியுறுத்தல்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியைத் தடை செய்து, தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியைத் தடை செய்து, தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சி.மணி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி சிறப்புரையாற்றினார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு இன்று-20/10/13 நாமக்கல் நகரில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த போராட்டம் குறித்து முக்கிய முடிவு

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு இன்று-20/10/13 நாமக்கல் நகரில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது
முதலில்

.அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து

1.இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 என மாற்றம் செய்து,ஊதியக்கட்டு 1லிருந்து 2க்கு மாற்றம் செய்யக்கோருவது

2.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்

ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகள் குறித்து கோரிக்கை வைப்பது.

அதற்க்குப்பிறகும் அதவது

முதல்வரை சந்தித்து முறையிட்ட பிறகும்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உடனடியாக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டகளத்தில் குதிப்பது என முடிவாற்றப்பட்டது.
மேலும்

முக்கிய நிகழ்வாக

பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C,அவர்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மூத்த தலைவரான திரு.ஈஸ்வரன் அவர்களுடனும்

தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலர் திரு மணிவாசகம் அவர்களுடனும்

தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்
.
அவர்களும் இம்முடிவு குறித்து மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தனர்.

தற்போது
இதனைத்தொடர்ந்து முழு வீச்சில் மற்ற சங்கங்களின் மாநில தலைமைகளுடன் இது குறித்து பேசுவதற்கான முயற்சிகள் பொதுச்செயலர் திருமிகு முத்துசாமி அவர்களால் நடைபெற்று வருகின்றன
தகவல்
திரு.க.செல்வராஜ்
.மாநில துணைச்செயலர்
.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
.நாமக்கல்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - 20.10.2013 நிழற்படங்கள்

பிஞ்சுக் குரல்களுக்குப் பின்னால்…… - தி இந்து

Return to frontpageஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. பிரம்மாண்டமான குரல் தேர்வில் தோற்றுப்போனதற்காக ஒரு சின்னஞ்சிறிய குழந்தை அழுதுகொண்டிருந்தாள். அவள் ஏன் தோற்றுப் போனாள், என்பதை நடுவராக உள்ள ஒரு பாடகி விளக்கிக் கொண்டிருந்தார். நீர்க் குமிழியைப் போன்ற மெல்லிய அந்தக் குழந்தையின் மனம் அவமானத்தால் உடைந்துகொண்டிருந்ததுபோலத் தோன்றியது. அக்காட்சியைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மனம் பாரமாகிவிட்டது.

ஆங்கிலம் எளிமையாக கற்பிக்க உதவும் வலைதளம்-


http://www.eltfamily.com

பல்லூடக பாதுகாப்பு - Tamil Cyber crime PPT Free download

நண்பர்களே 
 தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதவளர்ச்சி அன்றாட மனித வாழ்வில்
  தொழில்நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாகமாற்றியுள்ளது.
 இப் பரிணாம வளர்ச்சியின் ஓர்அங்கமான இணையம் (Internet) மற்றும் 
அலைப்பேசியின் (MOBILE) தோற்றமும் அதன் துரிதவளர்ச்சியும் நம்மை 
 பிரமிக்க வைக்கின்றது.  பள்ளிசெல்லும் மாணவனாயினும் சரி ஓய்வு பெற்றவயோதிகராயினும்
  அவர்களின் அன்றாட வாழ்வில்தன்னை ஒரு தவிர்க்க முடியாத 
 சாதனமாகஇணையமும் அலைபேசியும் நிலை நிறுத்திகொண்டுள்ளது
 click here for cyber crime PPT download

நவீன தகவல் தொடர்பு

Rates of Income-Tax on Salaries for AY 2014-2015 , FY 2013-2014:

CLICK HERE- RATES OF INCOME-TAX AS PER FINANCE ACT, 2013

எளிய வழியில் ஆங்கிலம் கற்க - Silent letters in the English language

ஆங்கிலம் - Silent letters in the English languageSilent Letters

5 ஆம் வகுப்பு கணக்கு இரண்டாம் பருவம் - சமசீர் தன்மை கற்பிக்க உதவும் இணைய தளங்கள்

5 ஆம் வகுப்பு கணக்கு இரண்டாம் பருவம் - சமசீர் தன்மை கற்பிக்க உதவும் இணைய தளங்கள்


http://www.free-training-tutorial.com/symmetry-games.html

http://www.innovationslearning.co.uk/subjects/maths/activities/year3/symmetry/shape_game.asp

http://www.mathsisfun.com/geometry/symmetry-reflection.html

http://www.topmarks.co.uk/Flash.aspx?f=Symmetry

எளிய வழியில் ஆங்கிலம் - உறவு முறை பெயர்கள்

family

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம் - தினமலர் செய்தி

 "ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு

ஆங்கிலம் SINGULAR - PLURAL (ஒருமை - பன்மை)

2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமனம் - கல்வி அமைச்சர்

பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு

இராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிகளில் (Army Public School-APS)  ஆசிரியராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

நெட்" தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள்

நெட் தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் முக்கிய நாட்கள்

*தேர்வு நாள்-29-12-13

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-13

*வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி நவம்பர் 2

*பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய நவ5

மேலும் விபரங்களுக்கு

 www.ugcnetonline.com

தொடக்கநிலை கணிதப் பாடம் - விளக்கப் படத்துடன் கற்பிக்க உதவும் இணையதளம்

Click here-தொடக்கநிலை கணிதப் பாடம் - விளக்கப் படத்துடன் கற்பிக்க உதவும் இணையதளம்

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்



அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்

தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த வேண்டியதுள்ளது.

மெட்ரிக்., பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆசையால் அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை, இந்த ஆண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தனி புத்தகங்கள், தனி வகுப்பறை, தனி ஆசிரியர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

பொது ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.

உயர்க்கல்வி - மதுரை காமராஜர் பல்கலைகழகத்தால் வழங்கப்படும் பி.ஏ., ஆங்கிலம் (தொழிற்கல்வி) பட்டமானது, பி.ஏ., ஆங்கில (இலக்கியம்) பட்டத்திற்கு இணையானது என தமிழக அரசு உத்தரவு

Higher Education – Equivalence of Degree – B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. English Literature – Recommendation of Equivalence Committee – Orders – Click Here...

பொது வருங்கால வைப்பு நிதி - இறந்த அரசு ஊழியரின் வாரிசு நியமனம் குறித்த விதி 30ல் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு உத்தரவு

GENERAL PROVIDENT FUND – Share due to the deceased Nominee as per Legal Heirship Certificate – Amendment to rule 30 of General Provident Fund (Tamil Nadu) Rules Click Here...


web stats

web stats