rp

Blogging Tips 2017

பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

'கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

'கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.

'நீட்' தேர்வு முடிவு வெளியிட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.மதுரையைச் சேர்ந்த, ஜொனிலா உட்பட, ஒன்பது பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி. எஸ்.,- - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த, 2012ல் முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 180 வினாக்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா, 45 வினாக்கள் இடம்பெறும்.

PENSION –Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Sanction - Revised rate admissible from 1st July 2016 and 1st January 2017 - Orders – Issue

CLICK HERE-FINANCE [Pension] DEPARTMENT G.O.No.132, Dated 18th May 2017.

கடித எண்.11100/ ஓய்வூதியம்/2017 Dt: May 19, 2017 -80 மற்றும் அதற்கு மேல் வயது முடிவடைந்த ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது - தொடர்பாக

CLICK HERE- Letter No.11100/Pension/2017 Dt: May 19, 2017 Sanction of Additional Pension / Additional Family Pension to those pensioners aged 80years and above clarification – Regarding

G.O.318, date 22.05.2017 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு-CLEARED COPY-IN PDF FILE

CLICK HERE-TRANSFER NORMS-G.O 318-DATE-22.05.2017

ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்குமுன்னுரிமை

CLICK HERE-TO DOWNLOAD DEE.PRO-REG TRANSFERS NORMS

ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5

ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டது.    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே-13 அன்று சென்னையில் நடைபெற்ற  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை மாநாட்டில், முன்னுரிமை பட்டியலில் மீண்டும் பழைய முன்னுரிமையை வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டதோடு, தலைமை செயலகத்தை முற்றகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது..

G.O Ms 101 - தொடக்கக்கல்வி - தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் "RECORD SHEET" பதிலாக TC - அரசாணை வெளியீடு

Image may contain: text

தேர்வுத்திட்டம் -மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு-அரசாணை எண் 100 நாள்:22/5/17


கல்லூரியைப் போல +1ல் தோல்வி அடைந்த பாடத்துக்கு அரியர் தேர்வு.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை, கல்லூரிகளில் எழுதுவது போல அரியர் தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18ம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

தற்போது பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு, தேர்வு முறையில் எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்'

வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, வரும் கல்வி ஆண்டில் புதிதாக சேரப்போகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும் போது, பிளஸ் 1ல் எழுதியது போன்று, மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இறுதியில், 1,200 மதிப்பெண்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கான, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். இந்நிலையில், தற்போது பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு, தேர்வு முறையில் மாற்றம் உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இரண்டு முக்கிய அரசானைகள்

1 அரசாணை எண்-99 நாள்-22.05.2017

    ( 1 முதல் 10ஆம் வகுப்பு மற்றும் 11 & 12 வகுப்பு படதிட்டம் மாற்றம் குறித்து)

2.அரசாணை எண்-100 நாள்-22.05.2017
   ( +1வகுப்பில் 600 மதிப்பெண் & +2வகுப்பில் 600 மதிப்பெண் என பிரித்து வழங்கப்படும், +2 வகுப்பில் 1200 மதிப்பெண்ணை 600 மதிப்பெண்ணாக குறைத்து அரசு நடவடிக்கை )

23.05.2017 முதல் சத்துணவு வழங்க வேண்டும்

22.05.2017, பள்ளிக்கல்வி -+1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு, தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு

CLICK HERE-G.O NP-100 DATE 22.05.2017

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - செங்கோட்டையன்*

* 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்
திட்டம் அறிமுகம் செய்யப்படும்*

* 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் - செங்கோட்டையன்.*

* 2018-ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றப்படும் - செங்கோட்டையன்*

பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியீடு

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் (CEO) அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும்,இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - மலைப்பகுதி பள்ளிகளில் சுழற்சி முறையில் 1 வருடம் மட்டுமே பணியாற்ற வேண்டும் - அரசாணை எண்:-404

TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 1ல், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 555 பேரும், தாள் - 2ல், 5 லட்சத்து, 12 ஆயிரத்து, 260 பேரும் தேர்வுகளை எழுதி உள்ளனர். இத்தேர்வின், கேள்வித்தாளுக்கு உரிய தற்காலிக விடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.

உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிக ஒத்திவைப்பு

Image may contain: text

காலாவதியாகும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

TNTET OFFICIAL ANSWER KEY PUBLISHED

*.CLICK HERE - TNTET OFFICIAL ANSWER KEY - PAPER 1


*.CLICK HERE - TNTET OFFICIAL ANSWER KEY - PAPER 2

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி மாற்றங்கள் - பட்டியல்!

கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.

➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு

FLASH NEWS.... Middle School HM - Transfer- Seniority list published for All Districts

CLICK HERE FOR DOWNLOAD-MIDDLE SCHOOL HMs TRANSFER SENIORITY LIST REG

ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடமும் உடனடியாக கீழ்கண்ட விபரம் கோரியுள்ளது
01.05. 2017 அன்று பணியாற்றுவோர் விபரம், ஊதிய விபரம் ,ஊதியம் பெறுவோர் விபரம் காலி பணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு
பெறுவோர் விபரம் , தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டுவாடகை படி பெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளது

அனைத்து துறை அலுவலர்களும் நண்பர்களும் உடனடியாக உரிய விபரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..
Image may contain: textImage may contain: text

'அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து, 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை; 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும்.

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

 வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர்"இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

2ஆம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவ விடைத்தாட்களை உடன் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்க திமலை முதன்மைக்கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்திரவு


பள்ளிக்கு ஒன்று வீதம் தூய தமிழ் அகராதி வழங்க இயக்குனர் உத்திரவு


அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு


முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் திருச்செங்கோட்டில் பேச்சு.

 மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை: அமைச்சர் தகவல்அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
1-5   புதியவண்ண  சீருடை
6-10  புதியவண்ண  சீருடை  
11-12  புதியவண்ண  சீருடை 

திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசியஅவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.
இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்

'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது.தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலைமருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டது.எம்.டி., - எம்.டி.எஸ்., போன்ற அனைத்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, மாநில இடங்களுக்கும், 'நீட்' மதிப்பெண் தேவை என, அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள், 2016 டிசம்பரில் நடத்தப்பட்டன. பல்வேறு பிரச்னைகள் காரணமாக, முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் இம்முடிவுகள் வெளியிடப்பட்டன.தமிழகத்தைச் சேர்ந்த, பல டாக்டர்கள் முதுகலை படிப்புக்கு தேர்வாகினர்.

ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் ஆய்வு

முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆண்டு ஆ ய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.சிறந்த ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு


web stats

web stats