rp

Blogging Tips 2017

விடைத்தாள், காணாமல் போவது பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும் - தேர்வுத்துறை இயக்குனர்

வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.


        வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது

சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு

சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம்
வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள்

தாய்லாந்தில் பள்ளி மாணவர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் : கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்தது

தாய்லாந்தில் 850-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு, வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டு, புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், உலகம் முழுவதும் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. கேக் தயாரிப்பது, மின்னொளி அலங்காரங்கள் என உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தாய்லாந்தில் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 852 மாணவர்களை கொண்டு, இந்த மனித மரம் வடிவமைக்கப்பட்டது.

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புத் தேர்வில் சாதனைப்படைக்க அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர்

வருகிற மார்ச் மாதம் 12 மற்றும் 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவ -மாணவியர் தங்களை தயார்படுத்தி

சீர்காழி பகுதியில் 25 ஓராசிரியர் பள்ளி துவக்கம்.

சீர்காழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் நிதி உதவியுடன் பிரன்ட்ஸ் ஆப் டிரைபல் சொசைட்டி தொண்டு நிறுவனம் மூலம் கிராமங்களில் ஓராசிரியர் பள்ளி துவக்குவதற்கான விழா
சீர்காழியில்
நடைபெற்றது. வங்கி பொதுமேலாளர் குப்தா தலைமை வகித்தார்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு வாடகை ஜெனரேட்டர் வசதி.

பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை ஜெனரேட்டர் வசதியைஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான
கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் இப்போதே மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது; சென்னையிலும் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதேபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால், பொதுத் தேர்வின் போது மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு

CLICK HERE-DEE 22288/J2/2013,DT-22.10.2013- ALL HM's & OFFICERS SHOULD ACCEPT COMPUTER CERTIFICATES

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்

வாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கிவரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இருவர், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சுப்பிரமணியத்தை வகுப்பறையில் வைத்தே புரட்டி எடுத்துள்ளனர்.

தாடை எலும்பு முறிந்து, முன்பற்கள் இரண்டு உடைந்து, காது சவ்வு கிழிந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியத்திடம் பேசி

Refund of CPS amount under New Pension Scheme

Wednesday, December 4, 2013

Refund of CPS amount under New Pension Scheme: DFS Clarification dated 11-07-2012

F.No. 11/20/2012-PR
Government of India
Ministry of Finance
Department of Financial Services
Jeevandeep Building, Sansad Marg, 
New Delhi dated the 11 July, 2012

OFFICE MEMORANDUM
Subject: Refund of CPS amount under New Pension Scheme — reg.
The undersigned is directed to refer to Ministry of Defence's O.M. No. 12(3)12010/D(Civ-II) dated 12.03.2012 on the above cited subject and to furnish the following exit provisions under New Pension System : -
a. Upon Normal superannuation: At least 40% of the accumulated pension wealth of the subscriber needs to be utilized for purchase of a annuity providing for the monthly pension of the subscriber and the balance is paid as a lump sum payment ot the subscriber.

Govt initiates process to constitute 7th central pay commission



The Government has initiated the process to constitute the 7th Central Pay Commission along with finalization of its Terms of Reference, the composition and the possible time frame for submission of its Report. The date of effect thereof will be known once the Report is available.

This was stated by Shri Namo Narain Meena, Minister of State in the Ministry of Finance in a written reply to a question in the Lok Sabha here today.

சிறார்களிடையே அதிகரிக்கும் குற்ற செயல்கள் - ஆய்வில் தகவல்


சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின் உபயோகத்தால், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடும் சிறார்கள், அதிகளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் கூர்நோக்கு இல்ல சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாறிவரும் கலாசாரத்தின் விளைவாக, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்திலும் அதிவேக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை உள்வாங்கிக் கொள்ளும் சிறார்கள், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதுடன், குற்றச் சம்பவங்களில் அதிகளவு ஈடுபடுகின்றனர். இதற்கு, நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் முறை தவறிய நடத்தை, பொழுதுபோக்கு சாதனங்களின் அபரிமித ஈடுபாடு போன்றவை காரணமாக இருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு


சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனத்தை அதிகம் ஓட்டுபவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் சரியாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும்,

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் ஜனவரி முதல் நாளில் வெளியிட கோரிக்கை

ஆசிரியர்களின் உதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலை ஜனவரி முதல் நாளில் இருந்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளை அடிப்படையாக கொண்டு தயார் செய்து வெளியிடப்பட வேண்டும்.

தொடக்கக் கல்வி - அரசாணை எண்.179 / 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களில் தீர்ப்பாணையின் படி ஊதிய நிலுவையினை உரியவர்களுக்கு விரைவில் பெற்று வழங்க செயலர் உத்தரவு

DEE - SECY ORDERED TO AVOID GO.179 / 216 / 234 CONTEMPT CASES REG INSTRUCTIONS & ISSUED DIRECTIONS TO CLEAR FINANCIAL ASSISTANCE TO CONCERN TEACHERS REG PROC CLICK HERE...

DEE - GO.179 / 216 & 234 REG CONTEMPT CASES JUDGEMENT IMPLEMENTATION REG PROC CLICK HERE...

மாநில கணித, அறிவியல் கண்காட்சி: வியப்பி ஆழ்த்திய மாணவர்களின் படைப்புக்கள்!


சென்னை: சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் மாநில கணித, அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

மாநில அளவிலான ஜவாஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி கிழக்குத் தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Free Online Test For 10th & 12th Standard Students. =THANKS TO www.padasalai.net

அன்புள்ள ஆசிரியர்களே, மாணவர்களே வணக்கம்.
Free Online Tests For 12th Standard & 10th Standard
  • 12th English Medium Tests
  • 12th Tamil Medium Tests
  •  10th English Medium Tests
  • 10th Tamil Medium Tests
 

டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல்.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை, ஜன., 5க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது. கடந்த
ஆண்டு, அக்டோபரில், இரண்டாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

டிட்டோஜாக் -போராட்ட அறிவிப்பு விரைவில்-பத்திரிக்கை செய்தி

பொறியியல் கல்லூரிகளின் 'குடுமி' இனி யு.ஜி.சி., கையில்: ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பின் அதிகாரங்கள் பறிப்பு

பொறியியல் கல்லூரி உள்ளிட்ட, பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் அளிப்பது, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல விவகாரங்களில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏகபோக
அதிகாரத்துடன், கோலோச்சி வந்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் (ஏ.ஐ.சி.டி.இ.,) அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தொடர்பான பணிகள் அனைத்தையும், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) கவனிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் DD Amounts:


உண்மைத்தன்மை என்றால் என்ன?
ஒருவர் படித்து பட்டம் பெற்றபின் அப்பட்டம் (Convocation /Degree Certificate) அப்பல்கலைக்கழகத்தால் தான் வழங்கியது என்று அப்பல்கலைக்கழகம் மூலம் பெறும் சான்றே” உண்மைத்தன்மை” (Genuous) எனப்படும், (போலியாக படித்தது போன்று பட்டம் பெறுவதை தடுக்கவே இந்த நடைமுறை).



 பெறும் முறை
தனிநபர் தனது  படிப்பின் பட்டம் (Convocation /Degree) சான்றிதழின் ஒளிநகலுடன்(ஜெராக்ஸ் காபி)  அதற்குண்டான கட்டணத்தொகைக்கான DD ஐயும் இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பி தனதுசான்றிதழின் உண்மைத்தன்மையை சான்றாக பெறலாம்.

* இந்த விண்ணப்பத்தினை தலைமையாசிரியர் வழியாகவும்,அல்லது, AEEO மூலமாகத் தான் அஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப்பெற வேண்டும்.

ஒருலட்சம் பார்வைகளை நம் இணையதளம் 6 மாதங்களில் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

ஒருலட்சம் ,100,000 பார்வைகள்
 
பார்வைகளை நம் இணையதளம் ஆரம்பித்த 6 மாதத்தில் அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் tntf.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம்

முறைகேடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஸ்மார்ட் ரிமோட் மீட்டர்களை பொருத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பைத் தடுக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 53,000 கோடி ரூபாய் கடனிலும், மின் தட்டுப்பாட்டிலும் தவிக்கும் தமிழக மின் வாரியம், மின்சார பயன்பாட்டு கட்டணத்தில் முறைகேடுகளைத் தடுக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக, ரேடியோ அலைக்கற்றை மூலம் செயல்படும், எல்.பி.ஆர்.எப்., எனப்படும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மீட்டர்களை நுகர்வோரின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தினால், கணக்கெடுப்பாளர்கள், ஒரு இடத்தில் நின்று கொண்டு, நவீன ரேடியோ அலைக்கற்றை கையடக்க கருவி மூலம், ஒரே நேரத்தில் 60 மீட்டர் சுற்றளவில் உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் பதிவுகளை, ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும்.

பள்ளிகளிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்

Return to frontpageபன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.
பேராசை ஆண்டுகள்
+2 ஆண்டுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. சுயநலம், பேராசை, அதிகாரம் அனைத்தும் கலந்த நம் குடும்ப அமைப்பு சிறிய அளவிலான தன் சுதந்திரத்தையும், ஜனநாயகப் பண்புகளையும் இந்தக் காலத்தில் முற்றும் இழந்துவிடுகிறது. தாங்கள் அடைய முடியாத லெளகீகக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் எட்டிப்பிடிக்க வேண்டும் எனும் பெற்றோர்களின் ஆசை படிப்படியாக வன்முறையாக மாறிவிடுகிறது. தன் பிள்ளை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக வேண்டும் என்கிற மதிப்பெண் வேட்கை பெற்றோர்களைப் பேயாய்ப் பிடித்து ஆட்டத் தொடங்குகிறது. தாய்மார்கள் எப்போதும் விரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன.

மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடக்க உள்ளன

. மார்ச் 26 முதல் ஏப்., 9ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு நாட்கள் விவரம்

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன.
 பாடவாரியாக தேர்வு தேதிகள்:
மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;

10ம்வகுப்பு தேர்வு நாட்கள் விவரம்

பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரை நடக்கின்றன.
பாடவாரியாக தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்;
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்;
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்;
2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள்;
ஏப்.4ம் தேதி: கணிதம்;
 ஏப்.7ம் தேதி: அறிவியல்;
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.

மாநகராட்சிப் பள்ளிகள்.. இதுவரை 62 பள்ளிகள் 'குளோஸ்'!


தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்துமே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகும்.


கிரை சர்வே சிறார் உரிமைகளும் நீங்களும் Child Rights and You (CRY) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில்தான் இது தெரிய வந்துள்ளது.

மூடவில்லை... மேம்படுத்துகிறோம் ஆனால் அரசோ இந்த பள்ளிகள் மூடப்படவில்லை. மாறாக மேம்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறதாம். அதாவது மூடல் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவதில்லையாம்.

அது என்ன மேம்பாடு... அதாவது ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளியை இணைத்து விடுகிறார்கள். இணைத்து விட்டு ஒரு பள்ளியை மூடி விடுகிறார்கள். இன்னொரு பள்ளியை மட்டும் இயங்க வைக்கிறார்கள். இதைத்தான் அரசு மேம்படுத்துவது என்று கூறுகிறதாம். இருக்கின்ற பள்ளியை அப்படியே மேம்படுத்துவதில்லை. மாறாக ஒரு தொடக்கப் பள்ளியை இன்னொரு பள்ளியுடன் இணைத்து ஒரு பள்ளியை மூடி விடுகிறது அரசு.

மத்திய அரசு நிதி குறைப்பு எஸ்.எஸ்.ஏ.,பயிற்றுனர்கள் கலக்கம்

எஸ்.எஸ்.ஏ.,திட்ட நிதிக்குறைப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால், இத்திட்ட மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தம், பள்ளி செல்லா குழந்தைகளை ஒருங்கிணைத்து படிக்க வைத்தல், அனைவரும் 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு 2000ல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்தியது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2010ல் இத்திட்டம் நிறைவு பெறும் பட்சத்தில் 2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2013-14க்கான நிதி ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்படுவதோ<டு, பயிற்றுநர்,மேற்பார்வையாளருக்கான சம்பளம், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான நிதி, கம்ப்யூட்டர் நிதி, ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைத்தல் போன்ற முக்கிய நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.திட்ட ஒப்பந்தப்படி,10 ஆண்டு முடிந்த நிலையில், 2010ல் துவங்கிய அனைவருக்கும் இடைநிலை கல்வி(ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தோடு இணைக்க,மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக எஸ்.எஸ்.ஐ.,திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்டப்படி, 8 ம் வகுப்பு வரை அனைவரும் "பாஸ்' என்ற உத்தரவு உள்ளது. இதனால் வாசிப்பு திறன் குறைந்து, அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதை மேம்படுத்த 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில வாசிப்புத் திறன், பிற பாடத்திற்கான சிறப்பு வகுப்பு எடுத்தல் திட்டம் வந்தது. நிதிக்குறைப்பு போன்ற நடவடிக்கை எஸ்.எஸ்.ஏ., திட்டத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.மேற்பார்வையாளர்களை உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பயிற்றுநர்களை ரெகுலர் பள்ளிகளிலும் நியமிக்கப்படலாம் என,தெரிகிறது,'' என்றார்

சென்னையில் முதன் முதலாக, ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரண்டு இடங்களில், உண்டு, உறைவிட பள்ளி அமைக்க மாநகராட்சி முடிவு

சென்னையில் முதன் முதலாக, ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரண்டு இடங்களில், உண்டு, உறைவிட பள்ளி அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, உண்டு, உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மாநகராட்சியும், அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து, தற்போது மூன்று உண்டு, உறைவிட பள்ளிகளை நடத்துகின்றன

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது

ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் அவ்ளோ தான்! : கர்நாடகாவில் எஸ்மா அமலுக்கு வந்தது


வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை, எவ்வித வாரன்டும் இல்லாமல், ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளில், கைது செய்யும் வகையில், கர்நாடக அரசு, எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமய்யா
தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அடிக்கடி, ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால்,

முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை

சென்னையில் பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு!!

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 7ஆம் தேதிக்குள்

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறியதாவது: கல்வி உரிமை சட்டத்தின் பரிந்துரைப்படி, ஒரு பள்ளி, ஒரு வாரத்திற்கு 45 மணி நேரங்கள் செயல்பட வேண்டும். இதன்படி, வாரத்திற்கு 6 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 6 மணிநேரம் 10 நிமிடங்கள் செயல்பட வேண்டியுள்ளது.

அவமதிப்பு வழக்குகளால் கல்வித்துறை அதிகாரிகளுக்கு "சிக்கல்", "பைசல்" செய்து கொள்ள உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட வழக்குகளை, 'பைசல்' செய்து முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை, சத்துணவு சாப்பிடும் மாணவருக்கு, நான்கு செட் சீருடை, நோட்டு புத்தகம், பாடப்புத்தகம், புத்தகப் பை, கல்வி உபகரணம், காலணி, நில வரைபடம், சைக்கிள், லேப்-டாப், சத்துணவு வழங்கல், சிறப்பு ஊக்கத்தொகை, கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறது. இந்நிலையில், இவர்கள், நீதிமன்ற வழக்கு, கிராம கல்விக் குழு, பெற்றோர் - ஆசிரியர் குழு, கல்வி மேலாண் வளர்ச்சிக் குழு, மாணவர் குழு மற்றும் சங்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். நீதிமன்ற விவகாரங்களை கையாளுவதற்காக, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியின் அலுவலகங்களில், தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

தொடக்கக் கல்வி - அரசாணை எண்.179 / 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களில் தீர்ப்பாணையின் படி ஊதிய நிலுவையினை உரியவர்களுக்கு பெற்று வழங்கிய விவரத்தை அளிக்க இயக்குநர் உத்தரவு

DEE - GO.179 / 216 & 234 REG CONTEMPT CASES JUDGEMENT IMPLEMENTATION REG PROC CLICK HERE...

குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு (Tentative Answer Keys)

 Sl.No.
Subject Name
 (Date of Examination:01.12.2013 FN)
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
1
GENERAL TAMIL
         2
GENERAL ENGLISH
         3
GENERAL STUDIES
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th December 2013 will receive no attention.

தலைமை ஆசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும் -தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டி நகல்

பள்ளிக்கல்வி - அ.தே.இ - HSC / SSLC பொதுத் தேர்வுகள் - மேல்நிலைத் தேர்வுகளில் அனைத்து முதன்மை விடைத்தாட்களையும் எடுகுறிச்சீட்டு இல்லாமல் அச்சடித்தல், விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு

GO.237 SE (GE1) DEPT DT.26.11.13 - DGE - ANSWER BOOK WITHOUT FLY LEAF, PRIMARY ANSWER BOOK PAGES INCREASED FROM 16 TO 40 FOR HSC & 8 TO 32 REG ORDER CLICK HERE...

இன்று நடைபெறும் மாவட்ட டிட்டோஜாக் அமைப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு சகோதர இயக்கங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்டச்செயலர்களுக்கு வேண்டுகோள்-தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி,


தொடக்கக்கல்வித்துறையில் செயல்படும்7 பெறும் இயக்கங்கள், இணைந்து டிட்டோஜாக் எனும் பெயரில் ஒன்றுகூடி ,

இடைநிலை ஆசிரியர்களுக்கு 4200 தர ஊதியம் தரவேண்டும்

,புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திணை அமுல்படுத்தவேண்டும்

உள்ளிட்ட 7 கோரிக்கையை வலியுறுத்தி போராட ஏதுவாக

எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கம்ப்யூட்டர் வழங்க பீகார் திட்டம்

எழுத்தறிவில்லாத சிறுமியர், பெண்கள் கல்வி அறிவு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய கம்ப்யூட்டர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.
பீகார் மாநில, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ஷாகித் அலி கான் நிருபர்களிடம் கூறியதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களில், எழுத்தறிவில்லாத, பெண்கள், சிறுமியருக்கு, கல்வி அறிவை புகட்டும் நோக்கில், அங்கன்வாடி மையம் மற்றும் வசுதா கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம், இரண்டு மாதம் பயற்சி அளிக்கப்படும். அதன் பின், அவர்களுக்கு, எளிதான தேர்வு நடத்தி, பயனாளிகள் தேர்ந்து எடுக்கப்படுவர். அவர்களுக்கு, சிறிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்

ஆசிரியர் ஆக முடியாதவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் நா. மகாலிங்கம்


தமிழக அரசுப் பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் ஒன்று இருக்கிறது. அரசின் வருவாய்த்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை முதலிய துறைகளில் காலியான பணிகளுக்குரிய குமாஸ்தா முதல், துணைப்பதிவாளர், துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வரை தேர்வாணையம் மூலம்தான் நியமிக்கப்படுகிறார்கள்.

கல்வித்துறையில் மட்டும் ஆசிரியர் பணிகளுக்கான நியமனத்திற்கென்றே ஒரு தனி வாரியம் (Teachers Recruitment Board) இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வாரியம் அரசு-, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குத் தகுதித் தேர்வு (Teachers Eligibility Test – TET) நடத்தியே நியமிக்கிறது.

கல்வித்துறை என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதால், இத்தகைய தேர்வு முறைகளை அந்தந்த மாநிலங்கள் உருவாக்கி உள்ளன. தமிழக அரசு, தகுதித் தேர்வை நடத்தி அப்பணிக்காக மனுச்செய்யும் ஆசிரியர்களில், சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற் காகவே இந்த நடைமுறையை அரசு பின்பற்றி வருகிறது.
இந்தத் தகுதித்தேர்வை எழுத, குறைந்தபட்சக் கல்வித் தகுதி +2-&வும் இரண்டாண்டுகள் ஆசிரியர் பயிற்சியுமாகும். பட்டதாரிகளாக இருந்தால் ஓராண்டு பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வகையில், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (Teachers Training Schools) சுமார் 50 உள்ளன. இதேபோலப் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் (B.Ed., Colleges) 585 உள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துப் பட்டயமும் பட்டமும் பெற்று வெளிவருபவர்கள், தகுதித் தேர்வு இல்லாமலேயே முன்பு நியமனம் பெற்றனர்.

அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உருவாகி விட்டதால், போட்டித் தேர்வுக்கு மாற்றாக (Competitive Exam) இந்தத் தகுதித் தேர்வு (Eligibility Test) வந்துள்ளது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த வடிகட்டும் முறையைக் குறை கூறவும் முடியாது. ஏனெனில், தகுதித் தேர்வு என்பது தரமான போதனைக்கு அவசியமாகிறது.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

 எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்பும் ,தவறினால் பெறும் தண்டணையும்


அரசு ஊழியத்தில் உள்ள ஒவ்வொருவரும் இ.த.ச பிரிவு 21 (12 ) (ஏ ) -ன்படி பொது ஊழியர் ஆவார். எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு பொது ஊழியர் ஆவார்.

ஒரு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆவணத்தை உருவாக்கும் பொறுப்பு தரப்பட்டு இருக்கிறது.

மாணவரின் பிறந்த தேதி உடைய தாள் ஒரு ஆவணமாகும்.

போட்டிக்குத் தயாராவோம் By எம். நாகராஜன் (கல்வியி ன் தற்போதைய நிலை பற்றிய ஓர் அலசல்)


அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும்.

ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி நிறுவனங்களில் பயின்றால் உயர்ந்த வேலைக்கு சென்று விடலாம்.ஆனால், இவை பெரும்பாலும் சாமானிய மாணவர்களுக்கு எட்டுவதில்லை.

கடலூர் மாவட்டத்தில் கன மழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. தென் கிழக்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பகலில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் கன மழை பெய்தது. வீராணம் ஏரியில் 45.60 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: மே.மாத்தூர் 34, வேப்பூர் 22, லால்பேட்டை 21, சேத்தியாத்தோப்பு 20, காட்டுமயிலூர் 17, கீழச்செருவாய் 14.50, கொத்தாவாச்சேரி, காட்டுமன்னார்கோயில் 13, விருத்தாசலம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இன்றும் மழை நீடிப்பதால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : பள்ளிகளில் அறிமுகம்( இங்கல்ல குஜராத்தில்)

மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

இங்கு, பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய திட்டம் குறித்து, அம்மாநில, டி.ஜி.பி., பிரமோத் குமார் கூறியதாவது:மாணவர்களை, நாளைய சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்துடன், சுரக் ஷா செடு என்ற, புதிய திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, போலீசார் அணியும் சீருடை தரப்படும்.
போலீசாரே பயிற்சி

'கட்டாய கமிஷன்' பெறுவதாக சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மீது ஆசிரியர்கள் புகார்

வகுப்பறையில் தூங்கிய சிறுவன் - பள்ளியை பூட்டிக் சென்ற தலைமை ஆசிரியர்

Photo

போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி - 8 பேர் இடைநீக்கம்

Photo

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது நல்லது.விழிப்புணர்வு செய்தி



இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....தெரியாதோர்க்கு :-

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...இப்போதெல்லாம்  டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....

கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு வாழ்த்து-நமது பொதுச்செயலர் திருமிகு.செ.மு Ex.MLC,அவர்களின் வாழ்த்துப்பா


அகஇ - அடைவுத்தேர்வு - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து அதன் விவரத்தை 03.12.2013க்குள் அனுப்பி வைக்க உத்தரவு

SPD - ACHIEVEMENT TEST - LIST OF INVESTIGATORS TO BE SEND WITHIN 03.12.2013 REG PROC CLICK HERE... 

TNPSC GROUP II ANSWER KEYS (TENTATIVE)

TO DOWNLOAD TENTATIVE KEYS FOR GROUP - II EXAM CLICK HERE...

 

TO DOWNLOAD TENTATIVE KEYS FOR GROUP - II EXAM CLICK HERE...

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்


1 . HOME SCHOOL MATHS.NET . 
தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல் முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது

2. MATHWAY.COM
கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.

டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு - 1 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான தமிழக அரசு ஆணை .

தேர்தல் வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துவாரா? முதல்வர்-காத்திருக்கிறோம் என்ற தலைப்பில் தினமணி செய்தி வெளியீடு

IGNOU தேர்வு அட்டவணையால் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பமும், பயமும்.

2013 December B.Ed இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணையில் 23-ம் தேதி ஒரு தேர்வு நடைபெறுகிறது.

பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாளும் December 23 தான்.

எனவே பள்ளயின் கடைசி வேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே..? என்ன செய்வது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:


காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 


1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. 

அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதில் ஆர்வம் குறைவு: மூடுவிழாவை நோக்கி கல்லூரிகள்.

ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்துள்ளதால் பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பி.எட்., கல்லூரிகள் -28 , பட்டய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 51, செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் ஏறக்குறைய 5000 இடங்கள் உள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பி.எட்., கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகளிடையே ஆர்வமும் போட்டியும் இருந்தது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த

தபால் மூலம் நிர்வாக பணியா? கல்வி துறை மீது அலுவலர்கள் கடுப்பு.

தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம் நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"என பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்
சங்கம், வலியுறுத்தி உள்ளது.இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது. 4, 5, 6 தேதிகளில், கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்றுவது; 11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.

"உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டில் 16 மடங்கு உயர்வு"

"மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டுகளில் 16 மடங்கு உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கீடு உயரும் வாய்ப்பு உள்ளது" என, தென் மண்டல தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் சந்தானம் பேசினார்.

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் "உயர்கல்வியில் மாபெரும் மாற்றங்கள்; ஆளுமை, ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பில் சிறப்புகள்" குறித்த கருத்தரங்கு லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது.

அரசு பணியில் சேர தயக்கம்: மருத்துவர் காலியிடங்கள் அதிகரிப்பு.

ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள் தயங்குகின்றனர்" என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.அவர் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும்

சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கிப் புறப்பட்டது "மங்கள்யான்"

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள், புவிவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்" திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில் "மங்கள்யான்" செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ" சார்பில், "மங்கள்யான்" செயற்கைக்கோள், நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்" செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா" கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.

SSLC - 2012-13 MINIMUM MATERIALS FOR ALL SUBJECTS

TO DOWNLOAD ENGLISH CLICK HERE...

 

TO DOWNLOAD MATHS CLICK HERE...

 

TO DOWNLOAD SCIENCE CLICK HERE...

TO DOWNLOAD SCIENCE DIAGRAMS FOR PRACTICE CLICK HERE...

TO DOWNLOAD ENGLISH SIMPLE GUIDE TO SUCCESS CLICK HERE...

TO DOWNLOAD MATHS FOR SLOW LEARNERS CLICK HERE...

TO DOWNLOAD SCIENCE (TM) FOR PRACTICE CLICK HERE...

TO DOWNLOAD SOCIAL SCIENCE (EM) CLICK HERE...

TO DOWNLOAD SCIENCE (EM) CLICK HERE...

தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.

RTI - TO ALLOW INCENTIVE FOR 2 DEGREES WITH PERMISSION REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / IMS / DEEO ஆய்வுக்கூட்டம் 05.12.2013 அன்று தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

DSE - ALL CEO / ADDL. CEO / DEO / IMS & DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 05.12.2013 AT TAMBARAM PRESIDED BY HON'BLE SCL EDN MINISTER & SECY REG PROC CLICK HERE...

இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி முழுவதும், விடுமுறை

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி முழுவதும், விடுமுறை விடப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மகரபூஷணம் வெளியிட்ட அறிக்கை: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதியில் உள்ள

அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நாட்காட்டி, 2013-14க்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்ட விடுமுறையைப் பட்டியலை உடன் வழங்க வேண்டும். 
மாவட்டத்தில் உள்ள பல யூனியன்களில், மூன்று சதவீதம் ஊதிய உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்தாமல், காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இச்செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. உடனடியாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
இ.எம்.ஐ.எஸ்.,ல், மாணவர்களின் விவரங்கள், குடும்ப விவரங்கள், ஃபோட்டோ இணைத்தல், ஆதார் எண் விவரங்கள் போன்றவைகளை மேற்கொள்ள ஆகும் செலவை, பள்ளி அல்லது பராமரிப்பு மானிய நிதியில் செய்து கொள்ள, உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும்.
பள்ளி வேலை நாள் இல்லாத நாட்களில், எஸ்.எஸ்.ஏ., மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு, பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான வருகைச் சான்றும், அந்நாளுக்குறிய ஈடு செய்ய விடுப்பு அனுமதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசானை 114 இன் படி அரசு அலுவலகத்தில் நாம் கொடுக்கும் மனுக்களுக்குஒப்புகைச்சீட்டு (acknowledgement) கட்டாயம் தர வேண்டும்.

அரசானை எண் 114 ஐ பதிவிறக்கம் செய்ய.....

TET FAQ 2 -கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?

பதில்- இல்லை. ஒவ்வொரு ஆண்டிற்கும்
தனித்தனி சான்றிதழ்கள் வைந்திருந்தால் கூட போதுமானது. மொத்த மதிப்பெண் சான்றிதழ் இருந்தால்

RTI NEWS -துறை அனுமதியுடன் இரண்டு உயர் கல்வித் தகுதிகள் பயின்றிருந்து கல்விச் சான்று உண்மைத் தன்மை பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தடையில்லை.

துறை அனுமதியுடன் இரண்டு உயர் கல்வித் தகுதிகள் பயின்றிருந்து கல்விச் சான்று  உண்மைத் தன்மை பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தடையில்லை.......

நிதித்துறை - தமிழாசிரியர் பதவி இனி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஆக மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியீடு, இதனால் தர ஊதியத்தில் ரூ.200/- குறைவு சார்பான முரண்பாடு தீர்ந்தது.

GO.434 FINANCE (PAY CELL) DEPT DATED.19.11.2013 - RE DESIGNATION OF THE POST OF TAMIL PANDIT AS B.T. TEACHER (TAMIL) REG ORDER CLICK HERE...

ஆர்.டி.ஐ. விண்ணப்பம் எழுதுவது எப்படி?=இவள் பாரதி

கவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க சில விதிமுறைகள் உண்டு

கவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (Right To Information Act 2005 -   RTI) மூலம் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் தகவல் பெற முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தனி நபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்கலாம்.

ஆர்.டி.ஐ.யின் பயன்:
  • சுயமரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான மத்திய, மாநில அரசின் பயன்களைப் பெறவும்,  அரசின் திட்டங்களில் முறைகேடுகளைக் களையவும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கவும்  RTI  சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விகிதம் இப்போதும் இவ்வளவுதான்!

மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுதியது ஆறரை லட்சம் பேர். தேர்ச்சி பெற்றது 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே. அதாவது தேர்ச்சி விகிதம் 4.21 சதவீதம்தான்.


அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும். அதற்காக, தமிழ்நாட்டில் கடந்த  ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் முறையாக நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் 2,448 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதன் தேர்ச்சி விகிதம் 0.36 சதவீதம்தான். தேர்வு நேரம் போதவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் குறை கூறினார்கள். இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக படித்து முடித்தவர்களுக்கும் ஏற்கெனவே விண்ணப்பிக்காதவர்களுக்கும் சேர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அத்துடன், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்தது. மறு தேர்வு எழுதிய 6.56 லட்சம் பேரில் தேர்ச்சியடைந்தவர்கள் 2.99 சதவீதம் மட்டுமே.


web stats

web stats