rp

Blogging Tips 2017

கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.
கலை, அறிவியல் படிப்புகள்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.
கலை அறிவியல் படிப்பிற்கு அடுத்தபடியாக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும், பாலிடெக்னிக் படிப்பிலும்தான் அதிகம் பேர் சேர்கிறார்கள். குறிப்பாக பாலிடெக்னிக் படிப்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற உடன்தான் அதிக மாணவர்கள் சேர்கிறார்கள். பிளஸ்-2 முடித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் சேர்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், நர்சிங், பிஸியோதெரபி, மருந்தாளுனர் படிப்பு, வேளாண்மை ஆகிய படிப்புகளில் குறைந்த மாணவர்களே சேர்கிறார்கள். மருத்துவப்படிப்பில் மட்டும் அதிகம் பேர் சேர விரும்புகிறார்கள். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர குறைந்த இடங்களே உள்ளன.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருக்கிறார்.

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும். சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது

தேர்தல் பணி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகாரளிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு-பொதுச்செயலர் செ.முத்துசாமி

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கவனத்திற்கு,
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பட்ட பாடு சொல்லி மாள முடியாததாக அமைந்தது.
1. பயிற்சி என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டோம்.
2.பயிற்சி மையங்கள் 2 மற்ரும் 3 கட்டத்திற்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டோம்
3.முழு நேர வகுப்பு என்பதை முன்னரே தெளிவாக அறிவிக்காமல் பயிற்சிக்கு சென்ற பின்னே அறிவிக்கப்பட்டதால் மதிய உணவு கிடைக்காமல் அவதி
4. காலை 11 மணிக்கு வகுப்பு ஆரப்மிக்கப்பட்டாலும் இரண்டு வேளைக்கும் சேர்த்து மாலை 4 மணிக்கே கையொப்பம் பெற்ற கொடுமை
5. தேர்தல் பணிக்கு முந்தைய நாள் பணி ஆணை கிடைக்கப்பட்ட பின் சரியான வாகன வசசி இன்மையால் அலைக்கழிக்கப்பட்ட பின்பே வாக்கு சாவடிக்கு சென்ற கொடுமை.

"ஸ்மார்ட் போனில்' பிளஸ் 2 தேர்வு முடிவு பார்க்கலாம் : இணையதள முகவரிகள் வெளியீடு

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.inஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்


"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதோடு கூடவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், மறு மதிப்பீடு அல்லது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன.
இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் முடிவுகளை பார்க்கலாம்

தேர்வு முடிவுகள்  வெளியிடப்படும்  இணைய தள முகவரிகள்

www.tnresults.nic.in 

 www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in.
ஆகிய இணைய தள முகவரிகளிலும் முடிவுகளை காணலாம்.

விலையில்லா பேருந்து பயணஅட்டை பெற்று வழங்க பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுறைகள்

இயகுனரின் செயல் முறையை பதிவிறக்கம் செய்ய

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம் : அண்ணா பல்கலை அறிவிப்பு


வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே, 3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எதிர்பார்ப்பு : "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ல் வெளியிடப்படும்' என, தேர்வுத்துறை, ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்தபடிஇருக்கின்றனர். மே, முதல் வாரம், விண்ணப்பம் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், "மே, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்' என, நேற்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அண்ணா பல்கலையின், தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அட்டவணை விவரம்: பி.இ., - பி.டெக்., சேர்க்கை கலந்தாய்விற்கான அறிவிப்பு, மே, 2ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், மே, 3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே, 20ம் தேதி கடைசி நாள். "ரேண்டம்' எண் வெளியாகும் தேதி, "ரேங்க்' பட்டியல் மற்றும் கலந்தாய்வு துவங்கும் தேதி ஆகிய விவரங்கள், பின்னர் வெளியிடப்படும்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. புரட்சிகர மாணவர், இளைஞர் அமைப்பின், சென்னை செயலர், கார்த்திகேயன், தாக்கல் செய்த மனு: சென்னையில், 313, மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இங்கு, 1.17 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு, 2012, டிசம்பரில், அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதில், "அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில், கட்டடங்கள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், இருக்கை, முதல் உதவி, வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையை, சரிவர அமல்படுத்தவில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லை. இருக்கிற வசதிகளும், தரமாக இல்லை.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது.

ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு



ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்பட்டன. இந்தாண்டு

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்



தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள்.
அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை

தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல்...



தேர்தல் பணி தொடர்பாக வாக்குச் சாவடிக்கு வந்த ஆசிரியர்கள் சிலருக்கு தேர்தல் பணிச் சான்றிதழ் (Election Duty Certificate) வழங்காததால் பணிக்கு வந்த ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்களவைக்கான பொதுத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், துணை நிலை ராணுவத்தினை தேர்தல் ஆணையம்

ஜூன் 29ல் நெட் தேர்வு : விண்ணப்பிக்க மே 5 கடைசி நாள்



சென்னை: கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதி தேர்வு ஜூன் 29ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி பேராசிரியர் பணிக்கான தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்குமான நெட் தேர்வு ஆண்டுக்கு 2முறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி இத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.ugc.ac.in மற்றும் www.ugcnet online.in ஆகிய

'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க



சவாசனத்தில் பிராணாயாமம்

இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.

சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி

10 மாதங்களாக வாயை திறக்க முடியாத குழந்தை. அபூர்வ குறையுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை.



கனடாவில் பிறந்த ஒரு குழந்தை ஒரு வருடமாக வாயை திறக்க முடியாத நோயினால் அவதிப்படுகிறது. அந்த குழந்தையின் தாடை அசையாததால் வாய் திறக்க முடியாமல் இருக்கின்றது. உலகில் இதுமாதிரியான ஒரு குறை இதுவரை எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் Andrew and Amy. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பிறந்த ஆண்

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்.



இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.

ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.

அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக்

நாற்பதுக்கு நாற்பது சாத்தியம்தானா?- தமிழக அரசியல் கட்சிகளின் பலம் - பலவீனம் என்ன? = தி இந்து



தி இந்து
தமிழகத் தேர்தல் களத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் நாற்பதும் நாங்களே (புதுச்சேரியையும் சேர்த்து) என மார்தட்டிச் சொல்லி முடித்திருக்கின்றன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில், முக்கியக் கட்சிகளுக்கு சாதக, பாதக விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதிமுக:

இரட்டை இலையும் ஜெயலலிதாவும்தான் பிரதானம் என்பதால் வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் வேட்பாளர் தேர்வில் அசாத்திய நம்பிக்கையை கடை பிடித்திருக்கிறது அதிமுக. இதுவே சில இடங்களில் சறுக்களையும் உண்டாக்கலாம். ‘அம்மா’ திட்டங் களும் விலையில்லாப் பொருட் களும்

உலக மகா புதிருக்கு விடை

4ஜி சேவை ரிலையன்ஸ் தீவிரம்



புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ம் தலைமுறைக்கான 4ஜி சேவையை துரிதப்படுத்தும் வகையில், போஸ்டனை தலைமை யிடமாக கொண்ட அமெரிக்கன் டவர் கார்ப்பொரேஷன் (ஏடிசி) நாடு முழுவதும்

தமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை


தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விபரங்கள் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி

தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக இன்று ஒருநாள் விடுமுறை: தொழிலாளர் ஆணையர் உத்தரவு


தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொழிலா ளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு


தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரையில் 5 கட்டங்களாக மொத்தம் 311 மக்களவை தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. 6வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், மிலிந்த் தியோரா, நமோ நாராயண் மீனா, ஜிதேந்திரா சிங், தாரிக் அன்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தேசிவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சாகன் புஜ்பால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அப்ஹிஜித் முகர்ஜி, நடிகை ஹேமமாலினி, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோர் இன்று நடைபெறும் தேர்தலில் களத்தில் உள்ளனர்.


6வது கட்டத் தேர்தலில் மொத்தம் 2,097 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜ., காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் மொத்தம் 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை தீர்மானிக்க 8 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி 10 தொகுதிகளிலும், ஏப்ரல் 17ம் தேதி 19 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது கட்டமாக மீதமுள்ள 19 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 19 தொகுதிகளில் மொத்தம் 3.18 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 338 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில், ஏப்ரல் 10ம் தேதி 10 தொகுதிகளிலும் 17ம் தேதி 11 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநிலத்தில் தேர்தல் மொத்தம் 6 கட்டங்களாக நடக்கிறது. இதில், மூன்றாவது கட்டமாக இன்று 12 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை மொத்தம் 1.98 கோடி வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். பா.ஜ., பகுஜன் சமாஜ் ஆகிய 2 கட்சிகளும் இந்த 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி முலாயம் சிங் மற்றும் அவரது மருமகள் டிம்பிள் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.


மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி 9 தொகுதிகளிலும் 17ம் தேதி 10 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. மீதமுள்ள 10 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை 1.69 கோடி வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி 6 தொகுதிகளிலும், 17ம் தேதி 7 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதமுள்ள 20

NEWS UPDATE MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு

NEWS UPDATE MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~

வாக்குப்பதிவை வெப்சைட்டில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பா

தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காகமாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும்
2) 01.01.2012 Panel-லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் (மூன்று வருட பட்டபடிப்பு) நிலையிறக்கம் செய்ய வேண்டும்

நாளை தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர் அன்பர்களே! உங்கள் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது

நாளை தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர் அன்பர்களே! உங்கள் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது
கவனமாக செயல்படவும்
அறிவை போதிக்கும் நாம் ஆபத்தில் சிக்காமல், வீண் புகார்களுக்கு இடமளிக்காமல் நடுநிலையோடு செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறது
உங்களுக்கா சில குறிப்புகள் கீழே
=======டூத்பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பூ, சீப்பு, பர்ஸ், ATM அட்டை, அடையாள அட்டை, பணி ஆணை, மாற்றுத் துணிகள், துண்டு, பெட்ஷீட், காற்றுத் தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, முகப்பவுடர், மூக்குக்கண்ணாடி வைக்கும் பெட்டி, செல்ஃபோன் சார்ஜர், டார்ச் விளக்கு, கொசுவர்த்திச் சுருள், தீப்பெட்டி போன்றவற்றை முதல் நாளே தயாராகப் பைக்குள் எடுத்து வையுங்கள்.
========. ஸ்கெட்ச், பேனா, பென்சில், கத்தரிக்கோல், பிளேடு, ரப்பர், பசை, செல்லோடேப், அளவுகோல் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்ளுங்கள். (சாவடியில் வழங்கப்படும் பொருட்கள் பற்றாக்குறையாகவோ பழுதாகவோ இருந்தால் பயன்படுத்த)
========== புளிசாதம் / தக்காளி சாதம்/ தயிர்சாதம்/ எலுமிச்சை சாதம் ஓரிரு வேளைக்கு பார்சல் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஃப்ளாஸ்க் எடுத்துக் கொள்ளவும்
.
======அதிகமான பணம் கொண்டு செல்வதை அறவே தவிர்க்கவும்.
==========. சாவடி ஏஜண்ட்களிடமோ உள்ளூர்வாசிகளிடமோ உங்கள் தொடர்பு எண்ணையோ முகவரியையோ தனிப்பட்ட விவரங்களையோ தெரிவிக்காதீர்கள்.
====== தலைவலி, காய்ச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கான மருந்து மாத்திரைகளை
எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்களுடன்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
(வலைதள செய்திப்பிரிவு.)

வாக்கு சாவடியில் இருந்து தலைமை வாக்கு ச்சவடி அலுவலர் அனுப்ப வேண்டிய SMS வழிமுறைகள்

பிளஸ்–2 படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் இளநிலை பட்டம் பெற்றவர்கள் அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பு

பிளஸ்–2 படிக்காமல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, இளநிலை பட்டம் பெற்றவர்கள் அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி குரூப்–2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி குரூப்–1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது.இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிடமிருந்து தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வரவேற்கிறது.
கற்பித்தலில் புதுமையை புகுத்தி வரும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு ஆரம்பப் பள்ளிகளுக்கு 10 விருதுகள், இடைநிலைப் பள்ளிகளுக்கு 10 விருதுகள், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு மற்றும் பி.எட்.

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்- தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் செ.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

இட மாறுதல் அறிவிப்பு வெளி யிடாததால் அவர்கள் ஏமாற் றம் அடைந்துள்ளனர்.

 ஏப்.20- பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இட மாறுதல் அறிவிப்பு வெளி யிடாததால் அவர்கள் ஏமாற் றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டு தோறும் கல்வியாண்டின் இறுதி மாதமான ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி களின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறு தல் கலந்தாய்வு விண்ணப் பங்கள் ஏப்ரல் முதல் வாரத் தில் பெறப்படுவது வழக் கம்.

மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களுக்கு இழிவா? - சிறப்புக் கட்டுரை

வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா!

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வரை பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது 7 ஆயிரம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்.

"தேர்தல் அவசரத்தால் நாள்ஒன்றுக்கு அதிக விடைத்தாள்களை திருத்த கட்டாயப்படுத்த வேண்டாம். ஒரு ஆசிரியர் 30 விடைத்தாள் திருத்தினால் போதுமானது; 45 விடைத்தாள்களை திணிக்க வேண்டாம்" என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மார்ச் 26 முதல் ஏப்., 9 வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்ததன. தொடர்ந்து 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அல்வேனியா பள்ளியில் விடைத்தாள் திருத்தும்முகாம் நடந்துவருகிறது; 1800 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வியாண்டில் தேர்தல் மற்றும் தேர்வுப் பணிகள் ஒரே சமயத்தில் நடந்துவருவதால், இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
ஒரே நாளில், விடைத்தாள் திருத்தும் முகாம், தேர்தல் பயிற்சி இரண்டிலும் ஈடுபடவேண்டிய சூழல் எழுந்தது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.தேர்தலை முன்னிட்டு 23ம் தேதி முதல் ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் 22ம் தேதிக்குள் முடிக்கும் கட்டாயம் அரசு தேர்வுத்துறைக்கு எழுந்துள்ளது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு இரண்டு பிரிவுகளில் தலா 15 வீதம் மொத்தம் 30 விடைத்தாள்களை மட்டுமே திருத்தவேண்டும். அதை தவிர்த்து அதிக, விடைத்தாள் திருத்தும்பட்சத்தில்கவனக்குறைவால்

தேர்தலுக்காக வழங்கப்படும் பொருள்கள் விவரம்


பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு. மேலும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை

DGE - PLUS 2 / SSLC PUBLIC EXAMINATIONS MARCH / APRIL 2014 - STUDENTS NAME LIST CORRECTIONS SHOULD BE RECEIVED THROUGH CONCERN CEO OFFICES ONLY, HM / PRINCIPALS SHOULD NOT CONTACT DGE REG CORRECTIONS - PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

DEE - ADMISSION CANCELLED FOR 2014-15 ACADEMIC YEAR FOR 723 UN-RECOGNIZED SCHOOLS REG PROC CLICK HERE... 

TNTET-2013 PAPER-2 CERTIFICATE VERIFICATION CALL LETTER


TNTET-2013 PAPER-2 CERTIFICATE VERIFICATION CALL LETTER click here...

CLICK HERE TO DOWNLOAD BIODATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

TNTET 2013 - Paper II Additional Certificate Verification Call Letter Released.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST FOR PAPER II

Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key were published on 11.01.2014 in the TRB website.Now the Board has released the revised additional provisional C.V list for TNTET Paper I and II as per G.O.Ms.No.25,School Education (TRB) Department, dated 06.02.2014 by giving 5% relaxation in the qualifying marks. Candidates who have secured 55% marks and above (82 marks to 89 marks) in Paper I and Paper II are also being called for Certificate Verification.

ஆசிரியர் தகுதித் தேர்வு : பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.
இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்:

1. தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ விதிமுறைகளை நன்றாகப் படித்துவிட்டோ செய்யுங்கள். அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்கை தவறாமல் செலுத்திவிடுங்கள்.

2. உங்கள் தேர்தல் பணி உத்தரவைப் பத்திரமாக எடுத்து வையுங்கள். நகல் எடுத்து வையுங்கள். தபால் வாக்கு விண்ணப்பிக்கவும் தேர்தல் பணிக்காகச் செல்லும்போதும் திரும்பி வீடு வரை வரும்போதும் அதுதான் நம் பாதுகாப்புக் கவசம்.

3. உங்களுக்குரிய வாக்குச்சாவடியை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊரின் பெயரைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரே மாவட்டத்தில் உள்ளன. சான்றாக, சின்னியம்பாளையம் என்ற ஊர் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளன. உங்களுக்குரிய ஊர் எது என்பதில் தெளிவாக இருங்கள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குஇலவச கணினி பயிற்சி நடக்க உள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில், இலவச பயிற்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு வரும் 28ம் தேதி முதற்கட்ட பயிற்சி துவங்குகிறது. இதற்கான, விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பிக்கும் வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் இரண்டாவது வாரம் பயிற்சி அளிக்கப்படும்.முதற்கட்டமாக ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 5ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையும் நடக்கிறது. இதில், பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மதியம் இலவச உணவும், இலவச பஸ் வசதியும் செய்து தரப்படுகிறது.

கரண்ட் பில் தொந்தரவா இருக்கா? பாதியா குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

உங்கள் வீட்டில் அதிகமான கரண்ட் பில் இருந்தால் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

1. தொலைக்காட்சி, கணனி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்திய பிறகு முழுவதுமாக சுவிட்ச் ஆப் செய்து விடவும்.

2. A/C யூனிட்டுகளை 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பதை தவிர்த்து, 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தால் நிச்சயமாக கரண்ட் பில் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

ஆசிரியர்கள் வருகை கண்காணிக்க எஸ்.எம்.எஸ்.,!; 3 ஆண்டுகளாகியும், 'காகிதத்தில் திட்டம்'-தினமலர்


தமிழகத்தில், எஸ்.எம்.எஸ்., வழியாக ஆசிரியர்களின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மூன்றாண்டுகள் ஆகியும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அரசு பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்றும், விடுமுறை சார்ந்த தகவல்கள் தெளிவாக பதிவு செய்வதில்லை என்றும் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து, புகார்கள் பெறப்பட்டு வந்தன. இதையடுத்து, ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க 'எஸ்.எம்.எஸ்., கண்காணிப்பு திட்டம்' அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம், முதல்கட்டமாக, 2011 ஜூன் முதல் கடலுார் மாவட்டத்தில், 1500 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, தேசிய தகவல் மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., வழியாக தினமும் தகவல் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, காலை 9.30 மணிக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரும்போது, தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.தலைமை ஆசிரியர் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு வந்தனர்; யார் வரவில்லை என்ற தகவலை எஸ்.எம்.எஸ்.,சில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிக்கு தெரிவித்து, அத்தகவலை பெற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அங்கு கணினியில் பதிவு செய்யப்படும்; தினமும் பட்டியல் கலெக்டர் பார்வைக்கு

இன்று 21ம் தேதி முதல் மூன்றாம் பருவ தேர்வுகள்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வுகள் இன்று  21ம் தேதி துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன.இம்மாணவர்களுக்கு  21ம் தேதி முதல் மூன்றாம் பருவ தேர்வுகள் துவங்குகின்றன. கோவை செல்வபுரம் (வடக்கு) மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கோதைநாயகி கூறுகையில்,'மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை மூன்றாம் பருவ தேர்வுகள் நடக்கவுள்ளது. தற்போது அதற்கான பயிற்சி தேர்வுகள் நடத்தி வருகிறோம். தேர்தலை முன்னிட்டு 23, 24, 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி இறுதி வேலைநாளாக பள்ளிகள் செயல்படும். மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும்' என்றார்.

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை; DINAMANI News

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது.
அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏன், அரசியல்கட்சிகளும் கூட உருவாக்கி வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க வேண்டும் எனக் கேட்டு அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது

என்ஜினீயரிங் சேர உள்ள ‘முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே சான்றிதழ் பெற்று வைத்திருங்கள்’ அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள்


என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2½ லட்சம் விண்ணப்பங்கள்

பிளஸ்–2 முடித்த மாணவர்–மாணவிகள் 8¾ லட்சம் பேர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களில் 30 சதவீதத்தினர் என்ஜினீயரிங் (பி.இ., பி.டெக்.) படிக்க உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் சேர உள்ள மாணவ–மாணவிகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்து தயாராக வைத்திருக்கிறது.
மே மாதம் முதல் வாரத்தில் இந்த விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 மையங்களில் வழங்கப்பட உள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்

ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை-.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணி


ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிகளின் சார்பில் தொடக்கக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையை, பள்ளி கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தியது. ஆங்கில வழிக்கல்வி முறையால், ஏராளமான அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு தற்காலிகமாக பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது மேலும் சில பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி முறையை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

16வது நாடாளுமன்றத்தேர்தலில் தவறாது வாக்களிப்போம்- பொதுச்செயலர்--செ.முத்துசாமி Ex.MLC



கட்சிகள் பல தமிழ்நாட்டில் ஐந்து பிரிவுகளில் நின்று வாக்கு கேட்டு வருகிரார்கள்,ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிப்பது.????????????
அறிவை போதிக்கும் ஆசிரியர்களுக்கு யாரும் சொல்லத்தேவையில்லைதான்.
ஆனாலும்
1988-ல் அன்றைய ஆளுநர் மதிப்புமிகு.அலெக்சாண்டர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கை முடிவின் படி அன்று முதல் நடு்வணரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையாண ஊதியத்தை  தமிழக அரசின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்தனர்

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!


ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!
PROXY VOTE:
ராணுவத்தில் ப
ணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம்.

வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.
யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.


49M RULE:
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.



சேலஞ்ச்' ஓட்டு:
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.
அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.
சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;
சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு


சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில

web stats

web stats