rp

Blogging Tips 2017

தேர்தலில் ஆசிரியர்கள் பட்ட. துன்பங்கள் பற்றி. டெல்லி. தேர்தல் கமிஷன். முன்பு முறையிட. முடிவு

ஆசிரியர் தேர்தல் பணியில் பட்ட கஷ்டமான அனுபவங்களை டெல்லி தேரதல் கமிஷன் முன்பே முறையிட முடிவு

நாமக்கல்லில். ஓய்வுபெற்ற ஆசிரியர் பெருமக்கள் பாராட்டு விழா


புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு

2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.05.2014 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 02.05.2014 முதல் 15.05.2014 வரை (விடுமுறை நாட்களை தவிர) www.tndge.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன்) குறிப்பிட்டுள்ள Nodal Centre-க்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.முழு விவரம்.....

1.ஆன்லைன்  மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்
2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.05.2014 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 02.05.2014 முதல் 15.05.2014 வரை (விடுமுறை நாட்களை தவிர) www.tndge.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன்) குறிப்பிட்டுள்ள Nodal Centre-க்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
2.தேர்வுக் கட்டண  விவரம்:தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50/-
3.விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை
அ)விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது  பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் /  பதிவுத்தாள் நகல் /  பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில்  ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆ)ரூ.40/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.
டி.இ.டி., தேர்வில், கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக, டி.இ.டி., தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும், நேற்று முன்தினம், நீதிபதி, நாகமுத்து முடித்து வைத்தார். டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு, 40 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படுகிறது. 'இந்த முறை அறிவியல் பூர்வமானது அல்ல. இது, தேர்வர்களிடையே, முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசு கொண்டுவந்த இந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது; பாரபட்சமானது' என, நீதிபதி, நாகமுத்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேட்ரபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இவ்வாண்டு 8ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுடன் ஆசிரியர்கள்

தகவல்
திரு .பொன் நாகேஷ்
தலைமை ஆசிரியர்
மற்றும்
மாவட்டச்செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
கிருஷ்ணகிரி மாவட்டம்


ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர்.

தமிழ் வழியிலான கல்விக்கு முன்னுரிமை - தனி நீதிபதி தீர்ப்பை உறுதிசெய்த நீதிமன்றம்

"தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை படிப்பை தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும்".
தனி நீதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த உத்தரவை மீண்டும் உறுதிசெய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, நீராவியை சேர்ந்த மாரியம்மாள்,

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5 கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை
www.tndte.gov.in இணையதளத்திலிருந்து ஜூன் 20-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15 ஆகும்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன் 2-ந்தேதி திறப்பு

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.
விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2-ந் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன.

அதிகாரியின் சர்வாதிகார முடிவால் தொடரும் சிக்கல்: "பட்டதாரிகளை பந்தாடும் பள்ளிகல்வித்துறை"

தர வரிசைப் பட்டியல் முறையில் விஏஓ தேர்வு முடிவு: நவநீதகிருஷ்ணன்


குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் சொத்து விபரங்களை அளிக்க கோரி சுற்றறிக்கை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத ஊழியர்கள் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்கள் விபரங்களை அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நிதிநெருக்கடி, நிதிமுறைகேடுகளினால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட தமிழகஅரசு முதன்மைச் செயலாளரான ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நிதிநெருக்கடியை சீரமைத்து வருகிறார்.

சென்னை உள்பட அனைத்து இடங்களுக்கும் ஒரே மின்வெட்டு முறை: ஒழுங்குமுறை ஆணைய நெறிமுறைக் குழு விரைவில் முடிவு


தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல சென்னையிலும் சம அளவில் மின் வெட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வதற்கான நெறிமுறைக் குழுக் கூட்டம், ஒரு வாரத்தில் கூடவுள்ளது. இதில் சமமான மின் வினியோக திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

மின்சார பற்றாக்குறையால், சென்னையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு மணி நேர மின் வெட்டு அமலாகிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாமல் பல மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வினியோகம் மற்றும் மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய இரும்புத் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில், இந்திய நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு

டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோருக்கு, விண்ணப்பிக்க அட்டவனை வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டு, மே, 1ம் தேதி (நேற்று) வரை, பன்னிரண்டரை வயது பூர்த்தியானால் போதும், அவர்கள் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. அதனால், டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிக்கும் டிரைவர்கள்,

நாளை முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ., விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, கலந்தாய்வு மூலம், அண்ணா பல்கலை நிரப்ப உள்ளது. இதற்காக, நாளை, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 56 இடங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அனைத்து வினியோக மையங்களுக்கும், பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன.

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

TNTET - வேதனை - கட்டுரை

வருடம் 2004

அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
ஒரு நாள் காலை வழக்கம் போல் சக ரயில் நண்பர்களுடன் சந்தோஷமாக அரட்டை அடித்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கையில் நாங்கள் பயணம் செய்து வந்த ரயில் ஜங்க்ஷனில் நின்று மீண்டும் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது வேகமெடுக்கத் துவங்கிய ரயிலினை ஓடிப்பிடித்து, ஒரு போலீஸ்காரர் எங்கள் பெட்டியில் ஏற வந்தார். எங்கள் பெட்டியில் படியருகே நின்றவர்களும் அவருக்கு கை கொடுத்து பெட்டியின் உள்ளே இழுத்து கொண்டனர்.

தனியார் எம்பிபிஎஸ் சீட்டுக்கு ரூ.80 லட்சம்?- புகார் வந்தால் நடவடிக்கை: சுகாதாரத்துறை தகவல்


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட்டுக்காக 80 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.www.tndge.in என்ற

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவு


தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் 01.09.2013-ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி உத்தரவு

DEE - TEACHER & STUDENTS STRENGTH FIXATION AS ON 01.09.2013 - EXCESS TEACHERS DETAILS CALLED REG PROC CLICK HERE... 

DEE - STRENGTH FIXATION FORMAT CLICK HERE...

தகுதித் தேர்வு என்றோர் இடியாப்பம்

TET தேர்வு எழுதி முடித்து ஓராண்டு காலம் நெருங்கியும் ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சரியான வழிமுறையை கடை பிடிக்க முடியவில்லை அரசால்.
அரசு ஊழியர்களை நியமிப்பதலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு.முரண்பாடு என்பதை விட நிர்வாகத் திறன் குறைவு.இப்படி உள்ள நீங்கள் எப்படி அரசாங்கத்தை அதிக திறமையோடு நிர்வகிக்க முடியும்? இதை நான் சொல்லவில்லை நடுநிலையான ஊடகங்கள் சொல்கிறது.
தினம் ஒரு செய்தி,காலை ஒரு செய்தி,மதியம் ஒரு செய்தி மாலை ஒரு செய்தி இரவு 10 மணிக்கு 10 மணி செய்தி.இவையனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக மாறுகிறது.

அண்ணாமலைப் பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2014-15-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம் வருகிற மே.2-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.


இந்த விண்ணப்பங்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1500 ஆகும்.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை... : பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, வண்ணச் சீருடைகள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் அமைந்துள்ள, புதுச்சேரி அரசு பள்ளிகளில், ஒரு லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான சீருடைகளை, பள்ளிக் கல்வித்துறை இலவசமாக வழங்கி வருகிறது.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடை, பச்சை-வெள்ளை, காக்கி - வெள்ளை, நீலம்-வெள்ளை என டல்லடிக்கும் வண்ணங்களில், ஒரே மாதிரியாக இருப்பது சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகள் தங்களது சீருடையை அடிக்கடி மாற்றுகின்றன.

சேலம் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக கல்வி அதிகாரிக்கு உத்தரவு

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் முன் 13ம் தேதி ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசுப்ரமணியம் சேலம் மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனியார்

இதுவரை பள்ளிசெல்லா குழந்தைகள் 1,184 பேர்; உண்டு - உறைவிட மையம் நடத்த விண்ணப்பம்


ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த பள்ளிசெல்லா
குழந்தைகள் கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,184 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உண்டு, உறைவிட மையங்கள் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு


தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு


அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்

மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கவேண்டும். இந்த இடங்களை அரசு நிர்வாகம் நிரப்பும். தற்போது மும்பையில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் நர்சரியிலேயே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் மாநில துவக்க கல்வி இயக்குனர் மகாவீர் மானே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்வி கட்டணம் பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும்.

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை


பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

சிக்கல்

கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்


ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை. அதற்கான, 'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15; மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு' முறை கொண்டு வரப்பட்டது. கடந்த, பிப்ரவரியில், பள்ளி கல்வித் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. அதாவது, இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்கள், 55 சதவீத மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி பெறுவர். கிரேடு முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும், தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' நிர்ணயிக்கக் கோரியும், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நமது பொதுச்செயலரின் உத்தேசபயண விவரம் (மே-10 முதல் 12 வரை)

10.05.2014 சனிக்கிழமை
காலை-8.00
ஊத்தங்கரை வித்தியாமந்திர் தாளாளர் நண்பர் சந்திர சேகரனுடன் சந்திப்பு
10.00 மணி
செங்கம் முறையாறு வாம் தொண்டு நிறுவனம் திரு ராஜவேலு வுடன் ஓர் சந்திப்பு
மற்றும் செங்கம் வட்டார பொறுப்பாளர்ள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்- சங்க வளர்ச்சி பற்றிய ஆய்வு
2.00 மணி
தண்டராம்பட்டு புதிய கிளைப்பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
வட்டாரத்தின் சங்கச்செயல்பாடுகள்- செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஓர் கலந்துரையாடல்

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய 25 பயனுள்ள தகவல்! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ,   சோம்பலிலோ,வேறு வேலையிலோ குழந்தையின்
குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!


2. மேலாடையின்றியோ ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய்  தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும்  என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு"  "தொணதொண என்று கேள்வி கேட்காதே"
என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,  அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில்  தனியாகவோ, பிற  குழந்தைகளுடனோ அனுப்பினால்,  அந்த வாகன ஓட்டுனரின்  முழு விவரமும்  தெரிந்து கொள்ளுங்கள், அவர்  வீட்டு முகவரி உட்பட.  5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும்,  பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY DDCE MAY 2014 EXAM TIME TABLE

CLICK HERE-2014 DDCE MAY 2014 EXAM TIMETABLE

ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


     இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

செயல் வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தைகளின் ஆரம்பகால கல்வி செயல்வழியிலேயே நடைபெற வேண்டுமென்பது பல காலமாக கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படை கோட்பாடாகும்.

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு-நீதிமன்றம் உத்திரவு

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு

Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?

 மாதிரி வழிமுறை

இரட்டைப் பட்டம் -உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் அதிரடியாக அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர்.மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு

TET -வழக்கில் தீர்ப்பு வெளியானது. வெயிட்டேஜ் கணக்கிடுவதில் மாற்றம் செய்ய நீதிபதி உத்திரவு

5% சதவீத சலுகை மதிப்பெண் 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு வழங்க்கப்படாதது சரியே
மேலும் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதில் மாற்ரம் செய்ய அறிவுரை வழங்கி நீதிமன்றம் உத்திரவு

TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED.

 2013 CANDIDATES 5% STANDS CORRECT.

 WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD

(INSTEAD OF MECHANICAL METHOD)

பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கப்படும் பரிசுப்பொருட்களை வாங்க தடை

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல் முறை காண இங்கே கிளிக் செய்யவும்

அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்

அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி

2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்-நீதிபதி தீர்ப்பு!!

2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் "raw&reddy"வாதாடினார்..2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார்.இதனை விசாரித்த நீதியரசர் "நாகமுத்து "அவர்கள் 2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார்.
தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...

தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள முதலமைச்சர்களின் பட்டியல்

நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள முதலமைச்சர்களின் பட்டியல்
1. திரு A சுப்பராயலு 17-12-1920 to 11-07-1921
2. திரு பனகல் ராஜா 11-07-1921 to 03-12-1926
3. டாக்டர். P சுப்பராயன் 04-12-1926 to 27-10-1930
4. திரு P முனுசுவாமி நாயுடு 27-10-1930 to 04-11-1932
5. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 05-11-1932 to 04-04-1936
6. திரு P T ராஜன் 04-04-1936 to 24-08-1936
7. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 24-08-1936 to 01-04-1937
8. திரு குர்மா வேங்கட ரெட்டி நாயுடு. 01-04-1937 to 14-07-1937
9. திரு C ராஜகோபலச்சரி 14-07-1937 to 29-10-1939
10. திரு தங்குட்டரி பிரகாசம் 30-04-1946 to 23-03-1947
11. திரு O P ராமசுவாமி ரெட்டியார் 23-03-1947 to 06-04-1949
12. திரு P S குமாரசுவாமி ராஜா 06-04-1949 to 09-04-1952

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....


“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்தவர் பாவலரான பாரதிதாசன் அவர்கள்.


‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர்,

விடுமுறையிலும் பயிற்சி தேவையா?


பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும்.
ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர விளையாட்டு; ஒரு சில குழந்தைகளுக்கு கொஞ்ச நாளைக்கு புத்தகத்தை தொட வேண்டாம் என்கிற மகிழ்ச்சி; இன்னும் சிலருக்கு தாத்தா, பாட்டியுடன் கிராமத்தில் விடுமுறையை இன்பமாகக் கழிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு - இப்படி பல வண்ணங்களில் அவர்களின் கனவுகள்.

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!


விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை.

சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும்.

அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும்.

தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ், பிடிஎஸ் அனுமதி சேர்க்கை: மே.2-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2014-15 ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம் வருகிற மே.2-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்


இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்தாண்டு ஆகஸ்ட் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஃபிப்ரவரி சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதிதேர்வில் 150க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.

விரைவில் அடுத்த அதிரடி ஆவின் பால் விலை ஜூன் முதல் உயருகிறது DINAKARAN


பால் கொள்முதல் விலை ஜனவரியில் 3 உயர்ந்தது. ஜூன் மாதம் முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 6 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், பால், மின் கட்டணம், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டது. வரும் மே மாதத்துடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நான்காம் ஆண்டு தொடக்கத்தில் பால், மின் கட்டணம், பஸ் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால்தான், மின்துறையில் 75 ஆயிரம் கோடி நஷ்டம், ஆவினில் ஸீ10 கோடி நஷ்டம், போக்குவரத்தில் ஸீ50 கோடி நஷ்டம் என்று பத்திரிகைகளின் வாயிலாக நஷ்டக்கணக்கை கசியவிட்டு வருகிறது.

சத்துணவு கூடத்துக்கு முட்டை சப்ளை மாநில அளவில் ஒரே டெண்டர் சரிதான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 ஸ்டார் கோழி பண்ணை, எஸ்எஸ்.என் கோழி பண்ணை ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு: தமிழகம் முழுவதும் சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாவட்ட அளவில் அரசு டெண்டர் விட்டு வந்தது. இந்த டெண்டர் முறையை மாற்றி கடந்த ஆண்டு அரசு மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது. இதில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. நேச்சுரல் புட் நிறுவனம், சொர்ணபூமி நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்விட்டது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும். மாவட்ட அளவில் டெண்டர் விட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மாநில அளவில் டெண்டர் விட்டது சரியானதுதான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் டெண்டர் விடுவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது.

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 44 மாணவியர் விடுதி ஜூனில் கட்டுமான பணியை துவக்க திட்டம்

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கல்வி திறனை வளர்த் தல், இடைநிற்றலை தவிர்த் தல், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், கூடுதல் வகுப்பறைகளை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின மூலம் தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி செலவில் 13 மாவட்டங்களில் மாணவியர்கள் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கடலூர் மாவட்டத்தில் 3, விழுப்புரம் மாவட்டத்தில் 8,

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது:


முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு உத்தரவு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை.

30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க டெண்டர்

அரசு பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

கல்வி கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு


தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நேற்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில், பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வர உள்ளதால், மாணவர்களின் பதிவு எண் தொடர்பாக எந்த குழப்பங்களும் இருக்கக்கூடாது.

தமிழகத்தில் கூரியர் சேவைக் கட்டணங்கள் திடீர் உயர்வு


கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் கடும் வசூல் வேட்டை அரசு தடுக்குமா; பெற்றோர் கொதிப்பு

தமிழகத்தில் 10 ஆயிரத்து 934 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2009ல் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டண கமிட்டி ஏற்படுத்தப்பட்டு 2010 மே மாதம் கட்டணங்கள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இக்கட்டணத்தில் திருப்தியடையாத கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் கல்வி கட்டண கமிட்டியிலிருந்து வெளியேறினார்.

வேலைவாய்ப்பு இணையத்தில் பொதுத்தேர்வு முடிவு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்'டில், பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவு இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே மாதிரியான "சீனியாரிட்டி' பின்பற்றப்படுகிறது. அவ்வாறில்லாமல், "பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், மாணவரின் "சீனியாரிட்டி' தேதியில், மாற்றம் ஏற்படும்' என, வேலைவாய்ப்பு அதிகாரி கள் தெரிவித்தனர்

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -

CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus

 Important Dates
Application Forms are issued from 
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்

கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்

மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும்
 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை
வெளியாகிறது. அதைத் தொடர்ந்து,
 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல,  
 
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான, 23ம் தேதி வெளியிடப்படுகிறது

தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்,அல்லோலகல்லோலப்பட்ட ஆசிரியர்கள்


விடிய, விடிய பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த பெண் ஊழியர்கள்(ஆசிரியைகள்)


தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு, இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய,
ஈரோடு பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியிலும், 1,953 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு பணியாற்றிய, 9,376 ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர் மற்றும் ஊழியர்கள், 23ம் தேதி தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், சொந்த தொகுதியில் பணியாற்ற அனுமதிப்பதில்லை. இதனால், "ரேண்டம் சிஸ்டம்' அமைப்பில், தொகுதி விட்டு தொகுதிக்கு மாற்றப்படுகின்றனர். இந்த லோக்சபா தேர்தலிலும், ரேண்டம் சிஸ்டம் அடிப்படையில் தொகுதி விட்டு தொகுதிக்கு மாற்றப்பட்டனர். பல ஆயிரம் தேர்தல் அலுவலர்கள், பஸ் வசதி இல்லாத இடங்களுக்கு, பணி அமர்த்தப்பட்டனர். இதில், 70 சதவீதம் பேர், பெண்களே நியமிக்கப்பட்டனர்.

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு TNTF-ன் வீர வணக்கங்கள்

பொள்ளாச்சி வடக்கு பணிநிறைவு பாராட்டு விழா

தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மே 16–ந்தேதி கடைசி நாள்

தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தபால் ஓட்டு போட மே 16–ந் தேதி கடைசி நாளாகும்.


தபால் ஓட்டு


திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 24–ந் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பணியாளர்கள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போட ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் ஓட்டு சீட்டுகளை பெற்று தபால் ஓட்டுகளை போட்டு வருகின்றனர்.

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில் நடைபெறும்


ஏப்ரல்-20 ஆசிரியர் பேரணி இதழ் (தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ ஏடு)

இங்கே சொடுக்கவும்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்க வலியுறுத்தல்

அரசு நிர்ணயித்த கட் டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் என்று மாணவர் பெற் றோர் நலச்சங்கம் வலிய றுத்தி உள்ளது.பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட் ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்ற னர்.
இதன் கிளை ஸ்ரீ சங்கர வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள்.ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் நர்சரி அண்டு பிரைமரி பள்ளி யில் அரசு நிர்ணயித்த கட் டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்துள் ளது. எனவே, பள்ளிக்கு எதிராக மாணவர் பெற் றோர் பாதுகாப்பு நலச்சங் கம் சார்பில் தொடரப் பட்ட வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள் ளது.

ஜனநாயகக் காவலர்கள் :அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி -புதிய தலைமுறை இதழ் தலையங்கம்.

விடுமுறை என்று நாம் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அவர்கள் களத்தில் அல்லது அயலூரில் கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்...அவர்கள் இயந்திரங்கள் அல்லர். உழைப்பும் களைப்பும் உறவும் பொறுப்பும் கொண்ட நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் தான்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ராஜோந்திர மால் லோதா இன்று பதவியேற்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகம் சுற்றுலா மையத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ-25000/- நிதியளிப்பு


சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று ஆசிரியை திருமதி .D.விஜயலட்சுமி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.



அன்பு மிக்க ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!

சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று (27.04.2014) திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி .D.விஜயலட்சுமி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

ஆசிரியை திருமதி .D.விஜயலட்சுமி பற்றி...

கண்ணமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி .D.விஜயலட்சுமி தன் ஆசிரியப் பணியை மிகவும் நேசிப்பவர்.

சிறந்த எழுத்தாளர், எப்படியாவது தன் மாணவர்களை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்று துடிப்புடன் செயல்படுபவர் .

தன் பதினெட்டு ஆண்டு கால அனுபவத்தில் தான் சந்தித்த மறக்க முடியாத மாணவர்களையும் அவர்களுடனான அனுபவத்தையும் கல்வி விகடன் இணைய இதழில் எழுதி வருகிறார்

மாணவர்களுக்கு புதிது புதிதாய் இவர் அறிமுகப்படுத்தும் வளரறி (FA) செயல்பாடுகள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சுட்டி விகடன் இதழை அலங்கரிக்கின்றன .

அதுமட்டுமின்றி பெண்மை ,சமூகம்,காதல் போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் ithamilhttp://www.ithamil.com/archives.html என்ற இணைய இதழில் இடம்பெற்று உலகம் முழுவதுமான வாசகர் வட்டத்தை இவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது .

ஆனந்த விகடனில் ,"குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது எப்படி?" என்ற தலைப்பில் இவரது கட்டுரை பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை தருவதாக இருந்தது

.தி ஹிந்து ஆங்கில நாளிதழில் தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் இவர் தமிழ் தி இந்து இணைய இதழிலும் தனது விழிப்புணர்வு கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் .

அவள் விகடனில் அனுபவம் பேசுகிறது .குட்டீஸ் குறும்பு ஆகிய பகுதிகளில் இவரது சொல்வன்மை இடம்பிடித்திருக்கிறது .

இவரது படைப்புகள் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. முக்கியமாக தினமலர், தினத்தந்தி,
கல்கி ,கவி ஓவியா,,பாக்யா , தேவதை ,தங்க மங்கை ,புதிய தலைமுறை ஆகிய இதழ்களில் இவரது கதை ,கட்டுரை ,கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன .

அடுத்த மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம் : தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது.

விடைத்தாள்களை விற்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுமா?

பள்ளிகளில் தேர்வு முடிந்துள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் எடையில் வரும் பணத்தை விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 40 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில் மாதாந்திர தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும்.

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி

பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.


பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது.

மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய, கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

பதிவு மூப்பு : தேர்வு முடிவிற்குப்பின், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய, மாணவ, மாணவியர், நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம் ஆனாலும், பதிவுமூப்பு தள்ளிப்போகும் நிலையும் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே, "ஆன் - லைன்' மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள, இரு ஆண்டுகளுக்கு முன், திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை, தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும், ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. பின், பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன

web stats

web stats