rp

Blogging Tips 2017

2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.

நம்நாட்டில், இன்ஜினியரிங் படிப்பு, இளநிலையில், நான்கு ஆண்டு; முதுநிலையில் இரண்டு ஆண்டு நடத்தப்படுகிறது. டிப்ளமோ இன்ஜி., படிப்புகள் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகள், பல அடுக்கு முறைகளில் உள்ளன.இதன்படி, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, மூன்று ஆண்டு; பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு; பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி அடிப்படையில், டிப்ளமோ இன்ஜி., படிப்புகள் நடத்தப்படுகின்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலுள்ள, இந்த பல அடுக்கு டிப்ளமோ படிப்புகளில், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலையும் கட்டுப்படுத்தும் அமைப்பான, என்.பி.ஏ., புதிய வரைவு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, டிப்ளமோ, இரண்டு ஆண்டு படிப்பை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிப்ளமோ இன்ஜி., படிப்பு,

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது. போராட்டங்களில்,
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடக்கக்கல்வி - SC / ST இடைநிலையாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் -பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டதுஅவர்களின்,இடைநிலை மற்றும் தலைமை ஆசிரியர்கள் 01.01.2015ன்படி முன்னுரிமை பட்டியல் கோரு வது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - 4526 தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - கரும்பலகை திட்டம் -1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

click here to download

பணி புரியும் பள்ளியில் பி.எட் பயிற்சி பெறுபவர்களுக்கு முழு ஊதியம் பெற முடியும் என RTI தகவல் ...முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது! நாள் : 11/08/2015




பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டணம்-கைவிடக்கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

           அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.

அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

  • நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதை தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 2015-க்கான பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆக. 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில், செப்டம்பர், அக்டோபர் 2015 பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆக. 13 முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை

மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 இந்த நடைமுறையானது, அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதம் ஜூலை: அமெரிக்க விஞ்ஞானிகள்

பூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி விஞ்ஞானிகள் கூறும் போது ”கடந்த காலத்த ஒப்பிடும் போது 1880 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில்,

ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும், 28ம் தேதி, ஒரு நாள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, செப்., 12ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

இந்த ஆண்டு பணியிட நிரவலில் மாறுதல் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், 22-08-2015 மற்றும் 29-08-2015 நடைபெறும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வில்,

பணி நிரவலுக்கு முன்பு பணியாற்றி வந்த பள்ளியின் முன்னுரிமைப்படி, பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களும் தெரிவித்தார்கள்

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம் - மத்திய அரசு முடிவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்கி விடாமல், அவர்களை, 'பாஸ்' செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இந்த அடிப்படையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாணவிகளுக்கான உதவித்தொகை,

சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இம்மாதம் முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களைப்போல் சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணியாளர்களும் இம்மாதத்தில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்த அரசு உத்தரவு:

746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்

746 பள்ளிகளுக்கு குறைந்த பட்ச நிலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் மே 2016 வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 

           தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச நிலப்பரப்பு என்பது பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

 மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

            நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'மாணவர்களின் நிதித் தேவை, கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்காக விசேஷமான தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆணையம் அமைக்கப்படும்' என்றார்.

அதன் ஒரு விளைவாக, www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை மத்திய நிதித்துறை, சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்துள்ளது.

பாடம் எடுக்க மறுத்த ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்புக்கு பாடம் எடுக்க மறுத்த இரு ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். 

          ராமேஸ்வரம் புதுரோடு அரசு நடுநிலைப்பள்ளியில் 282 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜெரோம், பள்ளி மாணவி ஒருவரை மொபைல் போனில் படம் எடுத்ததாகவும், மற்றொரு மாணவியின் தலை முடியை சரி செய்ததாகவும், மாணவர் ஒருவரிடம்

45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாதஇறுதிக்குள் வழங்க ஏற்பாடு

மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.

       இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள்,மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறுபான்மையின நலவாரியப்பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.இதில், ஆண்டுதோறும் 4 முறை வழங்கும் இலவச சீருடையில், முதல் கட்டமாக 90 லட்சம் இணை சீருடை ஜூன் மாதம் வழங்கப்பட்டது.மேலும்

நடுநிலைப்பள்ளியில் பி.எட் பயிற்சி பெறுபவர்களுக்கு முழு ஊதியம் பெற முடியும் என RTI தகவல் ...முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது!


நடுநிலைப்பள்ளிகளீல் பணியாற்றும் ஆசிரியர் அதே பள்ளியில் பிஎட் கற்பித்தல் பயிற்சி எடுத்தால் விடுமுறை போடவேண்டாம், மற்றும் முழு ஊதியம் உண்டு -RTI தகவல்


8ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' ரத்தாகிறது; ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!

8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது.
மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வளரிளம் பருவ மாணவ/மாணவியருக்கு வாரந்தோறும் போலிக் அமிலம் அடங்கிய இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்குவது சார்பு- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறை


பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.

பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டத்தில், 'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மன்றங்கள் துவங்கப்படுகின்றன. இவ்வாறு, துவங்கப்படும் மன்றங்கள், ஒன்று அல்லது, இரண்டு மாதங்கள்

கடல், குளத்தில் குளிக்கக்கூடாது என மாணவர்களை அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.
* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது

மன உளைச்சலால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள்: கவுன்சிலிங் தர அரசு முன்வருமா?

பள்ளிகளில் ஆசிரியர்களால், ஏற்படும் பிரச்னைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, கல்வியில் பின்தங்கி இருப்பது, குடும்ப சூழலால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை, விரோதமாகவும், வன்முறை செயல்களாகவும் வெளிப்படுத்துகின்றனர். இத்தகைய செயல்களை கட்டுப்படுத்தவே, பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களுக்கும் இதே நிலை இருப்பதாக, தற்போது நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
பணிச்சுமை
திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் துவக்கம் முதல் மேல்நிலை வரை, பத்தாயிரத்துக்கும் அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் காலிப்பணியிடம் இருப்பதால், அவர்களுக்கான பணிகளையும் மற்ற ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பணிச்சுமைக்கு மட்டுமின்றி மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
தவிர, மாணவர்களைப் போன்று குடும்பச் சூழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மனதளவில் பாதிக்கப்படும் நிலைகளும் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்தில் பிரச்னை எழுப்புவது மற்றும் மாணவர்களிடம் வெறுப்பை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது பெரும்பான்மையான பள்ளிகளில், மாணவர்களிடையே நடக்கும் பிரச்னைகளை விடவும், ஆசிரியர்- தலைமையாசிரியர், ஆசிரியர்- நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்- உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையேயான பிரச்னைகளே அதிகரித்துள்ளன. இதற்கு, முதன்மையான காரணம், ஆசிரியர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதே. அரசுப்பள்ளிகளில், குறிப்பாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த பிரச்னைகள் தீர்வுகாணப்படாத பிரச்னையாக தொடர்ந்து நடக்கிறது.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளிலும் இத்தகைய பிரச்னைகள் இருப்பினும், அவை வெளிப்படையாக தெரிவதில்லை.
பள்ளி மாணவர் அல்லது ஆசிரியரோ, இதனால் பெரிதளவில் பாதிக்கப்படும்போது மட்டுமே, இவை கண்டுகொள்ளப்படுகின்றன. அந்த சூழலிலும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனரே தவிர, தீர்வுக்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், சமீபத்தில் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கடையே பிரச்னை தீவிரமாக நடந்துள்ளது. இம்மாவட்டம் மட்டுமின்றி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது.
இத்தகைய பிரச்னைகள் கல்வித்துறை அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபப்படாமல் இருப்பது மற்ற ஆசிரியர்களிடத்தில், வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால், பிரச்னை ஏற்படும் போது, அதற்கு முறையான தீர்வு கிடைக்காது என்ற சூழ்நிலையால், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வேறுவழியின்றி பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பிரச்னையாக இருப்பினும், அதனால், அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்.
ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிப்பது, மாணவர்களை வழிநடத்துவது உட்பட கல்வி ரீதியாக மட்டுமே பயிற்சிகள்

பள்ளி மாணவர்களுக்கு 'எரிசக்தி சேமிப்பு' போட்டி: வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழகம் சார்பில் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டிகளை சம்பந்தப்பட்ட பள்ளியே நடத்தி முதலிடம் பிடிக்கும் மாணவர் பட்டியலை புதுடில்லியில் உள்ள பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி மையத்திற்கு என்ற 'இ மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டிகளை செப்., 30 க்குள் முடிக்க வேண்டும்.

திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாதந்தோறும், 1,250 ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகையைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதற்கட்டமாக மாநில அளவில், நவ., 8ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும்

உபரி பகுதி நேர தொழில் ஆசிரியர் அதிரடி மாறுதல்

அரசாணை எண் 177 நாள் 11. 11. 2011 ன்படி 6முதல் 8 வகுப்புகளுக்கு பகுதி நேர தொழில் ஆசிரியர்கள் 16549 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி
வருகின்றனர். இவர்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.தனியார் பள்ளி மோகம் அரசு பள்ளியை பாதிக்கும் அடுத்த நிகழ்வாக 6-8 வகுப்பில் 100க்கு குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர தொழில் ஆசிரியர்கள்

உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்

உள்ளூர் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவிகள் உடனடியாக உள்ளூர் அரசு பள்ளிக்கு

திருக்குறள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி சார்பு செயல்முறை

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கண்ணோட்டம்.

இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசையை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.


காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு
நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ரூ-500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடக்கக் கல்வி - ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் சார்பு

"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு

"INSPIRE AWARD" பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த  காலஅவகாசம் 31/08/2015 வரை நீட்டிகப்பட்டுள்ளது.
இது குறித்த  அறிவிப்பு "INSPIRE AWARD" வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுமையாக பதிவு செய்து கொள்ளலாம்        

இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் :ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் நிதி இழப்பு

மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர் ஓய்வூதிய பணப்பலன் இன்றி ஓய்வு பெறும் நிலை நீடிக்கிறது.மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் பணியிடம் 75 சதவீத பதவி உயர்வு மூலமும், 25 சதவீத நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை:மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி, அவர்களின் பணிக்காலம் உள்ளிட்ட

SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.அதற்கான பணிமனை 17.08.2015 முதல் 21.08.2015 வரை சென்னை DPI வளாகத்தில் நடைபெற்று வருகிறது..

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

The Allahabad high court on Tuesday took a serious note of the pathetic condition of primary schools in the state and directed the chief secretary to ensure that children/wards of government officials/servants, those serving in the local bodies, representatives of people and judiciary, etc., send their wards to these schools.

INSPIRE AWARD - "PASSWORD" மறந்தவர்களுக்கான வழிமுறைகள், புதிதாகப் பதிவு செய்யும் பள்ளிகளுக்கான வழிமுறைகள் - செயல் இயக்குனர் செயல்முறைகள் - பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015

அகஇ - பகுதி நேர பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி நிரவல் - இயக்குனர் செயல்முறைகள்


மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.

கலை - அறிவியல் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர முறை வருமா?

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு உள்ளதுபோல் கலை - அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர பொதுக் கலந்தாய்வு முறை கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.இதன் மூலம், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும் என்கின்றனர் அவர்கள்.
தமிழகத்தில் 536 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம்

இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை, நேரடியாக பள்ளிகள் மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது

14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்'

இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகள்...
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 1,000 முக்கிய ஆங்கிலச் சொற்கள்

click here to download

English phonetic sounds it is very useful for all students please save and use your class and then you think English is very easy to read. — with

CLICK HERE TO DOWNLOAD ENGLISH PHONETIC SOUNDS ............................

ENGLISH LEARNING FOR PRIMARY CLASS -A -Z

Some Important Words for Primary School Children:

click here to download in pdf formate
A
a, about, above, across, act, active, activity, add, afraid, after, again, age, ago,agree, air, all, alone, along, already, always, am, amo unt, an, and, angry, another,answer, any, anyone, anything, anytime, appear, apple, are, area, arm, army,around,
arrive, art, as, ask, at, attack, aunt, autumn, away.

உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு

வளர் இளம் பருவத்தினருக்கு உடல், மனம் சார்ந்த மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்செயல்படுத்தப்பட்டு வரும் 5,748 உயர்நிலைப்பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் 9,10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்காக குமரப்பருவ மன்றம், கலை, பண்பாடு இலக்கிய மன்றம், விழிப்புணர்வு மன்றம் ஆகிய மன்றங்களை அமைக்க வேண்டும்

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டு
உள்ளது. 'இந்த காலியிடங்களுக்கு, பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 7,500 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில்

போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர் களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது

தொடக்ககல்வி - தந்தை பெரியார் 137- ம் பிறந்தநாள் விழா - "பெரியார் ஆயிரம் " என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி 18/08/2015 நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்


அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் ஆதார் எடுப்பதற்கான சிறப்பு முகாம் பள்ளிகளில் நடத்துதல் சார்பு-பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை.



அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு: பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!

"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.

'ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, 8ம் தேதி துவங்கியது. தொடக்கப்பள்ளி இயக்குனரகம் தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியாகவும், கலந்தாய்வை நடத்தி வருகின்றன.

மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல்

மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி:மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழியே செயல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டு, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்

தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. 1.27 லட்சம் பணியாளர் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் காலிப்பணியிடம் போக, 97 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். தற்போது கலவை சாதத்துடன் தினசரி முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
முட்டை கொள்முதலை பொறுத்தமட்டில், சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மாநில அளவிலான டெண்டர் விடப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட கோழிப் பண்ணையாளர்களும் பங்கேற்பர். மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த ஒன்றிய அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும். அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிய அலுவலகம் சென்று, முட்டையை வாங்கிக்கொண்டு மையத்துக்கு செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா, 46 முதல், 52 கிராம் வரை இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால், 552 கிராம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சத்துணவு முட்டையில் பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முட்டை வினியோகத்தை நேரடியாக பண்ணையாளர்களே செய்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த வாரம் முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.
முட்டை வாங்கும்போது, அதன் எடை சரியாக உள்ளதா, சிறிய அளவிலான முட்டை உள்ளதா? என்பதை கவனித்து வாங்கினால்

பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுப்பு

பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி

பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. பணி மூப்பு அடிப்படையில் 650க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 10 சதவீதம் தவிர்த்து 90 சதவீத காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர், அதற்கு, அரசாணையில் உள்ள தமிழ் பெயர்,

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், 'புதிய விதிமுறைகளை, 21 நாட்களுக்குள் அமல்படுத்து வோம் என,

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நாளன்று நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை விண்ணப்பத்தின் மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க இயக்குனர் உத்தரவு!

4ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு

சென்னை:'எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த, மின்வாரிய அதிகாரியின் உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய என் தாய்,

ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்
தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் கள் நியமனம் நடந்தது.டெட் தேர்வு நடத்தாவிட்டால், ஆசிரியர்களுக்கு தரப்படும், 50 சதவீத ஊதிய மானியம் கிடைக்காது என, மத்திய அரசு
எச்சரித்தது. அ.திமு.க., ஆட்சிக்கு வந்ததும், 2012 முதல் டெட் தேர்வு கட்டாயம் எனவும், தேர்வில், 150க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது. 
வழக்கு:
முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. அதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்திலிருந்து, மூன்று மணி நேரமாக மாற்றி, மறுதேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.பின், 2013 ஆகஸ்டில், இரண்டாவது டெட் தேர்வு நடத்தி, தேர்ச்சிப் பட்டியல் வெளியான நிலையில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற வகுப்பினருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வை அரசு அளித்தது.இதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 7,500 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில், இரண்டு இடங்களில் இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களும், மதிப்பெண் சலுகை பெற்றவர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் தான், தமிழக அரசு விழித்துக் கொண்டு, மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.இந்த பிரச்னைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய, நான்கு, டெட் தேர்வுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தவில்லை. இதனால், ஆசிரியர் பணியை நம்பி, பி.எட்., மற்றும் டி.எட்., படித்த ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர். 

பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்17-ல் தொடக்கம்

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பிபீடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி. (ரேடியோதெரபி டெக்னாலஜி), பி.எஸ்சி. (கார்டியோ பல்மோனரி பெர்பியூஷன் டெக்னாலஜி), பி.எஸ்சி. (ஆப்டோமேட்ரி), பிஓடி ஆகிய 9 பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு 2014-15ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த மாதம் 6-ம் தேதி முதல்

வெளிநாடுகளில் கல்வி மையங்கள் கூடாது:பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

'தொலைநிலை பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், தொலைதுார கல்வி மையங்கள் அமைக்கக் கூடாது' என, பல்கலை மானியக்குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

         இதுதொடர்பாக, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஒவ்வொரு மாநிலத்திற்கும், அரசியல் சட்டத்தில், எல்லை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த எல்லைக்கு வெளியே, எந்த ஒரு மாநிலமும், படிப்பு மையம் அமைக்க முடியாது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும், பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்,

மத நல்லிணக்க நாள் உறுதி மொழி-20.08.2015


web stats

web stats