rp

Blogging Tips 2017

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிலவரம் மற்றும் பழுது பார்க்க உத்தேச திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து

-NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு

-NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ கால வரையற்ற வேலை நிறுத்தம்-தொடர் இயக்க நடவடிக்கைகள் விவரம்

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்_கோரிக்கை கள் முழு விவரம்

ஜாக்டோ ஜியோ அறிக்கை



ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் செ.மு அவர்கள் உரை

இன்றைய ஜாக்டோ ஜியோ இருங்கிணைந்த கூட்ட புகைப்படங்கள்... 👉






இன்று 16.11.2018 சென்னையில் நடந்த ஒன்றுபட்ட ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.செல்வராஜு அவர்கள் போராட்டக் கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றிய நிகழ்வு


இன்று 16.11.2018 சென்னையில் நடந்த ஒன்றுபட்ட ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.செல்வராஜு அவர்கள் போராட்டக் கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றிய நிகழ்வு


04.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 16.11.2018, காலை 11 மணி, சென்னை எழும்பூர், வெஸ்டின்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

*20 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட ஜாக்டோ-ஜியோ.*

*நிதிகாப்பாளர் - 2*

*செய்தி தொடர்பாளர்கள் - 1*

*6பேர் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
1. தொடக்கப்பள்ளி-2

2. உயர்நிலை/மேல்நிலை - 2

3. அரசு ஊழியர்கள் - 2

1.19.11.2018 முதல் 20.11.2018 மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம்.

2. 25.11.2018 மாவட்ட வேலை நிறுத்த ஆயத்தமாநாடு

3. 26.11.2018 முதல் 30.11.2018 தமிழகம் முழுவதும்மாவட்டந்தோறும் பிரச்சாரம்.

4. 30.11.2018 மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.

5. 01.12.2018 பத்திரிகையாளர் சந்திப்பு.

6. 04.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்.

*கோரிக்கைகள்*

1. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

3. உயர்நிலை த.ஆ, முதுகலை ஆசிரியர்கள் அமைச்சு பணியாளர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்.

4.அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

5. 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.

6. 2003-2004 தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிவரண்முறை செய்ய செய்ய வேண்டும்.

7. அரசாணை எண்.56, 100, 101 முற்றிலும் இரத்து செய்யவேண்டும், 5000 பள்ளிகள் மூடப்படும் என்ற கொள்கையை இரத்து செய்யவேண்டும்.

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

CLICK HERE-TO DOWNLOAD -SPD PROCEEDINGS-

DSE - 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் கடிதம் !

CLICK HERE TO DOWNLOAD THE DIR.PRO & FORMAT

அரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான "சிறப்பு தற்செயல் விடுப்பு" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


15.¹1.2018 இன்று தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளைதீர்க்க வலியுறுத்தல்.

.ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதி தாமதிக்கப்படுவதை இயக்குநர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனடியாக இயக்குநர் நாமக்கல் மற்றும் சேலம் CEO க்களை தொலைப்பேசி தொடர்பு கொண்டு பணி வரண்முறை பற்றி கருத்தில் கொள்ளாமல் உடனடியாக தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதித்து ஆசிரியர்களின் பணப்பலன்களை உடனே பெற்றுத்தர மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தக் கூறியுள்ளார். இதை அடுத்த CEO- க்கள் கூட்டத்தில் அறிவித்து மாநிலம் முழுதும் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

INCOME TAX FY -2018-2019-COMPLETE GUIDE

CLICK HERE

DSE - Science Best teacher Award 2018 - Reg Director Proceedings

ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள்' பயிற்சி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது


நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது

இதனால், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன்களை அளவீடு செய்வதற்கு, மாநில மற்றும் தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது

இந்தத்தேர்வுகளில், மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
நடப்பாண்டில், இத்தகைய தேர்வுகளை கையாள்வதற்கும், அடைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', புதிய பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

Best Science Teacher Award 2018 - Instructions And Application Form

Click here-Best Science Teacher 2018 - 19 | Application Form

அறிவியல் கண்டுபிடிப்பு -மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்துதல் - உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவித்தல் -சார்பாக.


தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு

'லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், மண்டல அலுவலர்கள், பயிற்சி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் , பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்தல்பணியாற்ற உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம்.இதனை இன்று காலையில் இருந்து (நேற்று) 48 மணி நேரத்திற்குள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் தனியாக மிக அதிக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் அங்கு பணிபுரிந்த அலுவலர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகிறது,' என்றார்.

Team Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.?


வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு இன்று சலுகை

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுஉள்ளார்.தமிழக பள்ளி கல்வி சார்பில், குழந்தைகள் தின விழா மற்றும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளில், ஓவியம், எழுத்து, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீருடைக்கு பதில், வண்ண உடைகள் அணிந்துவர சலுகை அளிக்கப்பட்டுள்ளது.பல பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சிப்படுத்த, ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

டிச., 23 முதல் ஜன., 1 வரை அரையாண்டு தேர்வுவிடுமுறை விடப்படுகிறது* டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்*

📘📘📘📘📘📘📘📘📘📘

🇲‌🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌

0ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு*


*'தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்*
*இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை*

பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது*

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்*

காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்*

🔰10ம் வகுப்பு*


*டிச.,10 - தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்*


*டிச., 11 - தமிழ் அல்லது மொழி பாடம் இரண்டாம் தாள்*


*13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள்*


*17ல் கணிதம்*


*18ல் விருப்ப பாடம்*


*19ல், அறிவியல்*


*டிச., 22ல், சமூக அறிவியல்*


*🔰🔰பிளஸ் 1 வகுப்பு*


*டிச., 10 - மொழி பாடம்*


*11ல், ஆங்கிலம்*


*12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்*


*டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி*


*17ல், இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்*


*டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்*


*டிச., 22 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்*


*🔰🔰பிளஸ், 2 வகுப்பு*


*டிச., 10 - மொழி பாடம்*


*11ல், ஆங்கிலம்*


*12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்*


*டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி*


*டிச., 17 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்*


*டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்*


*டிச., 22 - வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்*


*இவ்வாறு தேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது*


*இந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23 முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும்*


*ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்*

*SOURCE DINAMALAR WEBSITE*

DSE PROCEEDINGS-ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .

* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்

என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Lok sabha Election 2019 - Personal Polling Empty Application Form (pdf)

Click Here To Download - Lok sabha Election 2019 - Personal Polling Application Form (pdf)

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
(.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர்)


நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

நவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டில் இருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும், பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி. ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்),

*நவம்பர் 14 ( குழந்தைகள் தினம்)*,

ஜனவரி 26 ( குடியரசு தினம்)

ஆகிய நாட்களில் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி

அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 
மேலும், இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுக்கொடுக்க வேண்டும் மற்றும் அனைத்து தமிழ் வழி பள்ளிக்கூடங்களிலும் ஸ்போக்கன் இங்கிலீஷை ஒரு பாடமாக எடுத்து நடத்த வேண்டும் என தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஏன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்களை நடத்தக் கூடாது?" என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்

தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் உள்ள் சலுகை பற்றி எடுத்துக்கூற தலைமை ஆசிரியர் களுக்கு உத்திரவு

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல் - சார்ந்து


முதலமைச்சர் வழங்கும் "அண்ணா விருது" - தகுதி வாய்த்த ஆசிரியர் விவரம் கோரி அரசு உத்தரவு - முதன்மை செயலர் கடிதம்


ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்..

ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக* வெளியிட்டுள்ளனர்.


 1.*போலியான சர்டிபிகேட் கொடுத்து பணியில் இருப்பவர்களை* உடனடியாக பணியில் இருந்து நீக்குதல்

2  பல பள்ளிகளில் *உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு சிறு தொகையை மற்றவருக்கு கொடுத்து அவர்களுடைய வேலையை பார்க்க சொல்வதாக* பல தகவல்கள் வருகிறது அது உண்மையெனில் அவர்களை பணி நீக்கம்  செய்யப்படுவர்.

 3. *தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கண்டறியப்பட்டு* அவர்களையும் பணி நீக்கம் செய்யப்படுவர்.

தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு!!! (பத்திரிகை செய்தி)


2ND TERM -IV STANDARD-TAMIL MEDIAM --FA(b) -4-QUESTION PAPERS- FOR ALL SUBJECT

CLICK HERE

2ND TERM -V STANDARD-TAMIL MEDIAM --FA(b) -4-QUESTION PAPERS- FOR ALL SUBJECT

CLICK HERE

web stats

web stats