rp

Blogging Tips 2017

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்டு ஏன்?

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஈஸ்வரன். கடந்த 2½ ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த அவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கலந்தாய்வில் இருந்த அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினார்.
இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவரது பதவியை நீங்கள் உடனடியாக ஏற்று கொள்ளுமாறு அவருக்கு சென்னை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதற்கான உத்தரவு நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக உஷா உடனடியாக பொறுப்பேற்று கொண்டார்.

பள்ளி மேலாண்குழு(SMC) தலைவரை தள்ளி விட்ட தலைமை ஆசிரியர் மீது போலிசில் புகார்-நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு


பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

DSE - HSHM PROMOTION COUNSELING REG PROC CLICK HERE...

DSE - HSHM PROMOTION FINAL PANEL LIST CLICK HERE...

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்

சமூக வளைதலங்களில் இந்திமொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.

*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்* -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.

வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.

பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


இந்தியாவிலேயே முன்னோடி திட்டமான இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் | Special Tamil Nadu Teacher Eligibility Test 2014- Paper II Certificate Verification Call Letter.

CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO-DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

CLICK HERE FOR PAPER II CERTIFICATE VERIFICATION CENTRE LIST

தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு

DSE - ASSISATANT VACANT DETAILS CALLED REG PROC CLICK HERE...

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்

DSE - BHAVANI SAGAR TRAINING - JUNIOR ASSISTANT / ASSISTANTS REG CLICK HERE...

DSE - BHAVANI SAGAR TRAINING - ELIGIBLE JUNIOR ASSISTANT / ASSISTANTS LIST CLICK HERE...

எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை

பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.


பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிப்பது இல்லை.

2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.


இதற்கானஉத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புகார்களின் காரணமாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய இணையதளம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது.
www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சுமார் 57 ஆயிரம் பள்ளிகள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளன. இந்த இணையதளத்தை பராமரிப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட 45 பேர் அடங்கிய குழுவுக்கு அண்ணா

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல்

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு  இடமாறுதல்கட்டயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதற்கான கவுன்சலிங் இன்றுமாவட்டதலைநகரங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது 

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி

பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு 'கடை கடையாக' அலையும் பெற்றோர்:

பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.
மதுரை மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு காரணம் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில் லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
இடிஐ எனப்படும் ஆரம் பக் கல்வி பட்டியலில் புதுச் சேரி 0.762 புள்ளியுடன் முத லிடத்தில் இருக்கிறது. உத்த ரப்பிரதேசம் 0.462 புள்ளியு டன் கடைசி நிலையில் இருக் கிறது. பயன்பாடு, உள்கட்ட மைப்பு ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளிகளின் பயனாளி கள் ஆகிய 4 உப பிரிவுகள் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்க ப்படுகின்றன. இந் தியாவின் ஆரம்பக் கல்வி நிலை என்பது குறித்து 2013-14ம் ஆண்டிற்கான முன் னேற்றம் குறித்த விவரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இசட் இரானி வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.லட்சத்தீவு, சிக்கிம், இமா சலப்பிரதேசம் மற்றும் கர்நா டகம் ஆகியவை ஆரம்ப கல்வி நிலையில் 2வது, 3வது, 4வது இடத்தை பெற்று இருக் கின்றன.நாட்டின் ஆரம்ப கல்வி தர பட்டியலில் தில்லி 6வது இடத்தை பெற்று இருக்கிறது.

தொடரும் கடும் வெயில்: ஜூலை மாதமே குறையும்

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயில் ஜூலை மாதமே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை முடிந்தும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. கடலோர மாவட்டங்களில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மாலையில் சூரியன் மறைந்த பிறகும், கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் வெயில் ஜூலை மாதமே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றை, மேற்கு திசையில் இருந்து வீசும் அனல் காற்று தடுப்பதால் தமிழகத்தில் வெயில் குறையவில்லை என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!


தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம் தீ விபத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து நடந்தது. அதில், 94 குழந்தைகள் இறந்தன. 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தன.

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை முதன்மை செயலர் சபிதா புதிய தகவல்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது.இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தேர்வு முடிவு, பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், டாக்டர்கள் உட்பட பலர், தேர்வு முடிவை விமர்சித்துஉள்ளனர்.

தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. -பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா,

பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது:
தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய சராசரியாக உள்ளது.
தமிழகத்தில், 1:26 என்ற நிலை உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு களில், 1:35க்கு பதிலாக, 1:27 என்ற நிலையும், 9 முதல், பிளஸ் 2 வரை, 1:40 என்பதற்கு பதில், 1:28 என்ற நிலையும், தமிழகத்தில் உள்ளது.

கூடுதல் கவனம்:ஆசிரியர் - மாணவர் சதவீதம் குறைவு காரணமாக, மாணவர்கள் மீது, ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பினோம்.கடந்த, 2012ல், பல்வேறு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களாக இருந்த, 10 ஆயிரம் பேரை, பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு மாற்றினோம். இது, கடந்த பொதுத் தேர்வில், நல்ல பலனைத் தந்துள்ளது.

தொடக்கக் கல்வி - பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடிகள் பயன்படுத்துவது சார்பாக இயக்குனரின் வழிக்காட்டுதல்கள்


தொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் "04.04.2014" - "சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" சிறு உயிரினம் மூலம் ஏற்படும் திசையன் எலும்பு நோய் (Vector Bone Disease) வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு


தொடக்கக் கல்வி - உச்சநீதிமன்ற உத்தரவின் படி HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்தவித வேறுபாடின்றி நடத்திட உத்தரவு


ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.
மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது.
இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள்

SCHOOL EDUCATION - PG PANEL RELEASED AS ON 01.01.2014 FINAL LIST

COMMERCE SAME MAJOR CLICK HERE...

COMMERCE CROSS MAJOR CLICK HERE...

ECONOMICS SAME MAJOR CLICK HERE...

ECONOMICS CROSS MAJOR CLICK HERE...

HISTORY SAME MAJOR CLICK HERE...

HISTORY CROSS MAJOR CLICK HERE...

GEOGRAPHY CLICK HERE... (SOON)

சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

44 நிகர்நிலை பல்கலை.கள் குறித்து முடிவு செய்ய 3 பேர் குழு: அமைத்தது யுஜிசி

சர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து மூன்று பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைத்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதா அல்லது அதில் படிக்கும் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளுக்கு மாற்றம் செய்வதா என்பது குறித்து இந்தக் குழு இறுதி முடிவை எடுக்க உள்ளது.

பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்.


தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுமார் 2100 பிஎட் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகள் எனில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகள் எனில் 90 சதவீத இடங்களும் கவுன்சலிங் கிற்கு வந்துவிடும். அதே நேரத்தில், தனியார் பொறியியல் கல்லூரி களைப் போன்று, தனியார் கல்வியி யல் கல்லூரிகள் அரசு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு


ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில்

பட்டச் சான்றிதழ், விண்ணப்பங்களில் தாய் பெயரும் இடம்பெற வேண்டும்: யுஜிசி


பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் என கல்வி சார்ந்த அனைத்து விதமான பதிவேடுகளிலும் தாயின் பெயரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

விதவை அல்லது பிரிந்து வாழும் தாயின் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு சட்டப் பிரச்னைகளுக்கும் இது உதவியாக இருக்கும் என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1998 ஏப்ரல் 18-ஆம் தேதி அன்றே இதுதொடர்பான அறிவுறுத்தலை யுஜிசி செய்துள்ளது. ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அதை பின்பற்றாததைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'

மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்', மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 49 பேர் புறக்கணித்தனர். மேலும், 'பணிநிரவலில் ஆசிரியர் பயிற்றுனர்களை சேர்க்கக் கூடாது' என ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால், அன்றைய 'கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 13 பேருக்கு மட்டும் பணிமாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மாலை ஆசிரியர் பயிற்றுனர்களின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றி

இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் முதலில் 2013 ஆம் ஆண்டு முன்னுரிமைப்பட்டியலின் அடிப்படையிலான தேர்ந்தோர் பட்டியல் படி பதவிஉயர்வும் ,பின்னர்2014 ஆமாண்டுதேர்ந்தோர் பட்டியல் படி பதவிஉயர்வும் அளிக்கப்பட்டன.

இக்கோரிக்கையை முதன் முதலில் தொடக்கக்கல்வி இயக்குனரிடம் 2013 பேனலின் படியே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே முறையிட்டு முன் முயற்சி யை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் எடுத்தார்.

அன்று இயக்குனர் அளித்த வாக்குறுத்திப்படியே இன்று நடைபெற்றது.

முதன் முதலில் கோரைக்கை வைத்து பல ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் கனவை நனவாக்கிய நமது பொதுச்செயலரின் கடுமையான தொடர் முயற்சி வெற்றிபெற்றமைக்கு,அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .திருவண்ணாமலை மாவட்டக்கிளை சார்பாக
கே.பி.ரக்‌ஷித்
மவட்டச்செயலர்

31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ)பதில்

நன்றி
திரு .அ.பா.ரமேஷ் பாபு,
வட்டார செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
திருப்பரங்குன்றம்-வட்டாரம்
மதுரை மாவட்டம்

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில்

நன்றி
திரு .அ.பா.ரமேஷ் பாபு,
வட்டார செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
திருப்பரங்குன்றம்-வட்டாரம்
மதுரை மாவட்டம்


இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் குறித்து 20.06.14-ல் சென்னையில் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறைக்கூட்டம்


பாரதப்பிரதமர் மோடி(முத்து) அவர்களின் கனவுத்திட்டங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்- பொதுச்செயலர் செ.முத்துசாமி Ex.M.L.C

இங்கே கிளிக் செய்து வாழ்த்துச்செய்தியை பதிவிறக்கம் செய்து வாசிக்கவும்

SCHOOL EDUCATION - PG PANEL RELEASED AS ON 01.01.2014 FINAL LIST

ENGLISH SAME MAJOR CLICK HERE...

ENGLISH CROSS MAJOR CLICK HERE...

TAMIL CLICK HERE...

MATHS CLICK HERE...

PHYSICS CLICK HERE...

CHEMISTRY CLICK HERE...

BOTANY CLICK HERE...

ZOOLOGY CLICK HERE...

SCHOOL EDUCATION - SGT TO BT PANEL AS ON 01.01.2014

ENGLISH CLICK HERE.

..MATHS CLICK HERE...

 SCIENCE CLICK HERE..

.HISTORY CLICK HERE.

..GEOGRAPHY CLICK HERE...

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE...
DEE - DISTRICT TRANSFER APPLICATION CLICK HERE...
DEE - ZONE LIST - 1 CLICK HERE...
DEE - ZONE LIST - 2 CLICK HERE...

ரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு? ஒரு கல்லில், இரு மாங்காய்க்கு மத்திய அரசு குறி...

வருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால்,மறைமுக வரி வசூல் தானாகவே அதிகரிக்கும் என, மத்திய அரசு, 'கணக்கு' போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலைக் குழு: 
 
 யஷ்வந்த் சின்கா தலைமை யில், நிதி துறைக்கான, பார்லிமென்ட் நிலைக் குழு, வருமான வரி உச்ச வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சமாக உயர்த்தலாம் என, பரிந்துரைத்தது. அதாவது, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி விலக்கும், அதற்கு மேல், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 10 சதவீத வரி விதிக்கலாம் என, தெரிவித்தது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும்,

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

CLICK HERE TO VIEW 'JIPMER' RANKED MERIT LIST - 2014


இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல்,
ஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன்

கவுன்சிலிங் நடைபெறும்.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


CLICK HERE-DSE NO.38651/W1/E1/2014 DATED.16.06.2014 - HSS HM ROTATION PANEL AS ON 01.01.2014 REG PANEL LIST 
 
  2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு

நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு

DSE NO.38651/W1/E1/2014 DATED.16.06.2014 - HSS HM ROTATION PANEL AS ON 01.01.2014 REG PANEL LIST CLICK HERE...

தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BANNERS for RTE admissions-மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்-25% R.T.E சேர்க்கை நடப்பு நிலவரத்தை தனியார் பள்ளிகள் முன் பேனர் வைக்க உத்திரவு

இங்கே கிளிக்செய்து மெட்ரிபள்ளி இயக்குனர் செயல்முறைக்கடிதம் காண

மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்-25% R.T.E சேர்க்கை நடப்பு நிலவரத்தை தனியார் பள்ளிகள் முன் பேனர் வைக்க உத்திரவு



உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் 7 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டன.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சுவர் இல்லாத தொடக்க நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுத்து அனுப்ப இயக்குனர் உத்திரவு

இங்கே கிளிக்செய்து பதிவிறக்கம்செய்யவும்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்


பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்

பி.இ. தரவரிசைப் பட்டியல்

CLICK HERE-B.E 2014 RANK LIST

வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது?- இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது.

அதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

“HIGHER SECONDARY EXAM JUNE / JULY 2014 – PRIVATE CANDIDATE – HALL TICKET PRINT OUT”

CLICK HERE-HSE-JUNE/JULY-2014-PRIVATE CANDIDATE -HALL TICKET

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; ,

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படியும்,நமது நீண்ட நாள் கோரிக்கையின் படியும் 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும்என இயக்குனர் தெரிவித்ததாக பொதுச்செயலர் செ.மு தகவல்.

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

DSE - 2014-15 DSE INSTRUCTED TO ALL CEOs REG TO OBSERVE GUIDELINES IN GENERAL TRANSFER REG PROC CLICK HERE...

வில்லங்க சான்றுகளை கட்டணமின்றி இணைய தளத்தில் பார்வையிடும் வசதி: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாவட்டம்– வீரபாண்டி, ஓமலூர் மற்றும் ஜலகண்டாபுரம்; திருப்பூர் மாவட்டம்–கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டம்– கோவில்பட்டி மற்றும் கொம்மடிக்கோட்டை; விருதுநகர் மாவட்டம்– சேத்தூர் மற்றும் திருத்தங்கல்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்– தாத்தையங்கார்பேட்டை; பெரம்பலூர் மாவட்டம்– வேப்பந்தட்டை; நாகப்பட்டினம் மாவட்டம்– திருப்பூண்டி; கரூர் மாவட்டம்– நங்கவரம்;

நாமக்கல் மாவட்டம்– வேலூர் (பரமத்தி), குமாரபாளையம்; திருவண்ணாமலை மாவட்டம்–வெம்பாக்கம்; திருநெல்வேலி மாவட்டம்– வள்ளியூர்; விழுப்புரம் மாவட்டம்– வடக்கனந்தல், ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்போம் பள்ளிக் குழந்தைகளை

Dinamaniஇன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள். அதனால்தான் குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.
அதே நேரத்தில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கவேண்டும் என்ற கனவுகளில்தான் பள்ளிக்கு அனுப்பு
கின்றனர்.

பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்


தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மே 23-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY B.Ed ADMISSION CORRESPONDENCE

பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பணியிட மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு நடக்கிறது.

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக)

ஓ.சி. 199.25
பி.சி. 198.25
பி.சி. (முஸ்லிம்) 197.00
எம்.பி.சி. 197.25
எஸ்.சி. 194.75
எஸ்.சி. (அருந்ததியினர்) 192.00
எஸ்.டி. 187.50
கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்?

2015ம் ஆண்டின் மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
நாள் கிழமை நிகழ்ச்சி
ஜன.,4 ஞாயிறு மிலாடிநபி.
ஜன.,26 திங்கள் குடியரசுதினம்
ஏப்.,2 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்.,3 வெள்ளி புனிதவெள்ளி
மே4 திங்கள் புத்த பவுர்ணமி
ஜூலை18 சனி ரம்ஜான்
ஆக.,15 சனி சுதந்திர தினம்
செப்.,25 வெள்ளி பக்ரீத்
அக்.,2 வெள்ளி காந்திஜெயந்தி
அக்.,22 வியாழன் விஜயதசமி
அக்.,24 சனி மொகரம்
நவ.,10 செவ்வாய் தீபாவளி

அரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்தும் திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை


No Proposal of 6 days a week working and Cabinet Secretary assures on Merger of DA & Payment of Interim Relief: Feedback of the meeting held between the Cabinet Secretary(Government of India) and Secretary(Staff Side), NC/JCM

Shiva Gopal Mishra
Secretary
National Council (Staff Side)
Joint Consultative Machinery
Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi – 110001
E Mail : [email protected]

No.NC/JCM/2014
Dated: June 13, 2014
All Constituent Organizations,
National Council(Joint Consultative Machinery)

Dear Coms.,
Sub: Feedback of the meeting held between the Cabinet Secretary(Government of India) and Secretary(Staff Side), NC/JCM

A meeting was held today between the Cabinet Secretary(Government of India) and Secretary(Staff Side), National Council(JCM), wherein the undersigned raised the issue of non-holding of meeting of the NC/JCM since more than last four years.

TNPSC - VAO 2014 EXAM GENERAL KNOWLEDGE & GENERAL TAMIL ANSWER KEYS

VAO 2014 EXAM GENERAL TAMIL ANSWER KEYS CLICK HERE...

VAO 2014 EXAM GENERAL KNOWLEDGE ANSWER KEYS CLICK HERE...

சான்றிதழ் அளிப்பதில் தாமதம்; அலைகழிக்கப்படும் பெற்றோர்

பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமதப்படுத்துவதால் பெற்றோர்,மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கல்வியாண்டின் துவக்கத்தில், பல்வேறு காரணங்களால், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர். ஏற்கனவே, படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்கும்போது, அங்கிருப்பவர்கள் காலதாமதப்படுத்துவதால் உரிய காலத்திற்குள் பிறபள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.சில பள்ளிகளில் மட்டுமே மறுப்பு தெரிவிக்காமல்

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம் ,132 மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:
1. கே.சுந்தர்நடேஷ்– மேற்கு மாம்பலம் (டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம்).

2. எஸ்.அபிஷேக்–தேனாம்பேட்டை (ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை).

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

TO DOWNLOAD TAMIL UNIVERSITY B.ED APPLICATION 2014-15 CLICK HERE...


web stats

web stats