rp

Blogging Tips 2017

ரியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து.
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் முதல்

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

http://www.deetn.com/

TPF கணக்குகள் A.G,அலுவலகத்திற்கு மாற்றம்-116 ஆசிரியர்களின் கணக்குகள் யாருடையது என தெரியாமை உடன் ஆசிரியர்களிந்தகவல்கள்சரிபார்த்து அனுப்ப இயக்குனர் அறிவுறை

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

SLM Kit-box Training schedule primary & upper primary Teachers

அகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29.08.2016 & 30.08.2016 அன்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 06.09.2016, 07.09.2016 & 08.09.216 ஆகிய நாட்களில் BRC அளவில் பயிற்சி வகுப்பு - இயக்குனர் செயல்முறைகள்

FLASH NEWS : ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.




இதன்மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சரித்திர சாதனையையும் படைத்தார் ஹரியாணாவைச் சேர்ந்த சாக்‌ஷி.

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

NEET கவுன்சலிங்: ஆன்லைன் பதிவு கட்டாயம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ கவுன்சலிங் கமிட்டி வெப்சைட்டில் (www.mcc.nic.in) கல்வித்தகுதி, செல்போன் எண் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். 

போதையில் பள்ளிக்கு வந்த 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலையில், போதையில் பள்ளிக்கு வந்த இரு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கருமாரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், குடிபோதையில் பணிக்கு வந்த, ஆசிரியர் கருணாநிதியை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். 

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு

G.O 160 DSE Dept Date:2/12/2004-IGNOU BEd is Eligible for Direct Appointment and Promotion

உதவி தொகை விவகாரம்: அரசு உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி !

அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் 

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்’

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைக்க ஊக்கவிக்க வேண்டும் என மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் (எம்டிஏ) தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
           “மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.இதன் முதல் நாளில் நடைபெற்ற

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு.

70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின்வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து 
இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், எளிதான முறையில் கையாளக்கூடிய, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கான மருந்துகள் இருக்கும்.
நடப்பாண்டு, அனைத்து அங்கன்வாடி களுக்கும், மருத்துவ சேவைக் கழகம் மூலம் மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்றநிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிஉள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில்2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பைவெளியிட்டுள்ளது.

*இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !*

*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை

*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை

*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.

*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.

கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல் பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

முதல்-அமைச்சரின் ஆணைப்படி 2016-17 கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 13-08-2016 அன்று(நேற்று) அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக

புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.

இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு

தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

MHRD Swachh Puraskar Award Result published

CLICK HERE TO LOGIN& KNOW YOUR SCHOOL RESULT

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின்,

web stats

web stats