rp

Blogging Tips 2017

*தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும்," என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அறிவுறுத்தினார்.

மதுரையில் மாவட்ட, கிராம கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, மீனாவதி, முத்தையா, கஸ்துாரி பங்கேற்றனர்.இயக்குனர் தெரிவித்ததாவது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் விவர பட்டியல் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தேதியின்றி விடுப்பு கடிதம் அளித்தல், தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. தரச்சான்று பெற்ற பின் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை 'ஆப்'பில் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றார்

EMIS- - TRAINING FOR H.M's & BRTE's | SPD PROCEEDINGS!!

இனி வெள்ளி தோறும்திருச்சி மாவட்டத்தில் CEO, DIET, BEO தலைமையில் "Team Visit" - Proceedings

MIE Programme for BRTE's & District Coordinators

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி-வாகனமுன்பணம்-பள்ளிக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்-அலுவலகம்-அரசு / நிதியுதவி/உயர்நிலைப் /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்-அலுவலகப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு - இரு / நான்கு சக்கர வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள்-தொடர்பாக அறிவுரை வழங்குதல்-சார்பு



CLICK HERE FOR FORM .

Jactto - Geo Court Order

Click here to download

ஜாக்டோ - ஜியோ : உயர்நீதிமன்ற நிகழ்வு குறித்து 16.12.2018ல் மாவட்டங்களில் விளக்கக் கூட்டம்.

ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அன்பான ஆசிரியர் பெருமக்களின் கவனத்திற்கு  .......... 

            தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS  என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை  தினந்தோறும் ஆன்லைனில்  பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது  புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.  பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.எனவே புதிய app பயன்படுத்தவும்.

அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்கள் சரண் செய்தல் இயக்குனர் செயல்முறைகள் - SURPLUS POST DETAILS -REG

1. 8 .2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிபணியிட விவரம் மாவட்ட வாரியாக

உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்படுகிறது - CEO PROCEEDINGS

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-அனைத்து பள்ளிகளிலும் கழிவு மேலாண்மை (Waste Management) முறையினை செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்-சார்ந்து


JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ்

🛡 ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

🛡 இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.

🛡 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட அரசுக்குத் தயக்கம் ஏன்?

Image may contain: 2 people

பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு புதிய முறை

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் மதுரை நியூ காலேஜ் ஹவுசில் இன்று மாலை சந்தித்தோம்...      பின்  ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர இருப்பதால் இயக்க சார்பாக ஐயா அவர்களும் கலந்து கொள்கிறார்..... ஐயா அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். 😀 மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ் 🌺 மற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்.....🙏🙏✍

மாநிலத்தலைவர் செ.மு அவர்கல் காளையார் கோவில் சென்றபோது முன்னாள் மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அவரை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு


மாநிலத்தலைவர் செ.மு.அவர்கள் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களுடன் காலையார் கோவில் மருது பாண்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிகழ்வு


மாநில த்தலைவர் செ.மு அவர்கள் முன்னாள் மாநிலத்தலைவர் காளையார் கோயில் கு.அருள் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் தந்த நிகழ்வு


ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஜனவரி7வரை- ஒத்திவைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு


அடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருந்தோம். ஆனால் ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் போராட்டத்தை ஒத்திவைத்தோம்.

அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர்(ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதில், தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான இரு மனுக்களை, கடந்த டிசம்பர் 3ல் ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை டிசம்பர் 10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்கங்களின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

DIRECT RECRUITMENT POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN. TN SCHOOL EDUCATION DEPARTMENT

  • CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS..

பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு


HRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்

நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த முயற்சிக்கு நன்றிகள் 🙏🙏 

குளித்தலை நகராட்சி,மருதூர் பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு HRA GRADE 1 (B) வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குளித்தலை கருவூலத்தில் செப்டம்பர் மாதம் முதல் வழங்காமல் AUDITING செய்தனர்.உடனடியாக அய்யா செ.மு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 26.10.2018 அன்று கருவூல முதன்மை செயலாளர் திரு.ஜவஹர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம்.

நமது இயக்கத்திற்கு வீட்டு வாடகை படி தொடர்பாக பதில் அனுப்பப்பட்டது.அதில் குளித்தலை ஒன்றியம் முழுமைக்கும் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. அந்த நகலை எடுத்து குளித்தலை கருவூல அலுவலர் அவர்களிடம் கேட்ட போது குளித்தலை நகராட்சி என்று தெளிவுரையில் குறிப்பிடவில்லை என கூறினார்கள்.

மீண்டும் அய்யா செ.மு அவர்களை தொடர்பு கொண்டோம். தற்போது ஜவஹர் அவர்கள் நாகப்பட்டினம் கஜா புயல் நிவாரண பணியில் இருப்பதாகவும்,உதவியாளர்(P.A) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

திரு.ஜவஹர் அவர்கள் சென்னை திரும்பியவுடன் அய்யா செ.மு அவர்கள் மீண்டும் வீட்டுவாடகைப்படி தொடர்பான மீண்டும் தெளிவுரை பெற்று வழங்குமாறு கூறியுள்ளார்.

அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்களுக்கும்,கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்

web stats

web stats