rp

Blogging Tips 2017

நீண்ட உறக்கம் கலைகிறது - மக்களுக்கு நல்ல காலம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 100 நாட்கள் முடிந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம்அதிகரிக்கப்பட்டது. இது எல்லா அரசும் மேற்கொள்ளும் விஷயம் என்று ஒதுக்கினாலும், மத்திய அரசு ஊழியர்கள் பணி விஷயத்தில், அதிக கெடுபிடிகள் வந்து விட்டன. மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் அதிவேகமாக செயல்பட ஆரம்பித்தால், ஓராண்டில் அரசு நிர்வாகத்தின் வேகம் குறைந்த பட்சம், 20 சதவீதம் அதிகரிக்கும். அதிலும், அவசர அவசரமாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் அமைச்சரவைப் பணிகளை பட்டியலிட்டது, அது குறித்த அறிக்கையாக, 'ரிப்போர்ட் கார்டு' கொடுத்திருக்கிறார்.
                 நிதியமைச்சர் ஜெட்லி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், முக்கிய கோப்புகளை பார்த்து, குறிப்பு எழுதுகிறார் என, கூறப்படுகிறது. அவர், கடந்த வாரம் அளித்த பேட்டியில், தன் அமைச்சரவை ஊழியர்கள் தினமும், 10 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றி கோப்புகளை பார்த்து முடிவெடுப்பதாக கூறினார். 

மத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து கணக்கை காட்ட டெல்லி ஐகோர்ட்டு தடை


மத்திய அரசு ஊழியர்கள் ‘லோக்பால்’ சட்டப்படி தங்கள் சொத்துக் கணக்கை இந்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்


பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ் கல்வியாண்டில் (2014-15) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக அட்லஸ் புத்தகங்களை ஜூலை மாதத்துக்குள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசின் அரசிதழில் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாக, இரு மாநிலங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமான எல்லை வரையறை செய்யப்படாமல் இருந்தது. அரசிதழில் இந்த மசோதா வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்திய வரைபடங்களுக்கு அனுமதி கோரி தலைமை நில அளவையாளர் அலுவலகத்தில் பதிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்


தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக தமிழ்மொழி திறனை சோதிக்கும் வகையிலான புதுமை கேள்விகளை கேட்பது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் தாக்கல் செய்யப்பட்டும் 19 ஆண்டுகளாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச் சாடியுள்ளது.

தமிழக மாணவர்களின் இழிநிலை நீங்குமா?



தமிழக  மாணவர்கள், தமிழர்களால் தாழ்த்தப் படுவதை நினைத்தால், மனம் வேதனை அடைகிறது. தமிழகத்திலுள்ள, தனியார் பள்ளிகளில், குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை சரியாக நடத்தாமல், 10ம் வகுப்பு பாடத்தையே, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில், அதிக மதிப்பெண் வாங்க வைப்பதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் பகுதிகளை நடத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
இதே போல், பிளஸ் 1 வகுப்பு பாடப் பகுதிகளை புறக்கணித்து விட்டு, பிளஸ் 2 வகுப்புப் பாடப் பகுதிகளை, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்கள், சொல்லொணா துயரம் அனுபவிக்கின்றனர். அஸ்திவாரம் சரியில்லாமல் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடம், அடியோடு சரிந்து விழும் நிலைக்கு, இந்த மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு

புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_63734_2014.pdf

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமானது, கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்புடன், அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களின் பங்குத் தொகையையும் சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவற்றை வெளியிட வேண்டுமென பல்வேறு ஊழியர் சங்கங்களும், அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:

3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு : சென்னையில் கடந்த கோடை விடுமுறையின்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 1,150 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை, ஆங்காங்கே உள்ள உண்டு, உறைவிட பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின

எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை அடிப்படையில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

DSE - 49 HIGH / HIGHER SECONDARY SCHOOL HMs PROMOTED AS DEO / DEEOs REG ORDER CLICK HERE...

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி

கணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல் - SENIORITYLIST AS ON 21/12/2010

CLICK HERE TO VIEW COMPUTER INSTRUCTOR SENIORITY LIST AS ON 21/12/2010

சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி...?

சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில

பள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்ட

பள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு

நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104

இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,
உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.

மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pension – Contributory Pension Scheme – Allotment of CPS Numbers to existing employees / newly joined employees

CLICK HERE-Letter No.63734/FS/T/PGC/2013, dated :11.09.2014

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்


  • . திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •   நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •   துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •   தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •    அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்

வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன.
வங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

தனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

 பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

DSE.52615/A1/C3/2014, DATED.14.8.14 - Headmasters of High/Higher Secondary Schools are not entitled for the PP in the revised scale of pay reg Proc Click Here...

பள்ளிக்கல்வி - மாணவ, மாணவியரின் எடை ,உயரம்,பெற்றோர் அலைபேசி எண் ,பெற்றோர்/மாணவர் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை 25.09.2014க்குள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணனுடன் மதுரையில் சந்திப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொறுப்பாளர்கள் இன்று மதுரையில் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் சந்தித்தனர்,இந்நிகழ்வில் மாநிலத்தலைவர் திரு.கு.சி.மணி,மாநில பொருளாளர் திரு தே அலெக்சாண்டர், மாநில துணைச்செயலர் திரு.செல்வராஜ் ,முசிறிவட்டார முன்னாள் செயலர் திரு.செல்வராசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் திரு .ரமேஷ் பாபு, மற்றும்  திரு.ஜஸ்டின் ஆகியோர்  உடன் இருந்தனர்
இந்நிகழ்வின் போது
  • மத்திய அரசால் நிறைவேற்றப்படவேண்டிய ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.
  • மேலும் நதிநீர் இணைப்பின் அவசியம் கருதி தென்னக நதிகளை இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது
  • மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் இம்மாத இறுதியில் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் போது உடன் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது



                   மரியாதை நிமித்தமான இச்சந்திப்பு மிகவும் இனிய நிகழ்வாக அமைந்தது என பொருளாளர் தே அலெக்சாண்டர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத்துக்கான வளரறி மதிப்பீடுகள்

நன்றி: திருமதி.D.விஜயலெட்சுமி அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.
பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.-எளிய தீர்வு

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

100 இடங்களுடன் புது மருத்துவ கல்லூரி : அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்


அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், புதிய மருத்துவக் கல்லூரி அமைகிறது. இது, அடுத்த ஆண்டு முதல், செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பல்நோக்கு மருத்துவமனை : சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. இதன்படி, அரசு பல்நோக்கு மருத்துவமனை, பிப்., 22ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. பிற இடங்களில் இருந்து, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என, அரசு அறிவித்தது. அதற்கேற்ப, 200 கோடி ரூபாயில், மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், ஆறு மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வு எழுத 11, 497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE FOR TNPSC GROUP II EXAM RESULT - EXAM DATE 01-12-2013 

TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வு –தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஓர் அலசல்-இரா.சங்கீதா சங்கரானந்தம்

1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்

நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களிடையே பெருகும் வன்முறை கலாசாரம்

பள்ளிகளில் நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன், சென்னையில், வகுப்பு ஆசிரியை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு திருநெல்வேலியில், கல்லூரி முதல்வர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இதில் சில மாணவர்கள் கைதாகினர். பள்ளி மாணவர்களிடையே, ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.

மக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி TNGTF வழக்கு தொடுப்பு


2004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை. அரசாணை 720 நாள் 28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

இன்று உலக எழுத்தறிவு தினம்!


"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்

ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது.

உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

3ம் ஊக்க ஊதியம் for M.Phil.

உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.

வேதாரண்யத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:

தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி

அரசு ஒப்பந்தப் பணியாளருக்கு பிஎஃப், ஓய்வூதிய சலுகைகள் கிடையாது: மத்திய அரசு

சில அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படை, தனியார் நிறுவனங்களிடமிருந்து அவுட்சோர்ஸ் முறையில் பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பஃண்ட்), ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்டக்கிளை உதயம்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாரம் திரு.ராஜ்குமார் அவர்கள் மாவட்ட அமைப்பு செயலராக நியமனம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தஞ்சை மாவட்டக்கிளையின் அமைப்பு செயலராக திருவிடை மருதூர் வட்டாரத்தைச்சேர்ந்த

1. திரு சு.ராஜ்குமார்  (பட்டதாரி ஆசிரியர் PUMS,ஆரியச்சேரி) அவர்கள்
 மாவட்ட அமைப்புசெயலராகவும்,
2. டாக்டர்.க.லாடமுத்து ,(தலைமை ஆசிரியர்,PUPS,துக்காச்சேரி)அவர்கள்
    மவட்ட அமைப்புத்தலைவராகவும்
3.திரு.க ராம்குமார்,(கைத்தொழிலாசிரியர்,ராமகிருஷ்ணா உதவிபெறும்
    நடுநிலைப்பள்ளி,நாச்சியார் கோவில்) அவர்கள்
    மாவட்ட அமைப்பு பொருளாளராகவும்



       முறைப்படி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களால்  நியமிக்கப்பட்டுள்ளார்.தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த ஆசிரியர் பிரச்சினைகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்பட்டு,மாவட்டத்தின் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டார உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து  கல்வி அலுவலர்களிடம் தொடர்புகொண்டு ஆசிரியர்களின் குறைகள் களைய அதிகாரம் இவர்களுக்கு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது என பொதுச்செயலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
                      மேலும் மேலே மாவட்ட அமைப்பு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் புதிய கிளைகள் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கை செய்யவும்,மாவட்ட,மற்றும் வட்டாரக்கிளைதேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கவும்(பொதுச்செயலரின் உரிய அனுமதிக்குபிறகு) அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் .
                         இக்கிளை உருவாக முயற்சிகள் மேற்கொண்ட மாநில துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்



தமிழக அமைச்சரவை 2014 செப்., 6 நிலவரம்

1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணி
3. வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்
4. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு,ஆயத்தீர்வை
5. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி
6. பா.வளர்மதி - சமூக நலம், மதிய உணவு திட்டம்
7. பழனியப்பன் -உயர்கல்வி
8. மோகன் - ஊரகத் தொழில் , தொழிலாளர் நலம்
9. செல்லுார் ராஜூ கூட்டுறவு
10. எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை
11. 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி வேளாண்மை

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,– தினமலர்

‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.

டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


"மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.

தனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,2ல் துவக்கம்



"தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.

தேர்வு கால அட்டவணை

தேதி பாடம்

25.09.14 ...................... தமிழ்

26.09.14 ...................... ஆங்கிலம்

27.09.14 ...................... கணிதம்

29.09.14 ...................... அறிவியல்

30.09.14 ...................... சமூக அறிவியல்

*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை

நடக்கிறது

தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை.

இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், மாணவர் சேர்வதற்கு, வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், அரசு பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் அறிவிப்பை, கடந்த, ஜூலை, 30ம் தேதி, சட்டசபையில், முதல்வர் அறிவித்தார்.

அதன் விவரம்:

25 மாவட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள, 128 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம், 128 புதிய, தொடக்கப்பள்ளி துவங்கப்படும். இந்த பள்ளிகளில், நவீன சமையல் அறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள், கழிப்பறைகள் ஆகியவை ஏற்படுத்தி தரப்படும்

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்

DSE - REVISED QUARTERLY TIME TABLE FOR SSLC / HSC CLICK HERE...
 
பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்துள்ளது.

web stats

web stats