rp

Blogging Tips 2017

7வது ஊதியக்குழுவில் ஆசிரியர்ககளின் ஊதியம் ( Expected pay from our state governtment)

தேர்வு நாட்களில் ஆசிரியர்களுக்கு "வாட்ஸ் ஆப் " பயன்படுத்த தடை

'பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
 பிளஸ்2 தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும், 9.30 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தேர்வை எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி நடத்துவதற்கு, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மூலம், மாவட்ட வாரியாக நடக்கும் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுரை

முக்கிய விதிமுறைகள்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.

68 பக்கங்கள் கொண்ட இந்த முக்கிய விதிமுறை கையேட்டில் இடம்பெற்று உள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

செல்போன் பயன்படுத்த கூடாது

TNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17

ஆசிரியர் தகுதித் தேர்வு (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்) முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல்  29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
 TEACHERS ELIGIBILITY TEST NOTIFICATION - 2017

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :

மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை

Manonmaniam Sundaranar university - November 2016 - Exam Result (Updated)


DD&CE PG Results


DD&CE UG Results

Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் நடைபெறும் எனத்தெரிவித்தார்

*7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா ; 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல்*

‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது' என நாசா அறிவித்துள்ளது.

*7 புதிய கோள்கள்:*

சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

*புதிய மைல் கல்:*

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் புதிய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, 'டிராப்பிஸ்ட் 1' என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,

பொதுத்தேர்வு முடிவுகள்:

12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்

10ம் வகுப்பு - மே 19ம் தேதியும்

வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Departmental Examination - May 2017 - Notification Published


SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு


ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.'ஆதார்' எண் வழங்கிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் 'ஆதார்' எண் இருந்தால் மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடியும்.

G.O.Ms.No.40 Dt: February 22, 2017 OFFICIAL COMMITTEE – Constitution of an Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission –Ordered.

G.O.Ms.No.40 Dt: February 22, 2017  OFFICIAL COMMITTEE 
அரசாணை நிலை எண்-40 நாள்- 20.02.2017 மத்திய அரசின்7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழு அரசாணை வெளியீடு...!!
அரசாணை நிலை எண் -40 நாள் - 20.02.2017 மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழு அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர் சம்பள விகிதம் மாற்றி அமைக்க புதிய குழு: தமிழக அரசு

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும்.

தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றிஅமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது

வறவேற்பு
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  மாநில பொதுச்செயலர் திரு க.செல்வராஜ் மற்றும் மாநில பொருளாளர் திரு கே.பி.ரக்‌ஷித் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்

மேலும்  
1 மத்திய அரசு நடைமுறைப்படுத்த்கி ஒரு ஆண்டு காலம் முடிந்துவிட்டமையாலும்,இக்குழு 4 மாத காலம் அறிக்கை அளிக்க கால் அவகாசம் அளிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக 20% தொகை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,

TNPSC துறை தேர்வுகள் மே 2017 அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:31/3/17

Emis update video tutorial

Click here
Video tutorial

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும்.
  . இனி வரும் காலங்களில் விளையாட்டில்எடுக்கப்படும் மதிப்பெண்களும் தேர்வின் போது கணக்கில் எடுக்கப்படும்.

80 CCD (1B) -ல் ரூ 50000 கழிப்பதற்கு திருவண்ணாமலை கருவூல அலுவலரிடம் ஆணை பெறப்பட்டது

NEET Exam - விண்ணப்பிக்க இன்னும், 10 நாட்களே உள்ளன!

மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜன., 31ல் துவங்கியது; மார்ச், 1 இரவு, 12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த அவகாசம் முடிய, இன்னும், 10 நாட்களே உள்ளன.ஆனால்,தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு உண்டா, இல்லையா என, தெளிவாக மாநில அரசு அறிவிக்கவில்லை.

GROUP 4 RESULT PUBLISHED.

 CLICK HERE.... 

EMIS FLASH NEWS: 1 முதல் 8 வரை அனைத்துவகுப்புகளுக்கும் New Entry செய்யும் வசதிதரப்பட்டுள்ளது. Common pool ல் இல்லாத மாணவர்களை பதிவு செய்து கொள்ளலாம்

இணையதளத்தில் 1முதல் 12 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திNew entry போட்டு முடிக்கவும்.27/02/2017 வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது
புதியதாக மாணவர் சேர்க்கலாம் ,
ஏற்கனவே உள்லவர்களின் விவரங்கள் அப்டேட் செய்யலாம்
ஆதார் என் இனைக்கலாம்

IGNOU B.Ed RESULTS-

CLICK HERE- TO VIEW THE RESULTS

உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு:
தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டது.

2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும்படியும்உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என, நீதிபதிகள்கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.

மார்ச் 31க்கு பிறகு இலவசம் கிடையாது.. சலுகை தொடர ஜியோ பிரைம் திட்டத்தில் சேருங்கள்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும்
தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது. முதலில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்தது. பின்னர் அச்சலுகையை மார்ச் 31ம் தேதி வரை அந்நிறுவனம் நீட்டித்தது. ஜியோவின் இந்த சலுகைகளால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மேலும் பல்வேறு சலுகைகளை முகேஷ் அம்பானி மும்பையில் இன்று அறிவித்தார்.அப்போது அவர் பேசியதாவது 
: ஜியோ சலுகை மார்ச் 31ம் தேதி முடிந்தாலும் பின்னரும், கால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது மாதந்தோறும் அளவில்லா இலவச கால் மற்றும் டேட்டா பெற ஜியோ பிரைம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்து..
 பிரைம் திட்டப்படி, மாதந்தோறும் அளவில்லா கால் பெற ரூ. 99 கட்டணமும், அளவில்லா டேட்டா சேவையை பயன்படுத்த ரூ. 303 கட்டணமும் வசூலிக்கப்படும்.

Manonmaniam Sundaranar University* Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)

*Manonmaniam Sundaranar University*

Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)

*Cost of Application -Rs.650


*Medium and Mode of Instruction - English

*Exam will be in English or Tamil

*Last dare for receipt of completed application forms - 13.03.17


www.msuniv.ac.in

web stats

web stats