rp

Blogging Tips 2017

திரு சித்திக் அவர்கள் தலைமையில் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முதல்வரிடம் தாக்கல்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது


7.1.19 அன்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் மாலை 5.00 மணிக்கு நடைபெறும் .

7.1.19 அன்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் மாலை 5.00 மணிக்கு நடைபெறும் .
ஒரு சங்கத்திற்கு தலைவர்/செயலாளர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். வழக்கு நிதி ரூ.5000/- செலுத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம். வெள்ளாளர் மண்டபம்,
மேலூர் ரோடு,
ஒத்தக்கடை,
மதுரை....

. இவண். ஜாக்டோ_ஜியோ.

JACTO GEO - வழக்கு திங்கள் மதியம் 2.15 க்கு விசாரணைக்கு வருகிறது.*

*ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை இன்று பிற்பகல் 3.30 மணி பின்னர் தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்கிறது.*

உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டுள்ளது

தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும் கல்வி செயலர் உறுதி

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் மாநில தலைவர் திருமிகு செ. முத்துசாமி Exmlc அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் நேற்று கல்வித்துறை முதன்மை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியபின், 30 .12 .2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுவின் தீர்மானங்கள் அளித்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை கோரி விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டன.
அப்போது முக்கியமாக அரசாணை 101 வெளிவந்த பிறகு தொடக்கப்பள்ளி தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இன்று வரை யாருக்கும் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மையை கூறி வேதனைப்பட்டோம். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் இதற்கான அனுமதிக்கும் ஆணையை பெற்றதிலிருந்து ஏதோ ஒரு காரணம் கூறி அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர் என்றும் கூறினார் .
மேலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 6 மாதமாக பத்தாண்டுகள் , .மற்றும் 20 ஆண்டுகள் பணிமுடித்த அதற்குண்டான தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கப்படவில்லை.
இதற்கு அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வேண்டும் என்று கூறுவது மேலும் ஒரு காரணம் என்று விளக்கப்பட்டது.
பொறுமையுடன் கேட்ட முதன்மைச் செயலாளர் அவர்கள் இம்மாத இறுதிக்குள் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் வட்டார கல்வி அலுவலருக்கு வழங்கப்படும் என்றும் இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் இந்நடவடிக்கைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்

ஜன.21 முதல் தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பள்ளி மாணவர்களின் கல்விக்கு என்றுபிரத்யேகமாக ‘கல்வி தொலைக்காட்சி’ என்ற சேனலை தமிழக அரசு விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேனலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி தொலைக்காட்சியில் ‘ரைம்ஸ்’ முதல் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வியை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தனியார் தொலைக்காட்சிகளை போலவே முந்தைய நாளிலேயே அடுத்த நாளின் நிகழ்ச்சி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, அதன்படி நிகழ்ச்சிகள் அந்த சேனலில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.


இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் தமிழக அரசு கேபிளில் 200-வது எண்ணில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பு செய்வதற்கான நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடுகளை 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்களுக்கு கல்வியை எளிதாக கொண்டு செல்லும் வகையில் பாடல்கள், அனிமேஷன் காட்சி வடிவிலான நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. கல்வி சார்ந்த அறிவிப்புகளை போன்று, கல்வி உதவித்தொகை, பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடர்பான தகவல்களையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை நேரலையாகவும், தங்கள் சந்தேகங்கள் குறித்து நிபுணர்களோடு கலந்துரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில் கல்வி தொலைக்காட்சியை தொடங்கும்போது 8 மணி நேரத்தில் 15 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதன் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் ஒளிபரப்பப்படும்.


கல்வி தொலைக்காட்சிக்கு என்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-வது மாடியில் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய ஸ்டூடியோ அமைக்கப்பட உள்ளது. இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தலைமையகமாக செயல்படும். கல்வி தொலைக்காட்சிக்காக கேமரா மற்றும் பிற உபகரணங்கள் வாங்குவதற்காக அரசு சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு




பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அவர்களை , நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் திரு.செ.முத்துசாமி ExMLC அவர்கள், பொதுச் செயலாளர் திரு .செல்வராஜ் மாநில இளைஞரணி செயலாளர் திரு . நாகராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து 2019டைரி, காலண்டர் வழங்கிய நிகழ்வுகள் (மாநில பொதுக்குழு தீர்மானங்களும் சமர்பிப்பு)




பொது வருங்கால வைப்புநிதி மார்ச் 2019 ஆம் மாதம் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் இயக்குனர் செயல்முறைகள்

பொது வருங்கால வைப்புநிதி மார்ச் 2019 ஆம் மாதம் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் இயக்குனர் செயல்முறைகள்

சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெறப்படும் கடன் தொகைக்கு வைப்பு தொகை 5% ஆக குறைப்பு - கூட்டுறவு பதிவாளரின் சுற்றறிக்கை நாள் : 03.01.2019

அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு*

பணிக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 'டாண்'ன்னு வரணும்: பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்!

கோவை:ஒத்தக்கால்மண்டபம் மற்றும் அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம்,துவங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 888 மாணவர்கள் படிக்கின்றனர். கற்பித்தல் பணிகளில், 37 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, நிர்வாக பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைப்போடு, அப்பள்ளி நுாலகத்திற்குள், போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதோடு, ஆசிரியர்களுக்கு முகப்பதிவுடன், விரல் ரேகை மூலம் வருகைப்பதிவு உறுதி செய்ய, பயோமெட்ரிக் கருவி பொருத்தும் திட்டம், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் 'யெஸ் சார்', 'பிரசன்ட் சார்' என்பதற்கு பதில், 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநில ஆரம்ப கல்வித்துறை, மேல்நிலை, உயர்நிலைத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: குஜராத் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வருகைப்பதிவேடு எடுக்கும்போது, 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து தேசப்பற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த உத்தரவு  பிறப்பிக்கபடுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக முதல் அமலுக்கு வருகிறது.

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி பணியாளர் இயக்குநரகத்தில் முன்அனுமதி பெற்று வந்தனர்.

இந்த முறையை மாற்றி, ஆசிரியர்களின் பணியிட மாறுதல் மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதியை வழங்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.அதேநேரம், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்விக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் ஒப்புதல் தரப்படவில்லை. 2018 ஜூன்மாதத்துக்கு முந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க முதன்மை கல்வி அதிகாரிகள் மறுக்கின்றனர். இனிமேல், முன்அனுமதிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பணியாளர்இயக்குநரகமும் கைவிரிப்பதால், உயர்கல்வியை முடித்துவிட்ட பல ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு தமிழக அரசு பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரன் கூறியதாவது:ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அஞ்சல் வழியில் உயர்கல்வி படிக்க துறை அனுமதி பெற வேண்டும். உயர்கல்வி பயில முன்அனுமதி பெறும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிறகு, பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதி பெறும் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.ஒவ்வொரு மாவட்ட கல்விஅலுவலகமும் பல நடைமுறைகளை பின்பற்றுகின்றன. தேவையற்ற காரணங்களை கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகின்றன. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் தடைபட்டுள்ளன. எனவே, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும். இதை ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இணைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்திஜாக்டோ ஜியோ விரைவில் போராட்டம் நடத்த உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால், போராட்ட அறிவிப்பை வெளியிட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் விதமாக உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்கு வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பலன் பெறுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி!

இலவச கட்டாய கல்வி சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் , சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவர்களுக்கான பேச்சு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பாக மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!!!

Cli
ck here to download

Transfer from CPS to GPF Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings Transfer from CPS to GPF Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings

மூன்றாம் பருவம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றல் விளைவுகள் ( Tamil & English medium All)

CLICK HERE

Term 3 ஐந்தாம் வகுப்பு பாடகுறிப்பு -English Medium முதல் வாரம்

Tamil Clickhere
English Clickhere
Maths Clickhere
Science Clickhere
Social Clickhere

Term 3 - 5th Std -TAMIL MEDIUM Lesson Plan week 1

TAMIL

ENGLISH 

MATHS 

SCIENCE

SOCIAL

web stats

web stats