rp

Blogging Tips 2017

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு.


இலவச பஸ் பாஸ் விண்ணப்பம் எப்போது?

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத் திட்டம்:

நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதியன்று, பள்ளிகள் திறக்கும் போது அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான விலையில்லா நலத் திட்டங்களுக்காக ரூ. 3,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?-DINAMANI

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும்மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடை காலமென்பதால் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. எனவே, பள்ளிகளின் கோடைவிடுமுறையை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்க மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

மாணவர்களுக்கு ரூ.300கோடி ஒதுக்கீடு..

மாணவர்களின் விலையில்லா நலத்திட்டங்களுக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப் ப்டடுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளாது. பள்ளி 
மாணவர்களுக்கு உரிய நேரத்தில் விலையில்லா பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும் அது தெரிவித்துள்ளது

நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்

ருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு.

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் .

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:

ITI ADMISSION NOTIFICATION 2016 - ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம்.

LAST DATES OF HIGHER EDUCATION APPLICATIONS

LAST DATES OF HIGHER EDUCATION APPLICATIONS

1.medical
Www.tnhealth.org.portal
May-11-2016 to May -28-2016 at 5.pm

2. TNEA -Engineering 
www.annauniv.edu
Last date for registration of online application 24.05.2016 
Last date for submission of filled in application 27.05.2016

3.veterinary
www.tanuvas.tn.nic.in
Online registration and payment of fee closed on 10.06.2016

பள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அறிவுரைகள் .....


அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நுழைவுத் தேர்வு இன்றி வழக்கம்போல் நிரப்பப்படும் இடங்கள் குறித்த எண்ணிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் விலையில்லா நலத் திட்டங்கள்: உறுதி செய்ய இயக்குநர் உத்தரவு

பள்ளிகள் தொடங்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டார்.

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்

ADMISSION TO MBBS / BDS COURSE 2016-2017 SESSION

COMMON APPLICATION FORM...

CLICK HERE FOR PROSPECTUS.....

பள்ளிகளில் ரவா கேசரி,உப்புமா..... சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிகள் வரை,அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா?

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன. சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.எனவே, பள்ளிகளின் கோடை விடுமுறையை, ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்க,

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு

பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.'மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவில், பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.

CPS Account Closure Regarding DEE Director Proceeding

நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி :நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பு - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள்.


புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!

100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம் என்பதால், அதற்கு கட்டணமில்லை. அதற்கு மேல் ஒரு யூனிட் 1.5 ரூபாய் வீதத்தில் கணக்கிடப்பட்டு, 120-வது யூனிட்டில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகுபெஞ்சமின் அவர்களை பொதுசெயலர் செ.மு அவர்கள் 23/5/2016மாலை சந்தித்து வாழ்த்திய போது

விலையில்லா,சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு

CLICK HERE DIRECTOR LETTER

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அதிகரிக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளை கூடுதலாக தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைகளின் ஆரம்பகால கல்வி செயல்வழியிலேயே நடைபெற வேண்டுமென்பது பல காலமாக கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படை கோட்பாடாகும். 

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு(NMMS) 2015 - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து-அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்...


விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா - முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்


நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.
 தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை www.tnresults.nic.in,     www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in

 ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு

'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. 

மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.

மிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை  விரிவாக்கம் செய்துள்ளார்.
அதன்படி,நிலோஃபர் கபில்தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி,

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....

சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

1.சத்திய பிரதா சாகு- போக்குவரத்து ஆணையர்.
2.டாக்டர் டி. கார்த்திகேயன்- தொல்லியல் துறை இயக்குனர்.
3.-சமயமூர்த்தி- வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4.கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்

'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
அதைத் தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய மே 25 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்- தமிழகத்துக்கு விலக்கு

டெல்லி: மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொதுநுழைவுத்தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Pranab Mukherjee signs ordinance on NEET இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த அரசுகள் சார்பில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர விரும்புகின்றனர்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிப்பறைகள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.
குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர், வாளி, சோப், பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வைத்திருந்து கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வி-6 முதல் 11 ஆம் வகுப்புவரை - EMIS கால அவகாசம் நீடிப்பு - 28.05.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவம் விண்ணப்பம். 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: கால்நடை பல்கலையில், பி.வி.எஸ்.சி., 320 இடங்கள்; பி.டெக் - உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தலா, 20 என, 380 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு,மாணவர் சேர்க்கை துவங்குகிறது. 
நாளை முதல், www.tanuvas.ac.in என்ற, பல்கலை இணையதளத்தில், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தகுந்த சான்றிதழ் நகல்களுடன், 'தலைவர், சேர்க்கைக் குழு, இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால் பண்ணை,சென்னை - 51' என்ற முகவரிக்கு, ஜூன் 16ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://www.tanuvas.ac.in/ugadmin.html

டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம் 2016-17 மாணவர் சேர்க்கை

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

புதிய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பெஞ்சமன் அவர்கள் பற்றி

சென்னை துணைமேயர் பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆனார்.

1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் பெஞ்சமின். கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தற்போது வரை சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.  அவருக்கு பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


web stats

web stats