rp

Blogging Tips 2017

ஆங்கில வழியில் கல்வி பயில்வோர் உயர்ந்தோர், தமிழ் வழியில் பாடம் படிப்போர் தாழ்ந்தோர் என்கிற நவீனத் தீண்டாமைப் போக்கு?

காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக் பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக் கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனலாம்.
இதுதவிர, மத்திய அரசு நாடு முழுவதும் கேந்திர வித்யாலாயா பள்ளிகளைப் போல சிபிஎஸ்சி பள்ளிகள் பலவற்றைத் திறக்க முடிவு செய்துள்ளது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போலுள்ளது. அதேசமயம், பத்து மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளை மூடும் அவலமும் ஒருபுறம் நடந்தேறவிருக்கின்றது. தமிழ்வழிக் கல்விக்கு இதுநாள்வரை இப்படியொரு நெருக்கடி நேர்ந்தது கிடையாது.

இரட்டைப் பட்ட வழக்கு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று பிற்பகல் 1.00மணியளவில்  முதன்மை அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞ்சர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து வருகிற ஜனவரி 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது

தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் அதன் மாநிலத்தலைவர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நாளை 14.12.2013 பிற்பகல் நடைபெறுகிறது.

வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196
வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு  மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220
ட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214

முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 6

மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது


மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதிப்பு என எட்டு வகை

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிறைவடையுமா?

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக வருகிறது. விசாரணையை எட்டிப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சிறப்பு அமர்வு என்பதால் வழக்கு இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் எதிர்காலம் கல்வி முன்னேற்றத்தையே நம்பியுள்ளது

ஒரு நாட்டின் எதிர்காலம், அதன் கல்வி முன்னேற்றத்தை சார்ந்தே இருக்கிறது என்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநர் ரகுநாத் மஷேல்கர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் மராத்வாடா பல்கலையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி பெறும் உரிமையுடையவர்கள். ஆனால் அனைவருக்கும் சரியான கல்வி கிடைக்கிறதா என்பதை நாம் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பள்ளிகளில் பயிலாதோருக்கு, தனித்தேர்வு மையங்கள்

தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர்

தேர்வு பணியில் நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும்

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட, ஐகோர்ட் கிளை, "பெஞ்ச்' உத்தரவிட்டது.
மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி'வகை வினாத்தாளில்,
47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார். திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவில், "தேர்வு எழுதியவர்களுக்கு, டி.ஆர்.பி., அநீதி இழைத்துள்ளது.

பறிபோகும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள்: தமிழக அரசு பரிசீலனை.

மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு
முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின்

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை தனி வாகனத்தில் கொண்டு செல்ல முடிவு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்
அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், டாடா சமூக அறிவியல் நிறுவனமும் இணைந்து, தேசிய உயர்கல்விக்கான மிஷன் (ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான்) (ரூசா) என்ற திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தொடங்க ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

click here to download the dee proceeding of Indian red cross initiated at all middle school reg

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு- டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர்எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில்,
மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம்நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார்.அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு,ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்தவேண்டும்' என்றார்.இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:"பி'வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட சில திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இயக்குனர் செயல்முறைக்கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

REVISED PG TEACHER PANEL AS ON 01.01.2013 FOR ALL SUBJECTS

PHYSICS CLICK HERE... BOTANY CLICK HERE...
CHEMISTRY CLICK HERE...
 
COMMERCE CLICK HERE...
ECONOMICS CLICK HERE...
ENGLISH CLICK HERE...
GEOGRAPHY CLICK HERE...
HISTORY CLICK HERE...
MATHS CLICK HERE...
PHYSICAL DIRECTOR GRADE - I CLICK HERE...
TAMIL CLICK HERE...
ZOOLOGY CLICK HERE...

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனை

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அரண் மனை 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிட்டு ள்ள‍னர். இந்த அபூர்வ காட்சி அடங்கிய அரிய‌ வீடியோவி னை  காணலாம்.

ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்

ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்

1G.O.MS No-42-Dated-10.01.62
2.G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
3.GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT/Dt-17 NOV-1971
4.G.O.MS No107 EDN-Dated-20.01.1976
5.G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
6 GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973
 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPIES

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் 30% தொடக்கப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி?

7 வது ஊதியக் குழு தலைவர் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி?

மாணவர்களுக்கு ஒரு சுதந்திரம்

எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என் பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
நல்ல நிறமாய் இருந்தால் பள்ளி விழாக்களில் ஆடவும் ,நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.அண்ணா ரவி சார்(தமிழ் ஆசிரியர் )என் பள்ளிக்கு வரும் வரை பேக் ஸ்க்ரீன் போஸ்ட் தான் எனக்கு.
ஆனால் இன்று அரசுப்பள்ளிகளில் அந்த நிலை மாறியுள்ளது  CCE என்கிற முறையில் மாணவர் திறன்களை மதிப்பிடு செய்கிறோம் .60 மதிப்பெண்கள் பருவத்தேர்வுக்கு  20 மதிப்பெண் வகுப்பறையில் நடக்கும்சிறுதேர்வுக்கு மற்றும் 20 மதிப்பெண்கள் மாணவர் தனித்திறமைகளை பாடப்பகுதியில் வெளிப்படுத்துவதற்கு .மாணவர்கள் அசத்துகிறார்கள் .எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள்.(தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு விரிவாகத்தெரியது .தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் )
எனது வகுப்பில்  சிவாஜி பழக்கூடையில் தப்பித்த நிகழ்வை நாடகமாக நடத்தினார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள் (எட்டாம் வகுப்பிற்கு மட்டும் வரலாறும் நடத்துகிறேன்).அவர்களிடம் இருந்தகுளிர்பான கிரேடில் அமரக்கூடிய அளவில் ஒரே ஒரு குட்டி மாணவன் தான் இருந்தான் .அவனோ சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சற்று கூச்சசுபாவம் உள்ளவன் .எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது .மாணவர்களோ தங்கள் குழுவில் வெகு தீவிர ஒத்திகையில் இருந்தனர் .

அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்.

அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான,

15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு.

பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரலில்,
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர்என, எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்விக்குறி! 30 சதவிகிதம் ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால்


மதுரை மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.தொடக்கக் கல்வித் துறை வாய்மொழி உத்தரவுப்படி, மாவட்டந்தோறும் மாணவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் இப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இத்துறையின் கீழ், 963 ஆரம்பப் பள்ளிகள், 312 நடுநிலைப் பள்ளிகளில் 1.51 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போதைய ஆய்வில், ஒவ்வொரு கல்வி ஒன்றியத்திலும் (மொத்தம் 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன), சராசரியாக 30 சதவிகிதம் பள்ளிகளில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரூப்–4 தேர்வு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு
ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்–4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். குரூப்– 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–முடிவு அடுத்த மாதம் வெளியாகும் குரூப்–4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது.

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு
சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.

2013 ஆண்டு- முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான இறுதிப்பட்டியல் அனைத்துப்பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்.

2013 ஆண்டு- முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான இறுதிப்பட்டியல் அனைத்துப்பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் மீண்டும் நாளை விசாரணக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று
காலையில் விசாரணைநடைபெறுவதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும்.

புதுவை: வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

புதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள பள்ளி வகுப்பறைகளில், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது செல்போன்களை தலைமை ஆசிரியர் அறையில் ஒப்படைக்க வேண்டும்.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில் பள்ளி ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதை சோதனையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

மா.க.ஆ.ப.நி - ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகளைக் கண்டறிதல், காணொலியாக பதிவு செய்தல், கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் பகிர்தலும் பரவலாக்கலும் குறித்த செயல்முறைகள்

SCERT - PREPARATION FOR EMIS HOSTING REG PROC CLICK HERE...

மா.க.ஆ.ப.நி - பாடநூல்களிலுள்ள சமூகக் கருத்துருக்களை கண்டறிந்து அளிக்க 12.12.2013 அன்று SCERT கருத்தரங்கக் கோட்டத்தில் பணிமனை நடைபெற உள்ளது

SCERT - DISCOVER OF SOCIAL CONCEPTION WORKSHOP TO BE HELD ON 12.12.2013 @ CHENNAI REG PROC CLICK HERE... 

BRC மேற்பார்வையாளர்களை ,உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் மேலும் 1000 BRT ஆசிரியர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு

BRC மேற்பார்வையாளர்களை ,உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் மேலும் 1000 BRT ஆசிரியர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் .BRC மேற்பார்வையாளர் பொறுப்பினை அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியரோ ,அல்லது பட்டதாரி ஆசிரியரோ ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.

வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்புநடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய
அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்படஉள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது.

உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யமுடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு

மனுவில் கூறி இருந்ததாவது:–

நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம்(டிஸ்மிஸ்) செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பணி இடைநீக்கம்பணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த போதிலும் பள்ளி நிர்வாகம் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், ஐகோர்ட்டில் அப்பீல் செய்தேன்.

தொலைநிலையில் படிப்போரே, இது அதுபோன்றதல்ல...

நேரடியாக கல்லூரிக்கு சென்று ரெகுலர் முறையில் படிக்க முடியாதவர்களுக்காக, அவர்கள் பணி செய்துகொண்டே படிப்பதற்காக கொண்டுவரப் பட்டதுதான் தொலைநிலைக் கல்வி முறை. இக்கல்வி முறையின் ஒரு நியதியே, இது, லெக்சர் என்ற வகுப்பறை நடவடிக்கை இல்லாதது என்பதுதான்.

தொலைநிலைக் கல்வியை மேற்கொள்பவர், பக்குவப்பட்டவராகவும், எதை செய்ய வேண்டும் என்ற முதிர்ச்சியுடையவராகவும் இருத்தல் அவசியம். அப்போதுதான், அவரால் வெற்றிகரமாக இம்முறையிலான கல்வியை நிறைவுசெய்ய முடியும். பள்ளிக் கல்வி வரை, எதற்கெடுத்தாலும், ஆசிரியரின் உதவியையே நாடி பழக்கப்பட்ட ஒருவருக்கு, கல்லூரி படிப்பை தொலைநிலை முறையில் மேற்கொள்ளும்போது, எங்கோ நடுக்காட்டில் தனித்துவிடப்பட்டது போன்ற ஒரு உணர்வு எழலாம்.

சுயமாக பட்டம் வழங்கும் அதிகாரம் - சட்டத்திருத்த ஆய்வுக்கு நிபுணர் குழு அமைப்பு

கல்லூரிகளுக்கு தாங்களே பட்டங்களை வழங்கிக்கொள்ளும் வகையில் அதிகாரம் அளிப்பது தொடர்பான யு.ஜி.சி சட்டத் திருத்தம் குறித்து ஆய்வுசெய்ய ஒரு நிபுணர் குழுவை யு.ஜி.சி., அமைத்துள்ளது என்று மனிதவளத் துறை இணையமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அதிகாரத்தைப் பெறும் சுயாட்சிக் கல்லூரிகள், முறையான கல்வி செயல்பாடுகள், நிதி மற்றும் பொது நிர்வாக விஷயங்கள் ஆகியவற்றை முறையான வகையில் மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதல்களை UGC வகுத்துள்ளதை ஒட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ& மாணவியருக்கு பொதுத் தேர்வு போல ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்துவது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற டிச., 15 முதல் அடையாள அட்டை கட்டாயமாகிறது.

யுனைடெட் இந்தியா நிறுவனம் : தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மக்கள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை, அரசு செலுத்தி விடும். இதனால், ஏழை, எளிய மக்கள், தனியார் மருத்துவமனைகளிலும், காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடிகிறது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது;இது முழுமை அடையவில்லை. இதனால், அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அடையாள அட்டை இல்லாவிட்டாலும், ரேஷன் கார்டு மற்றும் வருமானச் சான்று கொடுத்து, உரிய சிகிச்சை பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த நடைமுறையை, காப்பீட்டு நிறுவனம் கைவிடுகிறது. டிச.,15ம் தேதி முதல், அரசின் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை இல்லாவிட்டால், சிகிச்சை பெற முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை அடையாள அட்டை பெறாதோர், சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என, தெரிகிறது. கலெக்டர் அலுவலகம் : இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் பெரும்பான்மையானோருக்கு, மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

3-ம் பருவத்துக்கு 2.4 கோடி புத்தகங்கள்: 25-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும்.

முப்பருவ முறையில் மூன்றாம் பருவத்துக்கான 2.4 கோடி புத்தகங்கள் டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றாம் வகுப்பு
முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் குறித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது:

தொடக்க கல்வி அலுவலகங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் - பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு

தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகங்களில் பணி யா ளர் பற்றாக்குறையால் ஆசிரியர்களே அலுவல் பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால் பள்ளி மாணவர்கள் பாடம் கற் பிக்க ஆசிரியர்கள் இன்றி பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தில் தொடக்க கல்வியில் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டப் பணிகளை அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்

கல்வி நிகழ்ச்சிகளை காண டிஷ் ஆன்டனா அறிமுகம்

நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜு

நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கூறியதாவது: நெறிமுறை சார்ந்த விஷயங்களில் நமது உயர்கல்வி அமைப்பு சிறப்பான கவனம் செலுத்தியுள்ளது என்று யாராலும் கூற முடியாது.

மூண்றம்ம் பருவ விலையில்லா பாடப்புத்தகம்,நோட்டுக்கள் மானவர்களுக்கு ஜன-2 ல் விநியோகம்


ஒரு நாள்; 72 "பைல்'கள்; திணறும் தலைமையாசிரியர்கள் : சுமையை தீர்க்குமா கல்வித்துறை

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், நாள் ஒன்றுக்கு 72 ஆவணங்களை கட்டாயம் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளித் தலைமையாசிரியர்களின் பணிச்சுமை மூச்சு முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன.

கேள்வி கேட்கும் மாணவர்களை புறக்கணிக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்" என, இஸ்ரோ விஞ்ஞானி காளிமுத்து


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் நேற்று மாலை துவங்கியது. இஸ்ரோ முதுநிலை விஞ்ஞானி காளிமுத்து பேசியதாவது:

"சிந்தனைகளை உடனுக்குடன் வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்துபவர்கள் குழந்தை விஞ்ஞானிகள்; அவர்களை மாசுபடாத விஞ்ஞானிகள் என அழைக்கலாம். வளர்ந்ததும், அவர்களது சிந்தனையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துகள் கலந்து மாசுபட்டு விடும். கிராமப்புறங்களில் அறிவியல் இயக்கங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது சிறப்பானது.

இன்று-டிச., 9- சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் -

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பி.எட்., மாணவர்களிடம் பள்ளிகள் கட்டாய வசூல் : சிக்கலில் தலைமை ஆசிரியர்கள்.

கற்றல், கற்பித்தல் பயிற்சிபெற்ற பி.எட்., கல்லூரி மாணவர்களிடம், பயிற்சி அளித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கட்டாய நன்கொடை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் 600 பி.எட்., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பாடப்பிரிவுக்கு தகுந்தாற்போல், ஓராண்டு முதல் ஈராண்டு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழக MPhil Course Approved by UGC

Vinayaga Mission University's MPhil Course Approved by UGC - to download  -Click Here 

நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக

3 மந்திரிகள் இலாகா மாற்றம்: அமைச்சர் ராமலிங்கம் நீக்கம் - புதிய அமைச்சராக உதயகுமார் நியமனம்.

தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறையின் புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக.

Govt. Letter No. 43105 Dt: December 02, 2013 - Pensions - Government Employees' Unmarried / Divorced / Widowed Daughters to Provide Clarity with regard to Providing a Lifetime of Family Pension Click Here...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்து பற்றாக்குறை: படிக்கட்டில் தொங்கிய மாணவர் பலி

போக்குவரத்து பற்றாக்குறையால் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவர் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ணூர் அடுத்த சோகன்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் அரவிந்த், 15. இவர் சுங்குவார்சத்திரம் - மப்பேடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவர் சேர்க்கை பணிகளை முன் கூட்டியே முடிக்கக் கூடாது

பள்ளியில் 25 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் சத்துணவு மையங்கள் மூடப்படும்?

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்துவதில் கவனக் குறைவு - 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் கொண்டு செல்லும் பணி: மாற்று திட்டம் குறித்து ஆலோசனை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை, தபால் துறைக்கு வழங்காமல், மாற்று வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும் எழுதுகின்றனர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், 18 லட்சம் பேர் தேர்வை எழுதுவர். மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள், 2,000த்திற்கும் மேற்பட்ட மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வு, 3,000த்திற்கும் மேற்பட்ட மையங்களிலும் நடக்கும்.

முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு வழக்கு தீர்ப்பு விவரம்


முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம்.

இவ்வழக்குகளில் ஒரு வினாவுக்கு மட்டுமே விடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
The petitioner was supplied with "C" series question paper in History subject.He challenges the question

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது
கேள்விகள் விவரம்
The petitioner has challenged the action of the Board deleting nine questions viz., Question Nos.23, 36, 49, 50, 64, 68, 88, 99 and 137, in "A"series question paper

ஒரே கல்வியாண்டில் இரு பட்டபடிப்புகளில் பயில விதிகளில் இட மில்லை (RTI -NEWS)

CLICK HERE TO DOWNLOAD RTI LETTER

RTI-உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

CLICK HERE- RTI - TO ALLOW INCENTIVE FOR 2 DEGREES WITH PERMISSION REG

TN PSC Recruitment 2013 – 268 Personal Assistant & Computer Operator Vacancies For Any Degree

CLICK HERE-Vacancies and Eligibility Criteria

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள NTSE -NOVEMBER 2013 தேர்வு விடைகள்

CLICK HERE-அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள NTSE -NOVEMBER 2013 தேர்வு விடைகள்-

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு - அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


SET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்....

திருவணந்தபுரம்,எல்.பி.எஸ் சென்டர் பார் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, SET-2013நுழைவுத்தேர்வுக்கு அழைப்புவிடுத்துள்ளது.உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மற்றும்   தொழிற்கல்வி அல்லாத ஆசிரியர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் 14.12.2013 அன்று வழங்கப்படும்.

  • ஏற்காடு இடைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்தபடியால் சேலம் மாவட்டத்தில் TN TET சான்றிதழ் வழங்கவில்லை.தற்போது தேர்தல் முடிந்து விட்டதால்

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி.

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கேள்விகள் விவரம்:

The petitioner has challenged the action of the Board deleting ninequestions viz., Question Nos.23, 36, 49, 50, 64, 68, 88, 99 and 137, in "A"series question paper for mathematics subject, from evaluation. According

சென்னையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மொட்டையடித்து பேரணி

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இன்று சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆசிரியர்கள் கூடினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்–ஆசிரியைகள் வந்திருந்தனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: டிச.16-ல் தொலைதூரக் கல்வித் தேர்வுகள் துவக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வு இம்மாதம் 16-ல் தொடங்குகிறது என கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில்

இந்திய அளவில் சிறப்பான பள்ளிக் கல்வி - லட்சத்தீவுகள் முதலிடம்


இந்திய அளவில் சிறப்பான பள்ளிக் கல்வி - லட்சத்தீவுகள் முதலிடம்,தமிழகம் மூன்றாமிடம் டெல்லி: இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது. பல்வேறு அம்சங்களைக் கொண்ட கல்வி மேம்பாட்டு குறியீடு 2012-13ன் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை மே மாதம் தான் நடத்த வேண்டும் கல்வித்துறை எச்சரிக்கை


மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 2014–ம் ஆண்டு மே மாதம் தான் தொடங்க வேண்டும். முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

குளிர்காலம் வந்துவிட்டது., எப்படி உங்களை இந்த குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்??

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது. தயிர், மோர் போன்ற
பால் பொருள்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.  சுரைக்காய், புடலங்காய்,
பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களையும் தவிர்க்க  வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள்.
உணவில் மிளகு, பூண்டு,இஞ்சி, புதினா,தூதுவளை அதிகம் சேர்க்கவேண்டும்.

குழந்தைகளை டூ வீலர்,சைக்கிளில் முன்னாடி உட்காரவைத்து கூட்டிபோகக்கூடாது.
குழந்தைகளுக்கு இந்த சீசனில்காலை மற்றும்மாலை நேரங்களில் வெளியில்
போகும்போது காதில் ஸ்கார்ப்,மப்ளர் ஏதாவது ஒன்றை காது மறையும்படி கட்டி வைக்க வேண்டும். பெரியவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில்
போகும்போது இதேபோல் காது மறையும்படி கட்டிக்கொள்ள வேண்டும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:


1. இண்டர்நெட் (PASSWORD THEFT) கடவுச்சொல் திருட்டு.

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்.

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking)

4. [பாலியல் ரீதியிலான தொல்லைகள்,
5. வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது,
6. மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

பிளஸ் 2; 10ம் வகுப்பிற்கு விடை தாளில் விசேஷ ஏற்பாடு:இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு

"வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.

அரசு அனுமதியின்றி புது படிப்புகளை கல்லூரிகள் தொடங்கக் கூடாது

அரசு அனுமதியின்றி புது படிப்புகளை கல்லூரிகள் தொடங்கக் கூடாது என துணைவேந்தர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகப் பிரச்னைகள், துணைவேந்தர்கள் மீது முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு வந்த புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தணிக்கை முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக துணவேந்தர்கள் தெரிவித்தனர்.

மேலும், பாடத் திட்டங்களை மேம்படுத்துவது, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் உயர்கல்வித் திட்டத்துக்கான (ரூசா) நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அனைத்து கல்லூரிகளிலும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள், சர்வதேச தொடர்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற துணைவேந்தர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் பி. பழனியப்பன் கூறியது:

ஆய்வுக் கூட்டத்தில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, பாடத் திட்ட மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இணைப்பு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்கும்போது அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் வரலாறு, புவியியல் சுவர் வரைபடங்கள் (வால் மேப்)


வரலாறு, புவியியல் பாடங்களை பள்ளிக் குழந்தைகள் எளிதாக படிக்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவர் வரைபடங்கள் (வால் மேப்) ஒட்டப்பட உள்ளன. இதற்காக 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஜனவரியில் சுவர் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாறு, புவியியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமூக அறிவியல் என்ற பெயரில் வரலாறு, புவியியல் பாடம் இடம்பெறுகிறது. மேல்நிலைக் கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு.

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்

அனைத்து கோப்புகளையும் தமிழில் எழுதிய ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு கேடயம் ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் வழங்கினார்

அனைத்து கோப்புகளையும் தமிழில் எழுதிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் சண்முகம் கேடயத்தை வழங்கினார்.

கருத்தரங்கம்
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கூட்டரங்கில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கி தமிழில் அனைத்து கோப்புகளை எழுதிய சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்துக்கு கேடயத்தையும், தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசு

ஆசிரியர்கள் பற்றாக்குறை எண்ணிக்கை: 6 லட்சம்

நாட்டில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். தரமான கல்வியை அளிப்பதற்காக இந்த காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள் மே.1ல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு உத்தரவு

வரும் கல்வி ஆண்டிற்கு மே மாதம் 1ம் தேதி முதல் தான்  மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

web stats

web stats