rp

Blogging Tips 2017

அக்டோபர் 2017- பள்ளி நாட்காட்டி

Flash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் தமிழகத்தின்

புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் * அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா, பீகார் - சத்யபால் மாலிக், அசாம் - ஜகதீஷ் முகி, மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக...

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.
இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.
இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER

மீனாட்சி  நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும் இன்றி மீனாட்சி  நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்பெற்ற எம்.பில் பட்டம் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தது ஆகும்.

DSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை

  வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.


     நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

சாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்தரம் குறித்து உலகவங்கி கவலை !!

-ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் எதிரொலி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முன்கூட்டியே முதலமைச்சரிடம் ஒப்படைப்பு !!

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

DGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவலர்களே சரிபார்த்துக்கொள்ள கடவுச்சொல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்

JACTO-GEO STRIKE-Implementatiom of the orders of the Madurai Bench of Madras High court-Instruction Issued - தலைமைச்செயலாளர் கடிதம்

01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! !

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!

JACTO-GEO STRIKE CASE- 21.09.2017 மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் முக்கிய சாராம்சம்- தமிழில்....


PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.


ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (139%) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத்தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம்நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத்தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சியில் - " அளித்த நேர்காணல்- வீடியோ


அரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் MGR பெயர் சூட்டுதல்-ஆணை வெளியிடப்படுகிறது

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்

"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

Click Here For Order Dated   Thursday, September 07, 2017


Click Here For Order Dated   Tuesday, September 12, 2017


Click Here For Order Dated   Friday, September 15, 2017


Click Here For Order Dated   Thursday, September 21, 2017

மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்




பணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை ஆணை



மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 
 நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயச்சந்திரன் உத்தரவில் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலானது. அதன்பின், தொடர்ந்து பல மாறுதல்கள் நடந்து வருகின்றன.காமராஜர் விருது: பள்ளிக் கல்வித்துறையில் இதற்கு முன், பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களில் சிறந்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேரவும் அரசு சலுகை வழங்கியது.

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. 
தமிழக அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்,பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

TNPSC- DEPARTMENT EXAM -DECEMBER 2017- TIME TABLE

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

Tamilnadu Open University- B.ED ADMISSION – CY-2018 – APPLICATION AND PROSPECTUS.

CLICK HERE-

அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்

புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம்  விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. 

அரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது


G.O MS : 29 - SCHOOL EDUCATION - NEW DEO's SELECTED LIST BY TNPSC & DISTRICTS


வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி வீடீயோ....



web stats

web stats