rp

Blogging Tips 2017

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

DEE - ALL DEEO / AEEOs MUST BE THERE CONCERN HEAD OFFICES ON 25.10.2014 & 26.10.2014 DUE TO HEAVY RAIN REG PROC CLICK HERE...

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது : தமிழக அரசு

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பசு தீவனம், இடு பொருட்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளதை அடுத்து பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்

மின்-ஆளுமை திட்ட சிறப்பு மேலாளர்கள் விரைவில் நியமனம்: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல் படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட் டத்திலும் விரைவில் சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சாதி சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று, முதல் தலை முறை பட்டதாரி சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கு சான்று உள்பட அரசு வழங்கும் பல்வேறு விதமான சான் றிதழ்களை பொதுமக்கள் ஆன் லைனில் விண்ணப்பித்து விரை வாக பெறும் வகையில் மின்-ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தியுள்ளது.

பெருகிவரும் குழந்தைக் கடத்தல்கள்: ஆண்டொன்றுக்கு காணாமல் போகும் 45 ஆயிரம் பேர் - கோடிகளில் புரளும் வியாபாரம்

குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும். ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மெட்ராஸ் ஐ' - கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.
இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் கண் ஆலோசகர் டாக்டர் சவுந்தரி கூறியதாவது:–
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி 10 நோயாளிகள் கண் நோய் பாதித்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நோய் பாதித்தவர்களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த முகாம்கள் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன.

கல்விச் சான்றிதழ்களில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் குறிப்பிட சிபிஎஸ்இ தடை

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். அதில் அவர்கள் படித்த பள்ளியின் பெயர், படிப்பு காலம், அங்க அடையாளங்கள், சாதி பெயர், இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு



ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள் ளது. நியமனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒருவர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன்னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 28.10.2014 AT CHENNAI REG PROC CLICK HERE...

வகுப்பு 8 - வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களையும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, 'புரமோட்' செய்து விடுகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், இப்படி செய்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள், சரியாக படிக்காத மாணவருக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக சிறப்புத் தேர்வை நடத்தி, அதில் தேறினால், அடுத்த வகுப்பிற்கு, 'புரமோட்' செய்கிறது.

சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும் 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை இதுவரை யு.ஜி.சி., (பல்கலை மானியக் குழு) நடத்தி வந்தது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) இத்தேர்வை முதல்முறையாக வரும் டிச., மாதம் நடத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை, இத்தேர்வு சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்டவுள்ளது.
 
cbsenet.nic.in/cbsenet/welcome.aspx

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி

கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம்

25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பேனலில் விடுபட்டவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

GO.165 SCHOOL EDUCATION DEPT DATED.15.10.2014 - SSLC WITH DTT CONSIDER AS A PLUS 2 ORDER ISSUED REG ORDER CLICK HERE...

ONLINE SALARY - e PAY ROLL SYSTEM

CLICK HERE FOR EMPLOYEE MASTER - UPDATION DETAILS - DEMO


CLICK HERE FOR P TAX ENTRY

CLICK HERE FOR Retd NON SALARY 

ஜனவரி- 2015 ல் அகவிலைப்படி எவ்வளவு-அறியலாமா!!!! 7%மட்டுமே கிடைக்க வாய்ப்பு

Now, the next episode begins...'Expected DA from January 2015'

It is highly unlikely that there will be a two-digit DA hike in the next two instalments
(January 2015 and July 2015). Kindly keep in mind the fact that despite a 6 point
increase of the AICPIN from 246 to 252 for the month of July 2014, there was hardly
an impact. Even if it increases by 3 points over the next five months, the DA would
increase to 9% only. It is impossible for AICPIN to constantly increase in future.

தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

தொடக்கக் கல்வித் துறையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சிஅரசு நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவிஉயர்வு பெறுவதற்கு உரிய முன்னுரிமை பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.இவர்களில் ஒன்று முதல் 30 வரை இடம்பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீதம்உள்ள 165 பேர் தங்களுக்கு எப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார்.

அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார். இடைநிலை ஆசிரியர் தகுதி உள்ளவர்கள் கிடைக்காததால், பட்டதாரி ஆசிரியரான மீனலோசினியை, இடைநிலை ஆசிரியராக நியமித்தனர். ஆனால், பட்டப் படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, ஊக்க ஊதியம் கோரக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், நியமிக்கப்பட்டார். பணி நியமனத்துக்குப் பின், எம்.எட்., மற்றும் எம்.ஏ., பட்டங்களை பெற்றார். அதற்காக, ஊக்க ஊதியம், 1990, 1999, மீனலோசினிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில்,

தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்!!


தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஒரு லட்சத்து 14 ஆசிரியர்கள் பிளஸ்–2 மற்றும் அதற்கு கீழ் தகுதி உடையவர்கள் என தெரிய வருகிறது. கல்விக்கான மத்திய மாவட்ட தகவல் திட்டம்

ஓய்வூதிய நிதி யாருக்காக?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள்  மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது. அதன்படி
ஒரு மாதம் ஊதியம்  -4.5 லட்சம்- ரூபாய்
T.A-வாக மாதம்  -80,000 ரூபாய்
L.T.C-80,000 ரூபாய்
ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு -30 நாட்கள்

இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது: மின்வாரியம் அறிவுரை

செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம் நடந்தது. 10 இடங்களுக்கு மேல் விழிப்புணர்வு குறித்து தட்டிகளும் வைக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், வயர்கள் (இழுவை கம்பிகள்) அருகே செல்லக்கூடாது.

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார். அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார்.

இடைநிலை ஆசிரியர் தகுதி உள்ளவர்கள் கிடைக்காததால், பட்டதாரி

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம்

பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தேவை குறித்த இறுதி பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதியின்றி உள்ளது. குறிப்பாக நடுநிலையில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்

ஆசிரியர் பற்றாக்குறையால் சரிந்தது மாணவர் சேர்க்கை

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது.
கொத்தபுரிநத்தம், அரசு நடுநிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன்

மெட்ராஸ்-ஐ வேகமாக பரவுகிறது

சென்னை: ‘மெட்ராஸ்-ஐ’ கண் நோய் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. மெட்ராஸ்-ஐ நோய் பாதிப்பு குறித்து அகர்வால் கண் மருத்துவமனை கண் ஆலோசகர் டாக்டர் சவுந்தரி கூறியதாவது: ‘மெட்ராஸ்-ஐ’ பாதித்தவர்களை மற்றவர்கள் பார்த்தாலே தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறாக கருத்து நிலவுகிறது. இந்நோய்

உலகில் தலைசிறந்த பெருநகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 9வது இடம்!

சென்னை உலகின் தலைசிறந்த பெருநகரங்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் சிங்காரச்சென்னை. வந்தாரை வாழவைக்கும் ஊர் என்பதையெல்லாம் தாண்டிய ஒரு கம்பீரத்தை சென்னை அடைந்துள்ளது. காஸ்மோபாலிடன் சிட்டி என்றால் என்ன என்று பலருக்கு கேள்வி எழலாம். பண்முக கலாச்சாரங்களையும், பல வகையான

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர். இன்று மரணம் அடைந்தார். சிவாஜி கணேசனின் முதல்படமான பராசக்தி மூலம் கோலிவுட் வந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு



மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது 31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராக பணியாற்றியபோது 1.11.1965ல் எனது பணி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் படி 4.12.1971ல் நில அளவை துணை

மழையின் காரணமாக இன்று விடுமுறை

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். மேலும் தனியார் கல்வி நிறுவனங்களும் இன்று செயல்படாது என்றும் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

CTET: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 5,767 பேர் எழுதினர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஒன்று

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.



தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலைநீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன.
ஆனால், உயர்நிலைப் பள்ளிகளை பொருத்தவரை 300 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.ஒவ்வொரு ஆண்டும்

பெயிலான மற்றும் தனித்தேர்வர்களுக்கான அக்டோபர் மாத எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை வெளியீடு



பெயிலான மற்றும் தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. அக்டோபர் மாத தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. ஆனால் இணையதளத்தில் வெளியிடப்படாது. மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு எழுதிய பள்ளிக்கூடங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முடிவைநாளை அறியலாம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலான மாணவ-மாணவிகள், தனியாக படித்து தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம்

இப்போதைக்கு "நோ" புது கார்டு.. ரேஷன் கார்டுகளில் மீண்டும் "உள்தாள்"!

சென்னை: தமிழ்நாட்டில் மின்னணு ரேஷன் கார்டு பணி தாமதம் ஆவதால் புதிய ரேஷன் கார்டு 2015 ஆம் ஆண்டும் வழங்கப்பட மாட்டாது என்றும், வழக்கம்போல் உள்தாள் ஒட்டிக்கொள்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடைசியாக, தமிழகத்தில் 2005 இல் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கப்பட்டது.


புதிய ரேஷன் கார்டு: அந்த கார்டு 2005 முதல் 2009 வரை பயன்படுத்த முடியும் என அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 2010 இல் புதிய ரேஷன்

கல்விக்கூடங்கள் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றவா?

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது.

கற்றலும் குணநலமும்

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு வாரம்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அரசு அலுவலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை தலைவர்கள், செயலாளர்களுக்கு தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கையை மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
ஊழலை ஒழிக்கும் வகையிலும், அதுதொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி சிறப்பு தொலைக்காட்சி பட்டிமன்றங்கள்

கலைஞர் தொலைக்காட்சி-லியோனி பட்டிமன்றம்-CLICK HERE

சன் தொலைக்காட்சி-சாலமன் பாப்பையா பட்டிமன்றம்-CLICK HERE

விஜய் டிவியின் நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்க்கை ஒரு வானவில்-உரை-CLICK HERE

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி.

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

UGC- National Eligibility Test (NET)

The Central Board of Secondary Education announces holiday of the National Eligibility Test (NET) on 28th December 2014 (sunday) for the eligibility of Assistant Professors only or Junior Research fellowship and Eligibility for Assistant Professor both in Indian Universities and Colleges
CBSE will conduct NET in 79 Subjects and 89 selected NET coordinating Institutions spread across the country

Candidates should apply for NET Dec2014 Online only through website
www.cbsenet.nic.in
Eligibility- Candidates who have secured at least 55% Marks (without rounding off) in Masters Degree or equivalent examination from Universities/Institutions recognised by UGC
Examination Fees-
General - Rs.450
OBC - Rs.225
SC/ST/PWD- Rs.110
Last date for applying online form submission- 15th November 2014

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்-tntf.in


சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க உயர் அதிகாரி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஏ.வி.பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதில், மாநிலக் கல்வி முறைப் பள்ளிகள் தவிர அனைத்துப் பள்ளிகளும் மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் கடும் அவதி

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சேலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரோடுகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால்

9 மாவட்டங்களுக்கு 21.10.2014 அன்று விடுமுறை

திருச்சி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி(உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா) - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
•ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.
•மழையில் நினையாதே - காய்ச்சல் வரும்.
•மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் - முன்னெச்சரிக்கை.
•பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் - மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.
•கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.
•காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.
•சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.
•மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.

அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

DGE - DUPLICATE MARK SHEET / GENUINENESS / MARK SHEET CORRECTION REG LETTERS DON'T SEND LETTERS THRO POST REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

DEE - MIDDLE SCHOOL HMs TO AEEO COUNSELING HELD ON 25.10.2014 AT DEE, CHENNAI - SENIORITY LIST S.NO.31 TO 160 WILL BE PARTICIPATE IN COUNSELING REG PROC CLICK HERE...

DEE - MIDDLE SCHOOL HM TO AEEO SENIORITY LIST S.NO.31 TO 160 RELEASED REG LIST CLICK HERE...

திருக்குறள்,பழமொழி,நாலடியார்,பொன்னியின் செல்வன் போன்ற அனைத்து தமிழ்நூல்கள் பதிவிறக்கம் செய்ய

பொன்னியின் செல்வன் தொடங்கி, பாரதியார் பாடல்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள், சங்க இலக்கியம், வைரமுத்துவின் தண்ணீர் தேசம் வரை அனைத்து நூல்களையும் PDF வடிவில் டவுன்லோட் செய்ய லிங்க்: 
கீதை, பைபிள், குர்ஆன் போன்ற சமய நூல்களையும் பதிவிறக்கம் செய்யலாம்!. [தெரியாதவர்களுக்கு மட்டுமே!, தெரிந்திருந்தால், சட்டை செய்ய வேண்டாம்!] (முழுக்க முழுக்க காப்பிரைட் இல்லாத, பொதுவுடமையாக்கப் பட்ட நூல்கள்).

இங்கே சொடுக்கவும்

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.ஈஸ்வரன் மறைவுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் செ.முத்துசாமி ஆழ்ந்த இரங்கல்

இயக்கம் ஒன்றாக இருந்தபோது தன்னுடன் இணைச்செயலராக பணியாற்றிய திரு ஈஸ்வரன் மறைவு செய்தி கேட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்வதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி ,Ex.MLC  அவர்கள் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு   ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை,திருச்சி,விழுப்புரம்,கடலூர்,கரூர்,தூத்துக்குடி,அரியலூர்,புதுக்கோட்டைபல்ளிகளுக்கு விடுமுறை

பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம்.

பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

இந்த வன்முறைகளை தவிர்க்க காந்திகிராம பல்கலையில் காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.திட்டத்தின் துவக்கமாக காந்திகிராம பல்கலையில் பள்ளி வன்முறையை தவிர்த்தல் தொடர்பான பயிலரங்கம் நடந்தது. காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறைத்தலைவர் மணி வரவேற்றார்.

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.


தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்தார்.

தொடர் கனமழை: தமிழகத்தின் பல மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

20-10-2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

திருச்சி- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஈரோடு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோவை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருப்பூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

துத்துக்குடி -பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
21-10-2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (20 & 21.10.2014 ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சிலிண்டரின் உள்ளேஇருக்கும் கேஸ்ஏன் பற்றிக் கொள்வதில்லை?

கேஸ் திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகி விடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங் கள் முக்கியமானவை.ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ் கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360டிஊ ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது.

மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் கனமழை: நாளை பள்ளிகள் விடுமுறை
புதுச்சேரி:,புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால், புதுச்சேரி  காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய ஜானாதிபதி அணுக்கரு விஞ்சாணி அப்துல்கலாம் அவர்களின் அக்கினிச்சிறகுகள் புத்தகம்

பார்க்க படிக்க பதிவிறக்கம் செய்ய

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை வரவு செலவு தணிக்கை

மாநில அமைப்பு முடிவாற்றியபடி நேற்று தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக்கிளையின் 2011 முதல் 2014வரையிலான வரவு செலவுக்கணக்கு தணிக்கைக்காக ஒசூர் சென்ற போது,மாவட்டசெயலர் திரு பொன் நாகேசா அவர்களால்சிறப்பான வற்வேற்பும்,அவர்களின் மாதிரிப்பள்ளியான ஒசூர் வட்டாரம் பேட்றபள்ளி நடுநிலைப்பள்ளியினை கண்டுணரும் வாய்ப்பும் ,அவர்களது பள்ளி செயல்பாடு மற்றும் அப்பள்ளி ஆசிரியகளோடு அளவளாவும் வாய்ப்பும் கிடைத்தது.


ரக்‌ஷித்.கே.பி.
மாநிலதுணைத்தலைவர்



ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.
               அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதி பெறும்போது அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. ஓர் ஊக்க ஊதி யம் என்பது 2 வருடாந்திர ஊதிய உயர்வுகளை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் சேர்த்து வரும் தொகையில் 3 சதவீதமும் அதற்கு இணையான அக விலைப் படியையும் உள்ளடக்கியது ஒரு இன்கிரிமென்ட்.

23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TET Excemption Proceeding

23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here & Download Director Proceeding

இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.

Central Teachers Eligibility Test (CTET) -September 2014 Results Published

CLICK HERE-CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEPT 2014-RESULTS

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. தர்மன், உமா உள்பட 6 பேர் 10-ஆம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயற்சி பெற்றனர். அதன் பிறகு, கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டுகளில் ஓவிய ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.

வரும் காலத்தில் கணினி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமே நியமிக்கப்படுவர் - அரசு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட் டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்க ளுக்கு அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அதன்படி, மொத்த முள்ள 652 காலியிடங் களில் 138 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 156 காலியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு (30 சதவீதம்) செய்யப்பட்டுள்ளன.

சென்னை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது

TNTET:-டெட்" 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி!!

'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

web stats

web stats