rp

Blogging Tips 2017

பள்ளிக்கு பெற்றோர்கள் லுங்கி, நைட்டியுடன் செல்ல வருகிறது தடை!

 தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
             தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்

SSLC,PLUS TWO நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.| New Declaration form forSSLC,PLUS TWO

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM FILLING GUIDE LINES FOR ALL TYPES OF SCHOOL - CLICK HERE TO DOWNLOAD

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM IN TAMIL MEDIUM - CLICK HERE TO DOWNLOAD

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM IN ENGLISH MEDIUM - CLICK HERE TO DOWNLOAD

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM FILLING GUIDE LINES FOR ALL TYPES OF SCHOOL - CLICK HERE TO DOWNLOAD

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORMS IN TAMIL MEDIUM   - CLICK HERE TO DOWNLOAD

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM IN ENGLISH MEDIUM  - CLICK HERE TO DOWNLOAD

பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான

மாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்

 
உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

சர்க்கரை வியாதியை முற்றாகக் குணப்படுத்தலாம் ; பேஸ்புக் செய்தி


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி( தணியா) –அரை கிலோ
வெந்தயம் —கால் கிலோ

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஒரே வினாத்தாள் : உடனுக்குடன் தகவலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப உத்தரவு.

என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (25ம் தேதி) நடக்கிறது. இத்தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு "ஸ்பெஷல்' பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடி.என்.பி.எஸ்.சி தேர்வில் பொதுவாக ஏ, பி, சி, டி என நான்கு வகையான வினாத் தாள்கள் அச்சிடப்படும். ஆனால் நாளை (25ம் தேதி) நடக்கும் குரூப் 4 தேர்வுக்கு ஒரே வகையான வினாத் தாள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தேர்வர்கள் பார்த்து எழுதுவதை தடுக்கும் வகையில் ஒரு தேர்வு அறைக்கு ஒரு கண்காணிப்பாளருக்கு 20 பேர் ஒரு மட்டுமே தேர்வு எழுத உத்தரவிடப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின்,"டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது.

ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், "வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். இவரின் பணியிட மாறுதலும் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, டி.ஆர்.பி.,யில் பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வர்மா மற்றும் உமா இருவரும், டி.ஆர்.பி.,யில் நல்ல அனுபவம் பெற்றிருப்பதால், அவர்களை, தொடர்ந்து டி.ஆர்.பி., பணியில் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராமராஜ், தற்போது, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி

""டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார். இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு இணையதளத்திலும் பார்க்கலாம்

தொழில்நுட்பக்கல்வித்துறை சார்பில் கணிணி சான்றிதழ் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவத்தின் சார்பில்  முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடங்கிநடைபெற இருக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம் இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம்

பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு.

பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வுஎழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை, பள்ளிக்கு வரவழைத்து, பெயர் பட்டியல்கள் தயாரிப்பதற்காக,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு


வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!

பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆயிரத்து 800 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பி.எட்., படிக்காத இவர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது.

இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் பணி - உயர்நீதிமன்றம் உத்தரவு

பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை போன்று சரளமாக ஆங்கிலம் பேச தயங்குகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்ள, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர் புராஜெக்ட் 100' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது

தொடக்கக்கல்வித்துறையில் பத்வி உயர்வும்,மேற்படிப்பு படித்ததும் தண்டனையா ? ஆசிரியர்கள் வேதனை

01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள் இன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை பெறவில்லை என்ற காரணத்தினால்  தொடக்கப்பள்ளி தேர்வுநிலை தர ஊதியத்தை (GP 5400) பெறாமல் தர ஊதியம் பட்டதாரி ஆசிரியர்கள் 4600, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 4700 எனகுறைவாக தர ஊதியம் பெற்று வருகின்றனர்.
இவர்கள் பட்டம் படித்து பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறாமல் இருந்திருந்தால் இவர்களும் அவர்களைப்போன்று தர ஊதியம் 5400 பெற்றிருப்பர்
பட்டம் படித்தது தவறா?............. பதவி உயர்வு பெற்றது தண்டனையா............? என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்குமா.. 4(3) விதி படி ஊதிய நிர்ணயம் செய்ய அனுமதித்தால் இப்பதிப்பு விலகி தர ஊதியத்துடன் (5400) கூடிய ஊதிய பாதுகாப்பு கிடைக்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.எனவே அரசு விரைவில்  இவர்கள்  கோரிக்கைக்கு செவிசாய்க்குமா என ஏக்கம்  /

EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.


 CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDING ABOUT EMIS


*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.

*விடுபட்டவர் விபரம் சேர்க்கவும், கூடுதலாக உள்ள தவறான விபரம் நீக்கிடவும் வேண்டும்.

ECS PAY ROLL NEW VERSION RELEASED 9.1.

CLICK HERE TO DOWNLOAD ECS PAY ROLL NEW VERSION 9.1............................... 

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf

பள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

TN GOVT LTR NO.20675 / GE 2 / 2013-1, DATED.01.08.2013 - GOVT ORDER TO STOP ONE SIDE WRITING PRACTICE IN LAB RECORD NOTE BOOKS & ASSIGNMENTS REG ORDER CLICK HERE...

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் படிவம்

வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்களில் தவறுகளைக் குறைப்பதற்காக மாணவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்ட விவரங்களைக் கோரும் உறுதிமொழிப்படிவத்தை மாணவர்களிடம் வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கே.தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி - குடியரசு தின சதுரங்கம் போட்டிகள் நடத்துவதற்கான செயல்திட்டங்களில் மாற்றம் செய்து உத்தரவு

DEE - 2013-14 - REPUBLIC DAY CELEBRATION GAMES REVISED SCHEDULE REG CLICK HERE...

TIME TABLE FOR COMMUNICATIVE ENGLISH TRAINING(Primary) on 24.08.2013

TO DOWNLOAD TIME TABLE FOR COMMUNICATIVE TRAINING CLICK HERE...

அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்  தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

போலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வு போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய(டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 17, 18ம் தேதிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு (டெட்) நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாளை தருவதாக கூறி மோசடி நடந்தது.

காமராசர் பல்கலை: தொலைநிலை பி.எட்., சேர்க்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலை பள்ளியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில அரசு விதிப்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்வு நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.
விண்ணப்பம் மற்று ம்கையேடுகளை பல்கலைக்கழக சேர்க்கை மையத்தில் செப்டம்பர் 6 வரை பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விபரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்லைன் மூலமாகவே பரிமாறப்படுகிறது.

பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த, தரக் கண்காணிப்பு முறைகள் (Quality Management Tool) செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்

click here to download the SSA Guidelines of Executing Quality Management Tool in School to Develop the Educational Level in school and Country

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு

2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூட்டுப்போராட்டத்திற்கு வேட்டு வைப்பதா?

கூட்டு போராட்டத்திற்கு கூவி கூவி நாம அழைத்தால் அதை பகிராமல் சில தோழர்கள் பங்காளி சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டடு முக நூலில் பதிவுகள் இடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாவபப்பட்ட ஆசிரியன் வாழ்வாதரத்திற்கு போராடும்பொழுது வாரிசு சண்டையில் நான் துரோகியா? நீ துரோகியா? என்ற பட்டி மன்றம் நடக்குது. துரோகம் யார் செய்தாலும் அவரவர் மன நிலைக்கே விட்டுவிடுவோம். இனி நடக்கப்போவதை நல்லதாகவே நினைப்போம். அனைவரையும் அரவனைத்து செல்வதுதான் கூட்டு போராட்டத்தின் வெற்றியாக அமையும். கடந்த கால நினைவுகளை அசை போடுவதால் தர்ம சங்கட்டமே மிஞ்சும். ஒரு பக்கம் இயக்க

இரட்டைப்பட்டம் வழக்கு - ஏமாற்றமே!இரட்டை பட்ட வழக்கு இன்று (22.08.2013) விசாரணைக்கு வரவில்லை செவ்வாயன்று (27.08.2013) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்று முதல் அமர்வில் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது. ஏனென்றால் தலைமை நீதிபதி தலைமை செயலகத்தில் மதியம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள செல்வதாலும், மாலையில் நீதி மன்ற வளாகத்தில் நடைபெறும் மற்றொரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாலும் முதல் அமர்வு செயல்படாது என தெரிகிறது.

ஓய்வூதியம் என்பது "அரசு ஊழியரின் சொத்து", அதை அந்த ஊழியரின் மீது நிலுவையிலுள்ள துறைவாரியான மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்காக பறிக்க இயலாது

Observing that gratuity and pension are hard earned benefits of an employee and right to receive pension is in the nature of "property", the Supreme Court has held that this right cannot be taken away from a government employee pending departmental or criminal proceedings.

                "It is an accepted position that gratuity and pension are not the bounties. An employee earns these benefits by dint of his long, continuous, faithful and un-blemished service. It is thus hard earned benefit which accrues to an employee and is in the nature of "property".

சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் சூப்பர் கிரேடு ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.

B.Ed கட் ஆப் மதிப்பெண் நாளை வெளியீடு

12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்படும் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை பிரிவு விண்ணப்பங்களை பரிசீலித்தது. இந்த நிலையில், பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் நாளை (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு= ஒரு வாரத்தில் கீ–ஆன்சர்

ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18–ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது. இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு போலி வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை

இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

பள்ளிகளில் இலவச திட்டங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், லேப்-டாப், நோட்டுப் புத்தகம், சீருடை, காலணி, கணித உபகரணம்,

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின்  விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற விசாரணை குறித்து விவரம் இன்று மாலை  தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய 13/8/13கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 + 4200 தர ஊதியம் வழங்க வேண்டி அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

 கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
                 பொள்ளாச்சி: 13-08-2013 அன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரக்கிலை சார்பான 13/8/13 கோரிக்கை முழக்க போராட்ட புகைப்படம்

51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு

அண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

                           THANKS TO -MR.Thomas Rockland

பள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

CLICK HERE to download TN GOVT LTR NO.20675 / GE 2 / 2013-1, DATED.01.08.2013 - GOVT ORDER TO STOP ONE SIDE WRITING PRACTICE IN LAB RECORD NOTE BOOKS & ASSIGNMENTS REG ORDER

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிரிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 26 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை பயிற்சி.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தலைநகரங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் இணைந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் இடத்தை முடிவு செய்வார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம்

மேல் நிலைத் தேர்வு மற்றும் S S L C பொது தேர்வுகள் ..மார்ச்/ஏப்பரல் 2014-பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் (DECLARATION FORM ) பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

CLICK HERE -12th & 10 th Public Exam 2014 MARCH /APRIL DECLARATION FORM INSTRUCTIONS TO SCHOOL HM'S

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

சதுரங்கம் விளையாடுவது எப்படி ?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஆகவே அனைத்து ஆசிரியர்களும் சதுரங்க விளையாட்டு விளையாடும் முறையினை தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தரவே இந்தப் பதிவு.......
சதுரங்கம் விளையாடும் முறையினை அறிய இங்கே கிளிக் செய்க....

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்


தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது

அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP 750/- வழங்கியது தவறு. பணத்தை அரசு கணக்கில் செலுத்த தணிக்கை குழு அறிக்கை

அறிக்கையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

நன்றி :- திரு முத்துப்பாண்டியன்

GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.

CLICK HERE TO DOWNLOAD - GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS

வேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்!

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.

டி.இ.டி., பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு தேவை: கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு குரூப், 2 வினாத்தாள் அவுட்டானது. இந்தாண்டு, டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடும், கண்காணிப்பும் அவசியம் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டாக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது.

இரட்டைப் பட்டப் படிப்பு மூலம் கூடுதலாக ஆங்கிலம் முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் 2007-2009 வரை 51 பேர் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்-RTI தகவல்.

Bharathiyar University Distance B.Ed Result may 2013

click here to view Bharathiyar University Distance B.Ed Result

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 13/8/13 அன்றைய கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்,,பர்கூர் வட்டார ஆர்பாட்டம் பத்திரிக்கை செய்திகள்



விருத்தாசலம் வட்டாரம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 13/8/13 அன்றைய கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்

மாநில துணைப்பொதுச்செயலர் திரு,வெ.விஜயக்குமார்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

TET - 2013 Paper 1 & Paper 2 - Question & Tentative Key Answers பல்வேறு பயிற்சி மையங்கள் வெளியிட்டுள்ள உத்தேச விடைகள்

Paper 1

Paper 1 - Key Answer - By Ranitetpark

Paper 1 - Key Answer - By NRIAS Academy

Paper 1 - Key Answer - By TheniIAS Academy

Paper 1 - Key Answer - By Arivukadal

Paper 1 - Key Answer - By Puthiya Vidiyal

Paper 1 - Key Answer - By Success

Paper 1 - Key Answer - By Vidiyal, Vellore


Paper 2

Paper 2 - Key Answer - By Ranitetpark

Paper 2 - Key Answer - By NRIAS Academy

Paper 2 - Key Answer - By TheniIAS Academy

Paper 2 - Key Answer - By Arivukadal

Paper 2 - Key Answer - By Puthiya Vidiyal

Paper 2 - Key Answer - By Success

Paper 2 - Key Answer - By Vidiyal, Vellore

Paper 2 - Maths Solution - By Success

ஆசிரியர்கள் மற்ற பணிகளுக்கு அனுமதிப்பதில்லை- RTE சட்டப்படி அறிவிப்பு


Union Minister of State for Human Resource

Development Mr. Shashi Tharoor அவர்களுக்கும்

National Knowledge Commission உயர் அதிகாரிகள்

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

Non teaching duties, such as that of manning poll booths and collecting data for surveys, cuts into the available teaching time and also undermines the professional status of teachers. என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாகவும்,. ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும், அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் -20 சட்டம் மற்றும் ஒழுங்கு - நல்லிணக்க நாள் அனுசரிக்க உத்தரவு.

அரசு முதன்மை செயலர், (பொதுத்துறை ) சென்னை அவர்களின் கடிதம் 22608/ பொது-I / 2013-9 நாள் : 13.08.2013.இல் 20.8.2013 அன்று மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.8.2013 முதல் 03.9.2013 வரையுள்ள காலத்தை நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 20.8.2013 அன்று காலை 11.00 மணிக்கு நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

GOVT LTR NO.22608 / GEN-I / 2013-7, DATED.13.08.2013 - OBSERVANCE OF SADBHAVANA DIWAS 2013 CLICK HERE...


நல்லிணக்க நாள் உறுதிமொழி

நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.

மாணவர்களுக்கான இலவச பொருட்களை பள்ளியில் வழங்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச சீருடையை, நேரிடையாக பள்ளிகளுக்கே வழங்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, ஆண்டுக்கு மூன்று செட் சீருடை, முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், செருப்பு, புத்தக பை, ஜாமன்றி பாக்ஸ் என 14 வகையான இலவச பொருட்களை வழங்கி வருகிறது

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? -மணி.கணேசன் DINAMANI

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?


மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்படாது


"மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது, தற்போதுள்ள, 60 வயதிலிருந்து, 62 ஆக உயர்த்தப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்பட்ட தகவல்களுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன. 

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவமும், பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 
விண்ணப்பங்கள், ஆக.,19 முதல் செப்.,6 வரை, சேர்க்கை மையம், பல்கலை நகர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை -21, என்ற முகவரியில் வழங்கப்படும். 
இத்தகவலை, தொலைநிலைக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விரைவில் "கற்க கசடற'என்ற புதிய மாத இதழ் வெளியிட- பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில்

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்த் தகுதித் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட முடிவு

கீ ஆன்சர்’ எப்போது வெளியிடப்படும்? தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது.

டிட்டோ-ஜேக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உட்பட பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, பிற சங்கங்களுக்கும் அழைப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு 4/8/13 அன்றைய செயற்குழு பிற சங்கங்களுடன் இணைந்து போராட பேச்சுவார்த்தை நடத்த 7 நபர் குழு அமைத்தது.

பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மன்றம் சார்பில் அதன் பொதுச்செயளால்ர் திரு மிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது

 தமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு வரை இந்த முறை அமலில் உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது. அதற்கான பாடப்புத்தகங்கள் இப்போதே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

TRB – TET – PAPER II – Social Science / Maths / Science Tentative Answer Keys

To Download TRB TET - Paper - II (Social Science) Answer Keys Click Here...

To Download TRB TET - Paper - II Maths & Science Answer Keys Click Here...
TO DOWNLOAD TNTET 2013 - PAPER - I EXAM ON 17.08.2013 TENTATIVE KEYS WITH MATHS SOLUTION CLICK HERE...

web stats

web stats