rp

Blogging Tips 2017

மக்களவையில் நிறைவேறியது ஆதார் மசோதா

‘ஆதார் மசோதா – 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இம்மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

வெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்!

செ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் சென்னை மாவட்ட நிர்வாகிகள்

திரு க.சாந்தகுமார்,தலைமை நிலையசெயலர் மற்றும் சென்னை மாவட்ட செயலர்,திரு.செல்லசாமிகருமாரன்,மாவட்டதலைவர் மற்றும் திரு மோகன் குமார் மாவட்ட பொருளாளர் ஆகியோர்

செ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மாநிலத்துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் நினைவுப்பரிசு வழங்கி ஆசிபெற்றபோது


கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பரிசு வழங்கிய காட்சி

HOSUR LEADERS Mr PONNAGESH Mr.JANARDHAN Mr VENUGOPAL and Mr GOPALAKRISHNAN HOHOURING THE GEN SEC

செ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் திருப்பூர் மாவட்டம்

செ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள்

செ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மதுரை மாவட்ட நிர்வாகிகள்

CPS நண்பர்களே! உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அன்பார்ந்த CPS நண்பர்களே!
Welcome to the Site
http://218.248.44.123/auto_cps/public/index.php


உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.அவற்றை அனைவரும்பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுச் செயலாளர் செமு அவர்களின் 80 ஆவது அகவை விழா நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள்

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் விழாவில் தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பாக நினைவு பரிசு வழங்கிய போது..இடம் நாமக்கல்



10/03/2016 அன்று தனது 80 அவது பிறந்தநாளைக்கொண்டாடும் நம்து பொதுசெயலாளர்திரு செ.முத்துசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


  • இன்றைய ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடியும்,மூத்த பொதுசெயலருமானவர்,
  • வாழும் ஆசிரியர் இயக்க வரலாறு
  • ஆசிரியர் இனப்போராளி
  • சட்டமேலவையில் வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் “ஆசிரியர் பிரச்சினைக்காக தொடங்கி ஆசிரியர் பிரச்சினைக்களில் தனது பேச்சினை முடிக்கும் வல்லவர்” என கலைஞர் அவர்களால் புகழப்பட்டவர்,
  • கடந்த 56ஆஅண்டுகளாக இடைவிடாது சங்கப்பணியாற்றி வருபவர்
  • தனது இளமையின் ரகசியம் ஆசிரியர்களுக்காக உழைப்பதே என உறுதியோடு இருப்பவர்
  • என்கடன் ஆசிரியர்களுக்கு உழைப்பதே என வாழும்
  • நமது பொதுசெயலர் திருமிகுசெ.முத்துசாமி அவர்கள்  பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வாழ்க
வாழ்த்தும்
மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இன்று சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி முகாமை ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.

அதற்குப் பிறகு அவர் பேசியதாவது:

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு கிடைக்குமா?

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

PGTRB:பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

SLAS 2015/2016- 5 TH STD - ALL DISTRICT RESULTS

அரசு பள்ளிகளில் SLAS ல் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்

தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார்.

பட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..!அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அவலம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறுபுகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. 3 ஆண்டு இளநிலைப் படிப்பை 8 ஆண்டுகள் வரை படித்தோரும், ஒவ்வொரு பாடமாக எழுதித் தேர்ச்சி பெற்று, ஏறக்குறைய 15 மதிப்பெண் சான்றிதழ்கள் வரை வைத்துள்ளோரும் கூட பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அகஇ - 2015-16 ஆண்டிற்கு தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு குருவள மைய பயிற்சி "DISCUSSION ON CHILDREN ACHIEVEMENT" என்ற தலைப்பில் 19.03.2016 அன்று நடைபெறவுள்ளது

தமிழகத்தை வென்ற பீகார் போட்டி தேர்வில் பின்னடைவு

தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சிதிட்டங்கள் என்று தமிழகம் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள், இந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னோடி திட்டங்களாகவே உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.

அரசு உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.

கண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணி துவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர்.

அதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுசெயலரின் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக

Click here part-1
Click here part-2

A.G Office given suffix ID for Panchayat Union and Municipal School Teachers TPF account,ask to implement from 01/04/2016

aaaaaa

10/03/2016அன்று 80 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் நமது பொதுசெயலர் திருசெ.மு அவர்களுக்கு வாழ்த்துப்பா


தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தலைப்பு குறித்து (Pay Head ) RTI- தகவல்..

SLAS 2015-16 Result Overall for Tamilnadu state.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
         மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.

இ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து இ.பி.எப். வட்டிக்கு வரிவிதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டுள்ளார்.

பி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு

பி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.
2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு

விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு  பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

தேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு, பணிநியமன ஆணை பெற்றும், பணிக்கு செல்லாமல் பல ஆசிரியர்கள் அலட்சியம் காட்டிய சம்பவம்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிக்குவராமல் இருந்த ஆசிரியர்களிடமிருந்து விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவது கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை


10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்

பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

 வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

       இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
       

10th Hall Ticket download - INSTRUCTION

பள்ளிக்கல்வி - 01.01.2015ன் நிலவரப்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

DSE - BT / PGT TO HSHM PROMOTION AS ON 01.01.2015 PANEL - PROCEEDING CLICK HERE...

DSE - BT / PGT TO HSHM PROMOTION AS ON 01.01.2015 PROMOTED HMs LIST CLICK HERE...

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி

பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

         நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று(07-03-16) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

 'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

           பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள் துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பல மணிநேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை : பள்ளி கல்வித்துறை

தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்

இ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா? பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியாகிறது

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்றும், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின்போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

web stats

web stats