rp

Blogging Tips 2017

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது.

பதவி உயர்வு குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. TAMIL VERSION

CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. -ENGLISH VERSION

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: தெரசாவுக்குப்பின் ஒரு கவுரவம்

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.

அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

CLICK HERE-DA -G.O.No.245 Dt: October 10, 2014  -TAMIL VERSION
CLICK HERE-ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2014 – Orders – Issued.-ENGLISH

7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு -தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம்

அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு.

தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரை வில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் கள் மாதிரிமையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்வது வழக்கம், பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வித் தகுதிகளை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு


கல்விச் சுற்றுலா செல்பவர்கள் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லும் பள்ளிகள் அது தொடர்பாக எழுத்துப் பூர்வமான தகவலை மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அவமதிப்பு வழக்கில் கல்வி அலுவலர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

கோர்ட் அவமதிப்பு வழக்கில், கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர், குழித்துறை கல்வி மாவட்ட அலுவலருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி வாவரை செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலை பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு: பள்ளியில் துப்புரவு பணி யாளராக சுசிலால் பணிபுரிந்தார். அவரது நியமனத்தை குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் ரத்து செய்தார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி,' சுசிலாலுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். பணப் பலன்களை அரசு நிதி உதவி மூலம் வழங்க வேண்டும்,' என 2007 ல் உத்தரவிட்டார்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலை தொடர உத்தரவு

அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனு: நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது.

அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

"பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு; இதன் மூலம் அகவிலைப்பபடி 100லிருந்து 107% ஆக உயர்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜுலை முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு

G.O.No.245 Dt: October 10, 2014 - படிகள் - அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன...

G.O.No.245 Dt: October 10, 2014 - ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2014 – Orders Click Here...

IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014

http://ignou.ac.in/userfiles/bach_.pdf

ஆய்வக உதவியாளரை தேர்வு செய்ய சி.இ.ஓ., தலைமையில் குழு : நேர்முக தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கீடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணிஇடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மூன்று ஆண்டு பணி நியமனம் தொடர்பான வழிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கல்வி மாவட்ட அளவில், மூன்று ஆண்டு கள், முறையாக பணி முடித்த, பதிவறை எழுத்தர் (ரெக்கார்டு கிளர்க்) மற்றும் அடிப்படை பணியாளர்களுள், ஆய்வக உதவியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 10ம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்று உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியலை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் தயாரிக்க வேண்டும்.

மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்க உத்தரவு

சென்னையில் 'டெங்கு, மலேரியா, டைபாய்டு' போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக, பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது பருவமழை காலம் துவங்க உள்ளதால், 'டெங்கு, மலேரியா' காய்ச்சல் பாதிப்புகள் பரவும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சல் பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால் 10 லட்சம் நிவாரண உதவி

தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இறந்தால், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும். இந்த முகாமில், 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இருப்பிடத்தை மாற்றுவதற்கும் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி மாதம் 25ம் தேதி வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் 15ல் வெளியீடு: வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள்

சென்னைக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிகள் அடங்கியுள்ள மண்டல அலுவலகங்களில்வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது .இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 2015 ஐ மைய நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும்

ஓய்வூதியம் - சலுகையா, உரிமையா?


“நீங்கள் வேலை செய்த காலத்தில் உங் களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற பிறகு இப்போது எந்த வேலையும் செய்வதில்லை. பிறகு ஏன் உங்களுக்கு இப்போதும் சம்பளம் (ஓய்வூதியம்) கொடுக்க வேண்டும்?”இப்படி ஒரு கேள்வி ஒரு சிலரால் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதற்குமுந்தைய பாஜக 2 அரசும், தற்போதைய பாஜகஅரசும், ஓய்வூதியத் திட்டத்தைச் சீரழிப்பதற் குச் சொல்லிவரும் புள்ளுகளைக் கேட்டுக்கேட்டுத் தான் ஒரு சிலர் இப்படிப் பேசி வருகிறார்கள்.“ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அர சுக்கு நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.

மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. 
 
http://attendance.gov.in/
 
 அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!

வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் சத்தம் கேட்டு, சிறிது நேரத்துக்கு பின் கதவுகளை திறந்து வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து எழுந்த புகாரின்பேரில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி சுந்தரி மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பள்ளி முடிந்த பின் வகுப்பறைகளை, அந்தந்த ஆசிரியர்கள் பூட்டுவதற்கு பதிலாக, மாணவர்களே பூட்டிச் சென்ற விவரம் தெரிய வந்தது.

ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளித் தாளாளர் மற்றும் செயலர் என்.பாலசெüந்தரி. அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எம்.ஏ.,எம்.எட்., படித்ததற்காக 3 ஆவது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலசெüந்தரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு 3ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்

DEE - EDUCATIONAL TRIP - SAFETY INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு

DO.LETTER.NO.29534 / GE(2) / 2014-1, DATED.29.09.2014 - SCHOOL EDUCATION - SERVICE MATTERS - TAKING IMMEDIATE ACTION THE COURT CASES - STREAMLINING FOR QUICK DISPOSAL OF THE FILES REG ORDER CLICK HERE...

சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு

GO.(MS).NO.154 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.29.09.2014 - ACT - RTE 2009 - TEACHERS GRIEVANCE REDRESSAL NOTIFIED - ORDER CLICK HERE...

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL AEEOs TO DEDUCT LIC / RD / SOCIETY LOAN FROM EVERY MONTH TEACHERS SALARY & PAY THROUGH ECS TO CONCERN OFFICES REG PROC CLICK HERE...

பள்ளிகள் இன்று இயங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்



பள்ளிகள் இன்று இயங்க அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன் நேற்று மாலை 6 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நீதித்துறைக்கும் நீதிபதிக்கு எதிராகவும் போராட்டத்தை அதிமுகவினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பள்ளிகளை மூட அரசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது. அரசு மவுனம் காக்கிறது. நீதிமன்றம் தலையிட்டு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
உடனே அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆஜராகி, ‘‘பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.

விலையில்லா பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இன்றே இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து 26ம் தேதியுடன் முடிந்தன. 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 6ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் 6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகள் இயங்க அரசுக்கு ஐகோர்ட் உத்திரவு

பள்ளிகளை மூடும் போராட்டம் வாபஸ் ஏன்

புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இரானி

தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது குறித்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு.



தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதின "மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள்" நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள

8-ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்- திட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல்-நான்கு நாட்கள் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014
முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்-

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்-

பருவதேர்வுக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டபடி காலண்டுதேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

.நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும் -தனியார் பள்ளிகூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் அறிவிப்பு.ஆயினும் திட்டமிட்டபடி பள்ளிகளின் தாளாளர்களின் உண்ணாவிரதம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

'நடுநிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கூடாது; பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் இடையே கோரிக்கை வலுத்துள்ளது.

தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக, 49 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். துவக்கத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது வழக்கமாக இருந்தது. சில ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் பட்டப்படிப்பு, பி.எட்., கல்வித்தகுதி பெறும்போது பட்டதாரி ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுகின்றனர்.

அக்டோபர் 7 பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்


“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 7.10.2014 (செவ்வாய்க்கிழமை) இயங்காது என்று அறிவிக்கப்படுகிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர், பெற்றோர்களிடத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு ஒரு சங்கம் “பள்ளி இயங்காது என அறிவிக்கப்படுகிறது” என்ற அறிவிப்பை வெளியிடவதற்கு சட்டத்த்தில் இடம் உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஒரு தனியார் பள்ளி விடுமுறை அறிவிக்க வேண்டுமானால் அப்பள்ளியின் முதல்வர் தகுந்த காராணங்களை பள்ளிக்கல்வி அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவரின் ஒப்புதலோடு தான் விடுமுறை அறிவிப்பை வெளியிட முடியும்.

தரம் உயர்ந்த மேல்நிலை பள்ளியில் படிக்க ஆளில்லை: மாணவருக்கு டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவு.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர்எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அக்.7ல் தனியார் பள்ளிகள் மூட முடிவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்.

DA Announcement for TN Government Staff Awaited…

On September 18, 2014, the Ministry of Finance announced that the Central Government employees were to get Dearness Allowance of 7% from July onwards. Following the announcement, various state governments too have been announcing Dearness Allowance of 7% to its staff.

It is a well known fact that the Tamil Nadu state government is in a crisis following the conviction of J. Jayalalithaa in the disproportionate assets case. O. Paneerselvam has been chosen as the new Chief Minister of the state.
More than 18 lakh state government employees, pensioners and their dependents are eagerly waiting for the Dearness Allowance announcement from the new Chief Minister. They are wondering if the new government would grant the arrears and release the Government Order before Diwali this year.
Let us hope that the new Chief Minister makes their dreams come true on the occasion of Diwali and announces a 7% DA this time.

web stats

web stats