Friday, 10 October 2014

7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு -தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம்

அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats