Tuesday, 29 April 2014

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ், பிடிஎஸ் அனுமதி சேர்க்கை: மே.2-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2014-15 ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம் வருகிற மே.2-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.


ஜூன்.10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1500 ஆகும். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறும். விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழக கேஷ் கவுண்டர் மற்றும் அனைத்து தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களிலும் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats