Sunday, 15 September 2013

"நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்'

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை (16ம் தேதி) ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என தவறான தகவல் பரப்பபட்டது. இந்த தகவலால் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் நாளை (16ம் தேதி) மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்,  மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். வழக்கமான அனைத்து பணிகளும் பள்ளிகளில் நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு மட்டுமே நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats