Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து அனைத்து சங்கங்களும் இணைந்து போராடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு சங்கங்கள்  தனித்தனியாக பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவித்தன. ஆனால் தனிப்பட்ட சங்க போராட்டம் பெரியளவில் வெற்றியடைய வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில் 4/8/13 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கூட்டு போராட்டத்திற்க்காக அழைப்பு விடுக்க 5 நபர் குழு அமைத்து அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தது.
இதையடுத்து 5/8/13 தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் அனைத்து சங்கங்கள் இணைந்து போராட அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற சங்கங்களும் இணைந்து போராட விரைவில் அழைப்பு விடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விரைவில் அனைத்து சங்கங்களும் இணைந்து, அடுத்தகட்ட கூட்டுப் போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இடைநிலை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats