Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்

அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல் பருவத்துக்கான புத்தகங்களில் பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே இந்தப் புத்தகங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இருந்தாலும், அதில் உள்ள சிறிய குறைகள் கூட சரிசெய்யப்பட்டு புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் தலைமையில் ஒவ்வொரு பாடத்துக்கும் பிழைகள் நீக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்கள், பாட நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிழை திருத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு முதல் பருவத்துக்கான புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் சில வாரங்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment


web stats

web stats