Tuesday, 14 October 2014

TNPSC: Group IV Services : Notification Published.

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply Online Apply Online
Application Edit Application Edit
Challan Reprint Challan Reprint
Application Reprint Application Reprint
               இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செவ்வாய்க்கிழமை (அக்.14) வெளியிடுகிறது.
              இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 4 ஆயிரத்து 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை அறிவிக்கிறது. நிகழாண்டு அதிகபட்சமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றன.
கல்வித் தகுதி- தேர்வு தேதி: குரூப் 4 தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். குறைந்தபட்ச வயது 18. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 12-ஆம் தேதி. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வழியாகவே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்டத் தலைமையிடங்கள், தாலுகாக்கள் என மொத்தம் 244 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
          இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அவர்களது பதிவெண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவு செய்து, உரிய விவரங்களைப் பதிவிட வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தவர்கள் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே அவர் வகுப்புக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள், அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்த வேண்டும். இணையதளம் மூலமும் செலுத்தலாம். இதுகுறித்த சந்தேகங்களை 044-2533285, 25332833, கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 1002-இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats