Monday, 11 November 2013

ஜம்முவில் பள்ளி ஆசிரியர்கள் 40 பேர் பணியிடை நீக்கம்

பள்ளியில் வருகையை பதிவு செய்துவிட்டு பள்ளியில் இல்லாத ஆசிரியர்கள் 40 பேரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின் படி ஒரு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளியில் வருகைப் பதிவை செய்துவிட்டு, பள்ளியில் இல்லாமல் வெளியே சென்று விட்ட ஆசிரியர்கள் பலரும் சிக்கினர். ஆசிரியர் உட்பட 9 பேர் இருக்கும் ஒரு பள்ளியில் 4 பேர் மட்டுமே இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பள்ளியில் இல்லாத ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்கள் என 40 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats