Wednesday, 2 July 2014

தேர்வு கட்டணத்தில் முறைகேடு கல்வித்துறை அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(45). கடந்த 2012-13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ-பார்ம் (மின்னணு பதிவு) மூலம் மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்டது போன்று தேர்வு கட்டணத்தில் முறைகேடு செய்து சந்திரசேகரன் சென்னை பள்ளி கல்வித்துறைக்கு கணக்கு அணுப்பியுள்ளார். இதற்கிடையே கடலூர் மாவட்ட கருவூலத்துறை தங்கள் கணக்கிற்கு வந்து சேரவேண்டிய கல்வித்துறையின் பணத்தொகை குறைந்துள்ளது குறித்து சென்னை பள்ளி கல்வித்துறைக்கு விளக்கம் கேட்டது.


இது தொடர்பாக கோப்புகளை சென்னை பள்ளிக் கல்வித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அலுவலர் சந்திரசேகரன், போலியாக மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்ட கணக்கை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் ரூ.15 லட்சம் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையின் பேரில் கடலூர் கல்வி அலுவலக உதவி பிரிவு அலுவலர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats