Saturday, 5 April 2014

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர் ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அவசரத்தகவல்?

தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3 மதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே.
அதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

.
இது குறித்து தமிழக தலைமைச்செயலக வட்டாரத்தில் நிலவும் தகவலின் படி அனைத்துதுறை தலைமை கட்கும் நிலுவைத்தொகையினை உடனடியாக அதாவது வரும் புதன் மாலைக்குள்ளாக அவரவர் வங்கிக் கணக்கில் சேரும் விதத்தில் உடனடியான நடவடிக்கை மேரற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மீது தனிக்கவனம் செலுத்தப்படுவதாகவும்,கரூவூல அலுவலகளுக்கு அகவிலைப்படி நிலுவை ஊதியத்தைக்கொரி தக்கல் செய்யப்படும் பட்டியல்களை தாமதமின்றி உடனே பாஸ் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
தாமதமின்றி பட்டியல் தயாரித்து உடன் கருவூலத்தில் சமர்பிக்க அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அவரவர் உயர் அலுவலர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக் அறிகிறோம்.
எப்படியோ மக்களவை தேர்தலால் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை உடனே பணமாககிடைப்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats