5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 2 January 2014

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர்
ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.


பிறபாடங்களுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தபொழுது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை,பணிஅனுபவம் ஆகியவற்றுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்த்து பெற்ற மொத்தமதிப்பெண் விவரத்தை தேர்வர்களிடம் டிஆர்பி வழங்கியது ஆனால் தமிழ் தேர்வர்களுக்கு அவ்வாறு சான்று எதுவும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்வர்கள் எழுத்து தேர்வில் 150 க்கு பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.

No comments:

Post a Comment


web stats

web stats