Wednesday, 5 March 2014

மார்ச்-6 வேலை நிறுத்தப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பீர்-போராட்டத்தினால் மாணவர்களின் கற்றலக்கு பதிப்பு இல்லை-ஆசிரியர்களுக்கு நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி வேண்டுகோள்

டிட்டோஜாக் சார்பாக 7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச்-6 ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல்-ஏப்ரல்-24 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
நேற்றைய இரவு மூத்த வழக்கறிஞ்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை  நடத்தப்பட்டது .பின்னர்  போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முந்தைய கால போராட்ட வரலாறு

இதேபோன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் -புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்,ஆட்சிக்காலத்திலும், முன்னாள் முதல்வர்,டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்திலும், .அதேபோன்று தற்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக்காலத்திலும், போராட்டங்கள் நடத்தப்பட்டன.


அக்காலங்களில் அரசு ஊதிய பிடித்தம் செய்ய ஆணையிட்டன.ஆசிரியர்பணி வருடத்திற்கு 220 நாட்கள் கற்பித்தல் பணி செய்யவேண்டும். எனவே இந்த நாளினை  பிறிதொரு நாளில் வேலை செய்து ஈடுசெய்வதாக எழுதிக்கொடுத்து,அவ்வாறு ஈடுசெய்தும்  பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை மேலே சொல்லப்பட்ட முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் பெற்ற வரலாறு  நடைபெற்றுள்ளன

அதேபோன்று தற்போது நடைபெற உள்ள போராட்டத்திற்கான நாளினை வேறொரு நாளில் நாம் கற்பித்தல் பணி செய்து ஈடுகட்டி ஊதியத்தை பெற வழிவகை உள்ளது.

மாணவர்களின் கற்றலுக்கு  குந்தகம் இல்லை

மேலும் நடைபெற உள்ள போராட்டத்திற்கான் நாளினை வேறொரு நாளில் நாம் கற்பித்தல் பணி செய்து ஈடுகட்டி  விடுவோம் என்பதால்  மாணவர்களின் கல்வி கற்றலுக்கு குந்தகம் விளையாது.என பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சொல்லவும்

 வேண்டுகோள்
எனவே அரசின் கவனம் பெற நடைபெறும்  மார்ச்-6 ஒருநாள் வாலைநிறுத்தப் போரட்டத்தில்  ஆசிரியர்கள் அதிகப்படியான எண்னிக்கையில் பங்கேற்க நமது பொதுச்செயலரும் டிட்டோஜாக் உஅயர்மட்டக்குழு உருப்பினருமான மதிப்புமிகு செ.முத்துசாமி Ex.M.L.C அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats